Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
உண்மையில் காலை 3 மணிதான் பேய்களின் நேரமாம் ஏன் தெரியுமா?
நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென நடுஇரவில் வியர்த்து எழுந்து பார்த்தால் அப்பொழுது நேரம் 3 மணியாக இருந்தால் உங்கள் நிழலில் கூட ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்.
தூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்த அதேசமயம் அவசியமான ஒன்றாகும். பெரும்பாலும் தூங்க ஆரம்பித்துவிட்டால் அடுத்தநாள் காலைதான் பலரும் எழுந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது மாறிவரும் வாழ்க்கை முறையில் இரவு விழித்திருப்பதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். உங்களுக்கும் அந்த பழக்கம் இருந்தாலும் விழித்திருக்கவோ அல்லது எழவோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த நேரம் சாத்தானின் நேரம் என்றழைக்கப்படுகிறது.

அந்த நேரம் அதிகாலை 3 மணி ஆகும். நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென நடுஇரவில் வியர்த்து எழுந்து பார்த்தால் அப்பொழுது நேரம் 3 மணியாக இருந்தால் உங்கள் நிழலில் கூட ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். நீங்கள் விடும் மூச்சுக்காற்றில் கூட பயம் கலந்திருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் தீயசக்திகளின் சக்தி பலமடங்கு அதிகரித்திருக்கும். இந்த சாத்தான் நேரம் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏன் இந்த நேரம்?
அதிகாலை 3 மணியானது சாத்தானின் நேரமாக கருதப்படுகிறது. அதன்படி நரகத்திற்கு செல்லாத தீயசக்திகளும், ஆன்மாக்களும் இந்த நேரத்தில் அவை அதிக சக்தியுடன் இருக்கும். இந்த நேரத்தில் முழித்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

3 முதல் 4 மணி வரை
அதிகாலை 3 மணிக்கு பேய்களின் நடவடிக்கைகளும், நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இது 3 மணி முதல் 4 மணி வரை நீடிக்கும். இது உலகம் முழுவதும் பேய்களின் நேரமாக கருதப்படுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டது
மேற்கு நாடுகளின் படி இயேசு சிலுவையில் அறையப்பட்டது பகல் 3 மணி என கூறப்படுகிறது. தற்போது இது தெய்வீகமான நேரமாக கருதப்படுகிறது. சரியாக 12 மணி நேரம் கழித்து அதிகாலை 3 மணிக்கு சாத்தான்களின் சக்தி அதிகரிக்கிறது.

சடங்குகள்
அதிகாலை 3 மணி என்பது பல்வேறு சடங்குகளும், சூனியங்களும், ஏவல்களும் செய்யக்கூடிய நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் அவர்களையாரும் பார்க்க இயலாது அதேசமயம் அவர்கள் வணங்கும் தீயசக்திகளும் முழுபலத்துடன் இருப்பார்கள். பல படங்களில் சரியாக 3 மணிக்கு பேய் வருவது போல காட்சி இருக்கும். குறிப்பாக பிரபலமான கான்ஜுரிங்க் படத்தில் சரியாக 3 மணிக்கு கடிகாரம் நின்றுவிடும், அதற்கு பின்தான் பேயின் ஆட்டம் தொடங்கும் அதற்கு காரணம் இதுதான்.

இரவில் முழிப்பது
ஒருவேளை எதாவது ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு நீங்கள் மூலிகை நேர்ந்தால் உடனடியாக படுக்கைக்கு சென்றுவிடுங்கள். எந்த காரணத்தை கொண்டும் வெளியில் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனெனில் எந்தவித அசாதாரண நிகழ்ச்சிகள் வேண்டுமென்றாலும் இந்த நேரத்தில் நடக்கலாம்.

சூனியத்திற்கான நேரம்
சூனியக்காரர்களுக்கும், துர்தேவதைகளை வணங்குபவர்களுக்கும் 3 மணி நேரமான மிகவும் பிடித்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஆன்மாக்கள் ஓ இடத்தில் கூடும் அவற்றின் பலமும் அதிகரிக்கும். நாம்தான் பேய்களுக்கான நேரம் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கூறும் மந்திரங்கள், சடங்குகள் அனைத்தும் இருமடங்கு பலத்துடன் இருக்கும்.

மதரீதியான கதைகள்
பழங்காலம் முதலே அனைத்து கலாச்சாரங்களிலும், மதங்களிலும், வேதங்களிலும் 3 மணி என்பது பயத்தை அதிகரிக்கக்கூடிய நேரமென்று கூறப்பட்டுள்ளது. எதார்த்தத்திலேயே 3 மணி என்பது உங்களுக்கு பயத்தையும், பதட்டத்தையும் உண்டாக்கும்.

நடைமுறை வாழ்க்கை
அறிவியல்ரீதியாக இந்த சாத்தானின் நேரத்தை பற்றி எந்த ஆதாரங்களும் இல்லை. ஏனெனில் அமானுஷ்யம் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதானே. பொதுவாக நாம் தூங்கும்போது நம் உடல் முழுவதும் தளர்வான நிலையில் இருக்கும். இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் என அனைத்தும் சீராக இருக்கும். இப்படி இருக்கும்போது திடீரென எழுவது உங்களுக்குள் பலவித உணர்வுகளையும், பயத்தையும் ஏற்படுத்தும். இது உளவியல்ரீதியாகவும் உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். பேய் இல்லை என்று எவ்வளவு தைரியமாக பேசினாலும் 3 மணிக்கு எழும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பயம் எழும் என்பது உண்மைதான்.



Click it and Unblock the Notifications
