Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்?
சிவபெருமானை வழிபடும்போது என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை இங்கே விளக்கமாகக் கொடுத்துள்ளோம்.
ஷ்ரவண் மாதம் சிவனுக்கான மாதம். பக்தர்கள் அவரை அர்ப்பணிப்போடு வணங்குகிறார்கள் மற்றும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றக்கோருகிறார்கள் .

கோயில்களுக்கு விஜயம் செய்வதில் இருந்து விரதங்களை கவனிப்பதில் இருந்து, பக்தர்கள் தெய்வத்தை திருப்திப்படுத்த தங்களால் முடிந்ததை முயலுகிறார்கள்.

சிவபூஜை மலர்கள்
சிவபெருமான் மிகச்சிறிய பிரசாதங்களால் கூட மகிழ்வார் என்று நம்மில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு பிடித்த ஒரு சில மலர்களை மட்டுமே அளிப்பதன் மூலம்கூட ஒரு நபர் தனது விருப்பப்படி அவருடைய ஆசியைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இன்று நாங்கள் சிவனுக்குப் பிடித்த சில மலர்களை உங்களுக்கு சொல்லப்போகிறோம். அவற்றை சமர்ப்பித்து இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.

வாகன் சுகா' (ஆடம்பரங்கள் மற்றும் வாகனங்கள்):
வாகன் சுகா என்பது ஜாதகத்தில் வாகனயோக நிகழ்வைக் குறிக்கிறது, இதன் காரணமாக ஒருவர் வாகனங்களின் வசதியை பெறுகிறார். அவர் ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருக்கிறாரா இல்லையா என்பது தேவையில்லை, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் உதவியுடன், அவர் தனது சொந்த முயற்சியின்றி ஒரு வசதியான பயணத்தை அனுபவிப்பார். இந்த யோகம் அவரது ஜாதகத்தில் இல்லாதபோது அவரால் சொந்தமாக வாகனம் வாங்க முடியாது அல்லது மற்றவகையிலும் அதன் சுகத்தை அனுபவிக்கமுடியாது. வாஹன் சுகா யோக ஆசீர்வாதத்தை நீங்கள் சிவனிடமிருந்து பெற அவருக்கு மல்லிகைப் பூக்களை வழங்க வேண்டும். இது மேலும் சில பயன்களையும் உங்களுக்கு வழங்கலாம் .

தன் வைபவ் (செல்வத்தை சம்பாதிக்க):
ஒரு நபரின் வாழ்க்கையில் செல்வத்தை ஊடுருவச் செய்யும் யோகம்தான் வைபவ் தான். சங்குப்பூ, வில்வ இலைகள் மற்றும் தாமரை மலரை சிவனுக்கு வழங்குங்கள். நட்சத்திரங்கள் ஏற்கனவே உங்களுக்கு ஆதரவான இடத்தில் இருந்தால் நீங்கள் பணக்காரர்களாகி விடுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கும். உங்களுக்கு ஆதரவாக இல்லாத போதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சிவனிற்கு வழங்கப்படும் ஒரு வில்வ இலை அதிக செல்வத்தை சம்பாதிக்க உதவுகிறது. மல்லிகை மலர்களை வழங்குவதன் மூலம் மக்களுக்கு செழிப்பு, போதுமான செல்வம், உணவு ஆகியவை வீட்டில் நிரம்புகிறது.

விரைவாக திருமணம் செய்ய
திருமணம் தாமதமாக பல காரணங்கள் இருக்கலாம். ஒரு வில்வ மலரை சிவனுக்கு வழங்குவதால் திருமணத்திற்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகிறது. சிலர் பொருத்தமான ஜோடியைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், மற்றவர்கள் திருமணத்திற்கு பொருத்தமான தேதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். வில்வ இலையை வழங்குதல் அந்தச் சிக்கலை தீர்க்கும். இதனால், ஜோடிக்கு இடையே பொருந்தக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் நீக்க
அனைத்து வகையான பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகள் நடைமுறை நவீன வாழ்க்கையில் பொதுவான ஒன்று. இருப்பினும், பிரச்சினைகள் வாழ்வின் அவசியமான பகுதியாகும், ஏனென்றால் அவைகளே வெற்றியின் படிப்படியான கற்கள். ஆனால் அவைகளைக் கையாள்வது சில நேரங்களில் ஒரு கடினமான பணியாக மாறும். எனவே, அத்தகைய பிரச்சனைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து எளிதில் நீக்க "பவளமல்லி" (இரவில் பூக்கும் மல்லிகை) மலரை சிவனுக்கு வழங்க வேண்டும்.

சமூக மரியாதை பெறுவதற்கு
மரியாதை மற்றும் உயர் பதவிகளைப் பெறுவதற்கு, சிவன் சிலைக்கு ஆகஸ்ட் மலர்களை வழங்க வேண்டும். அரளி மலர்களை அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலம், தடைகளைத் தாண்டி வெற்றியை எட்டலாம். துணிமணிகள் மற்றும் ஆபரணங்களை விரும்புகிறவர்கள் சிவனிற்கு செவ்வரளிப் பூக்களை வழங்க வேண்டும்.

நீண்ட ஆயுளுக்காக:
ஷ்ரவண் மாதத்தில் அருகம்புல்லை சிவனுக்கு வழங்குவதால் ஒருவர் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. ஆரோக்கியமான நீண்ட ஆயுள் வேண்டும் என்று சிவனை வேண்டிக் கொண்டால், அருகம்புல்லை வைத்து வணங்குங்கள்.

மோட்சம்
வாழ்க்கையில் அமைதிக்காகவும் மரணத்திற்குப் பிறகு அமைதிக்காகவும் வேண்டிக் கொள்பவர்கள் சிவனுக்கு வெள்ளைத் தாமரையைக் கொடுப்பதன் மூலம், தற்போதைய வாழ்க்கையில் அமைதியையும், மரணத்தின் பின் இரட்சிப்பையும் பெறலாம்.



Click it and Unblock the Notifications











