Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
காசிக்கு அடுத்ததாக ராமேஸ்வரத்தை புனிதமாகக் கருதுவது ஏன்? அந்த சுவாரஸ்ய கதை இதுதான்...
ராமேஸ்வரத்தினுடைய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலமாகும். இது நமது தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமாகும். மேலும் இது சிவன் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த இடமாகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த புனித தலமான ராமேஸ்வரத்தின் பெருமையை நீங்கள் ராமாயணத்தில் அறியலாம். கடவுள் ஸ்ரீ ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமான் போன்றவர்கள் கொடிய அரக்கன் ராவணனை வீழ்த்த தென்கிழக்கு கடற்கரையில் சிவலிங்கத்தை வைத்து பூஜித்த சரித்திர வரலாற்றை இது பறைசாற்றுகிறது.

அனுமான் சீதையை சந்தித்தல்
ராவணனால் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட தன் மனைவி சீதாவை காண ராமர் வானர படைகளையும் தன் நண்பன் அனுமானையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அனுமானும் சீதையை சந்தித்து ராமர் சொல்லிய தகவலை அவரிடம் கூறி விட்டு சீதையின் நினைவாக அவரின் தலை ஆபரணமான சூடாமணியை வாங்கிக் கொண்டு ராமனிடம் கொடுக்க புறப்பட்டார்.

ராமர் இலங்கையை கைப்பற்ற தயராகுதல்
சீதை அங்கு மிகுந்த வருத்தத்தில் இருந்ததை அறிந்த உடன் ராமர் இலங்கை மீது போர் தொடுக்க தயாராகிறார். இலங்கை கடல்களால் சூழப்பட்ட அழகான ஒரு தீவு. உள்ளே தன் படைகளை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றால் கடலை கடந்து செல்ல வேண்டும். எனவே ராமர் கடலின் கடவுளான சமுத்திர ராஜாவை நோக்கி வழிபடுகிறார். ஆனால் சமுத்திர ராஜா பதில் எதுவும் அளிக்காததால் கோபமடைந்த ராமர் தன் வில்லை எடுத்து கடலின் நடுவில் எய்தார்.உடனே கடல் வழியை நகர்த்தி ராமரின் படைகள் போக பாலத்தை அமைக்க உதவியது.

தனுஷ்கோடி பாலம்
ராமர் சீதையை மீட்க கடலின் நடுவே இலங்கைக்கு பாலம் அமைக்க ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு சிறிய அணில் தன்னால் முடிந்த மணலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாலம் கட்ட உதவியது. இதைக் கண்ட ராமரும் வானர படைகளும் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். அணில் முதுகில் மூன்று கோடுகள் எப்படி வந்தது என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு தான் நடந்தது. இதனைக் கண்ட ராமர் அணிலின் இந்த அன்பை பார்த்து அதன் முதுகில் லேசாக வருடிக் கொடுத்தால். அவர் மூன்று விரல்களால் தடவி விட்ட அந்த அன்பு வருடல் தான் அணிலின் முதுகில் மூன்று வெள்ளை கோடுகளை உருவாக்கியது.

ராவணனை அழித்தல்
பாலம் கட்டும் பணி முடிவடைந்ததும் ராமர், அனுமான், வானர படைகள் அனைத்தும் இலங்கையை சென்றடைந்தது. போரின் போது இந்திரன் தன் வதம் மீது அமர்ந்து இருந்தார், அகஸ்தியர் முனிவர் ஆதித்யா ஹரிதயா மந்திரத்தை ஓதினார். ராமர் தான் கற்ற வில்வித்தையான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி ராவணனை கொன்று வீழ்த்தினார்.

சீதையுடன் ராமேஸ்வரம்
ராவணன் அழிந்த பிறகு ராவணனின் மகன் விபுசனாவை இலங்கையின் அரசனாக்கி விட்டு ராமர் சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமானுடன் அன்னப் பறவை வதத்தில் பறந்து இராமேஸ்வரம் வந்தார்.

அகஸ்தியரை சந்தித்தல்
இராமேஸ்வரம் வந்த ராமர் அகஸ்தியர் முனிவரையும், தண்டகரினியா முனிவரையும் சந்தித்து ஆசி பெற்றார். அவர்களின் அறிவுரை படி ராவணனை கொன்ற பிரம்மஹத்தி பாவம் போக அங்கே சிவலிங்கத்தை நிறுவி வழிபட தயாராகினார்.

சிவ பூஜை
எனவே ராமர் சிவ பூஜைக்கான ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார். அனுமானும் சிவலிங்கம் கொண்டு வருவதற்காக கைலாசம் வரை ஆகாய மார்க்கமாக பறந்து சென்றார்.

மணல் லிங்கம்
சிவலிங்கத்தை எடுக்க சென்ற அனுமானால் சீக்கிரம் திரும்ப முடியவில்லை. பூஜைக்கான நேரம் நெருங்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் சீதை மணலால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை உருவாக்கினார்.

வழிபாடு
பூஜை நேரம் வந்து விட்டதால் அகஸ்தியர் முனிவர் மணல் லிங்கத்திற்கே பூஜை செய்து விடுங்கள் என்று ராமனிடம் கூறினார்.

ராமேஸ்வரம் பெயர் வரக் காரணம்
சீதை, ராமர், லட்சுமணன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவம் போக சிவ பூஜையில் ஈடுபட்டார்கள். அவர்கள் செய்த பூஜையின் பயனால் சிவனும் பார்வதியும் முன் தோன்றி தனுஷ்கோடி நீரில் குளித்து எழுந்திருங்கள். பாவம் எல்லாம் கரைந்தோடி விடும் என்று அருளினார். அப்படி ராமர் வழிபட்ட அந்த சிவலிங்கம் தான் ராமலிங்கம் என்ற பெயரை பெற்றது. அங்கே எழுந்தருளிய கடவுள் சிவன் ராமநாத சுவாமி என்றும் அந்த இடத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயரும் புகழும் ஏற்பட்டது.

இரண்டு லிங்கம்
இதற்கிடையே கைலாச மலைக்கு சென்ற அனுமான் அங்கே சிவனை சந்திக்க முடியாததால் சிவலிங்கத்தை பெற முடியாமல் தவித்தார். ராமருக்கு சிவலிங்கத்தை எடுத்து வருவதாக வாக்கு கொடுத்ததால் சிவனை நோக்கி அனுமான் தவம் பிரியலானார். அவரின் அன்பை பார்த்த சிவன் அவருக்கு அருளி இரண்டு சிவலிங்கத்தை கொடுத்து அனுப்பினார்.
அனுமான் தன்னுடைய இரண்டு சிவலிங்கத்தையும் சுமந்த படி ஆகாய மார்க்கமாக ராமேஸ்வரம் பறந்து வந்தார்.

பல லிங்கங்கள்
ராமேஸ்வரம் வந்தடைந்த அனுமான் அங்கே ராமரின் சிவன் பூஜை முடிவடைந்து விட்டதை நினைத்து வருத்நமடைந்தார். அவரின் வருத்தத்தை போக்கும் வகையில் ராமரும் இந்த மணலிங்கத்தை எடுத்து விட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வேண்டும் என்றால் வை அனுமான் என்றார்.

வலிமையான மணலிங்கம்
அனுமான் தன் வாலால் கைகளால் இப்படி எப்படி நகர்த்த முடிந்தும் சீதை செய்த அந்த மணலிங்கத்தை அவரால் நகர்த்த முடியவில்லை. ஏனெனில் சீதை தன்னுடைய முழுமையான பக்தியால் தனுஷ்கோடி மண்ணிலிருந்து அதை உருவாக்கி இருந்தார்.
அனுமான் கொண்டு வந்த லிங்கம் ஏன் முதலில் வணங்கப்படுகிறது
அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை சீதையால் நிறுவப்பட்ட ராமலிங்கத்தின் வடக்கு பகுதியில் வைத்து விடும் படி ராமர் கூறினார். இதனால் பக்தர்கள் அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை வணங்கிய பிறகே ராமலிங்கத்தை வணங்குவார்கள் என்றார் ராமர். அனுமான் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் அனுமானை வழிபடும் வாயிலின் வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் உருவாகி இந்த முறைப்படி வணங்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications