Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி கார பரிசாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்த இளைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது எல்லோருக்குமே தெரியும். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்து ரசிப்பார்கள். அப்படி விளையாட்டை இடையில் பீட்டா நிறுவனம் தொடுத்த வழக்கால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழகம் பல போராட்டங்களைக் கண்டது.

அதன்பின் மெரினா புரட்சி என்றும் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்பு, மக்கள் அரசை வெற்றி கொண்டது. அதன்பின் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியது.

மதுரையும் ஜல்லிக்கட்டும்
தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதிலும் சரி, விளையாடுவதிலும் போட்டி நடத்துவதிலும் முதன்மை வகிப்பது என்றால், அது நம்ம மதுரை தாங்க. பொங்கல் வந்துட்டா போதும். முதல் நாள் அவனியாபுரத்தில் ஆரம்பிக்கும், அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு என்று ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் இருக்கும். இன்னும் நம்முடைய பாரம்பரியமும் மண் மணமும் மாறாமல் பொங்கல் கொண்டாடுவது என்றால் அது மதுரையில் தான். சரி. விசயத்துக்கு வருவோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
கடந்த வியாழக்கிழமை காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 729 காளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட காளைகளில் 697 காளைகள் பிடிபட்டன. மற்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் காளைகளின் வலிமைக்கு ஈடுகொடுத்து நம்முடைய இளைஞர் பட்டாளமும் காளையை விளையாடத் தயாராகினர். அப்படி விளையாடியதில் ஒரு 23 வயது இளைஞன் மட்டும் தனி ஆளாக 15 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதுபற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சிறந்த காளை
யாராலும் தொடக் கூடி முடியாத அளவுக்கு மைதானத்தில் சும்மா துள்ளி குதிச்சு விளையாண்ட நம்ம பரமப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை தாங்க சிறந்த காளைன்னு அறிவிக்கப்பட்டுச்சு. அறிவிப்புனாலும் அறிவிப்பு அப்படி ஒரு அறிவிப்பு. சும்மா இல்லங்க. அந்த காளைக்கு பரிசாக ஒரு கார். இதவிட அந்த காளையை வளர்த்தவருக்கு வேறு என்ன அந்த மாடு செய்ய முடியும் சொல்லுங்க.

பரிசு அறிவிப்பு
சிறந்த காளை அடக்கும் வீரனுக்கு ஒரு காரும் அதேபோல் யாராலும் அடக்க முடியாத சீறி வரும் காளைகளில் சிறப்பாக விளையாடும் காளைக்கு ஒரு காரும் என முதல்வர், துணை முதல்வர் சார்பாக பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

15 காளை அடக்கிய வீரன்
23 வயதே ஆன ரஞ்சித் குமார் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னுயிரையே துச்சமாக மதித்து 15 காளைகளை அடக்கியுள்ளார். இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை. இவர் அவனியாபுரத்தை சேர்ந்தவர்.
மற்ற வேறு சில ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று நிறைய பழங்காநத்தம் ஜல்லிக்கட்டில் 19 மாடுகள் பிடித்து இரண்டாம் இடத்தையும் நெல்லிமுள்ளியில் 6 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தையும் தற்போது அலங்காநல்லூரில் 15 காளைகளைப் பிடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.



Click it and Unblock the Notifications