For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

76 வயசுல பிளஸ் 2 படிக்கிற பெண் கேட்குதா? 50 பெண்களுக்கு மேல் சீரழித்த தொழிலதிபர்

பிளஸ் 2 படிககிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

12 வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் 76 வயதுடைய தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இதுபோன்று 50 க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

pocso act

ஆனால் இந்த விவகாரம் அதோடு மட்டும் முடிந்துவிடவில்லை. அந்த பெண்ணுடன் அவர் இருந்த விடீயோ காட்சிகள் வெளியான நிலையில் அதன் பின்னணியில் ஒரு கூட்டமே இருந்தது தெரிய வந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன? இது எங்கே நடந்தது என்ற விஷயங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இந்த முதியவர்

யார் இந்த முதியவர்

76 நிரம்பிய தொழிலதிபர் தான் நடராஜன் என்பவர். சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் உள்ள உடையாம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் இரு சக்கர வாகன டீலராக இருந்து வருகிறார். இந்த நடராஜனுக்கு கிட்டதட்ட சொந்தமாக 30 க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்.

MOST READ: எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா?.

விடியோ கோட்சிகள்

விடியோ கோட்சிகள்

50 க்கும் மேற்பட்ட பெண்களோடு தவறான பழக்கம் வைத்திருந்ததாக இவர் மீது புகார்கள் சொல்லப்படுகின்றன. தொழிலதிபரான இவரிடம் பணம் பறிக்க செய்த சதித் திட்டத்தில் இவர் வீடியோவில் வசமாக சிக்கியிருக்கிறார்.

யார் இந்த பிளஸ் 2 பெண்

யார் இந்த பிளஸ் 2 பெண்

நடராஜன் வசித்து வரும் பகுதிக்கு அருகில் இருப்பவர் தான் செல்வி. இவருடைய கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். தன் கணவன் மீது மிகவும் அன்பாக இருந்த செல்வி மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார். அதனையடுத்து செல்வியின் மகள் அதே பகுதியில் உள்ள தன்னுடைய சித்தியின் வீட்டில் அவருடைய அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவர் 12 ஆம் வகுப்பும் படித்து வருகிறார்.

வீட்டு வேலை

வீட்டு வேலை

குடும்ப சூழ்நிலையின் காரணமாக சில வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலையும் செய்து வந்தார் அந்த பெண். காலையிலும் பள்ளிக்குச் செல்லும் முன்பும் மாலையில் பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டு வேலைக்குச் சென்று அதிலிருந்து வரும் பணத்தில் தான் தன்னுடைய படிப்பைக் கவனித்துக் கொண்டார். அப்படி அந்த பெண் தொழிலதிபர் நடராஜன் வீட்டிலும் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

MOST READ: பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்

மோசடி கும்பல்

மோசடி கும்பல்

பெரிய ஆட்கள் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஒன்று நடராஜனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை வைத்து மிரட்டியே பணத்தைக் கறந்து விடவேண்டும் என்று நினைத்தார்கள். இதற்கு திட்டம் தீட்டுகிற பொழுது தான், நடராஜன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை சந்தித்து மிரட்டியிருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணும் உண்மையை சொல்லி விட்டார். பல நாட்களாக அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.

விடியோ மேக்கிங்

விடியோ மேக்கிங்

இதையே துருப்புச் சீட்டாக வைத்து, அந்த ஏழைப் பெண்ணுக்கும் பணத்தாசை காட்டியிருக்கிறது அந்த கும்பல். நீ அடுத்த முறை முதியவருடன் உறவில் இருக்கும்போது அதை வீடியோவா பதிவு செய்துவிடு. அதை வைத்து பல லட்சங்கள் சம்பாதித்து விடலாம் என்று ஆசை காட்டவே அந்த பெண்ணும் அவ்வாறே விடியோ எடுத்திருக்கிறார்.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

அந்த வீடியோ எடுக்கப்பட்ட பின், அந்த கும்பல் நடராஜனை சந்தித்து 25 லட்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் நடராஜன் பண தர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் மூலம், நடராஜன் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

MOST READ: பிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...

விசாரணை

விசாரணை

நடராஜனும் அந்த பெண்ணும் இருக்கும் வீடியோ வெளிவந்த நிலையில், அது வைரலாகி விட்டது. அந்த வீடியோவில் பார்த்தால் அந்த பெண் விருப்பத்துடன் தான் நடராஜன் உறவில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் தான் ஏழைப் பெண்களுக்கு பண ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதும் அதை வீடியோ எடுத்து பணம் தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டும் கும்பலையும் கண்டுபிடிக்க வேண்டும் அந்த பகுதி மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

76 years old business man assualt 12 student, he was arrested pocso act

76 years ols man sexually assaulting a minor girl, when she came for a pooja to be performed by him. He was arrested under the Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012.
Story first published: Friday, April 5, 2019, 13:07 [IST]
Desktop Bottom Promotion