Just In
- 29 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி கார பரிசாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்த இளைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது எல்லோருக்குமே தெரியும். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்து ரசிப்பார்கள். அப்படி விளையாட்டை இடையில் பீட்டா நிறுவனம் தொடுத்த வழக்கால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழகம் பல போராட்டங்களைக் கண்டது.
அதன்பின் மெரினா புரட்சி என்றும் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்பு, மக்கள் அரசை வெற்றி கொண்டது. அதன்பின் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியது.
மதுரையும் ஜல்லிக்கட்டும்
தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதிலும் சரி, விளையாடுவதிலும் போட்டி நடத்துவதிலும் முதன்மை வகிப்பது என்றால், அது நம்ம மதுரை தாங்க. பொங்கல் வந்துட்டா போதும். முதல் நாள் அவனியாபுரத்தில் ஆரம்பிக்கும், அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு என்று ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் இருக்கும். இன்னும் நம்முடைய பாரம்பரியமும் மண் மணமும் மாறாமல் பொங்கல் கொண்டாடுவது என்றால் அது மதுரையில் தான். சரி. விசயத்துக்கு வருவோம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
கடந்த வியாழக்கிழமை காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 729 காளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட காளைகளில் 697 காளைகள் பிடிபட்டன. மற்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் காளைகளின் வலிமைக்கு ஈடுகொடுத்து நம்முடைய இளைஞர் பட்டாளமும் காளையை விளையாடத் தயாராகினர். அப்படி விளையாடியதில் ஒரு 23 வயது இளைஞன் மட்டும் தனி ஆளாக 15 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதுபற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...
சிறந்த காளை
யாராலும் தொடக் கூடி முடியாத அளவுக்கு மைதானத்தில் சும்மா துள்ளி குதிச்சு விளையாண்ட நம்ம பரமப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை தாங்க சிறந்த காளைன்னு அறிவிக்கப்பட்டுச்சு. அறிவிப்புனாலும் அறிவிப்பு அப்படி ஒரு அறிவிப்பு. சும்மா இல்லங்க. அந்த காளைக்கு பரிசாக ஒரு கார். இதவிட அந்த காளையை வளர்த்தவருக்கு வேறு என்ன அந்த மாடு செய்ய முடியும் சொல்லுங்க.
பரிசு அறிவிப்பு
சிறந்த காளை அடக்கும் வீரனுக்கு ஒரு காரும் அதேபோல் யாராலும் அடக்க முடியாத சீறி வரும் காளைகளில் சிறப்பாக விளையாடும் காளைக்கு ஒரு காரும் என முதல்வர், துணை முதல்வர் சார்பாக பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க
15 காளை அடக்கிய வீரன்
23 வயதே ஆன ரஞ்சித் குமார் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னுயிரையே துச்சமாக மதித்து 15 காளைகளை அடக்கியுள்ளார். இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை. இவர் அவனியாபுரத்தை சேர்ந்தவர்.
மற்ற வேறு சில ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று நிறைய பழங்காநத்தம் ஜல்லிக்கட்டில் 19 மாடுகள் பிடித்து இரண்டாம் இடத்தையும் நெல்லிமுள்ளியில் 6 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தையும் தற்போது அலங்காநல்லூரில் 15 காளைகளைப் பிடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.