Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்?
நவராத்திரி பூஜை காலங்களில் கொழுவை தவிர வேறு என்ன செய்யலாம்
நவராத்திரி பெண்களின் விழாவாகும். அதற்காக ஆண்கள் இதிலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு விலகவும் கூடாது. நிச்சயம் உங்களது குடும்ப பெண்கள் தனது துணை நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியே நவராத்திரி பூஜை செய்வார். நீங்கள் இந்த பூஜை காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து, பூஜை வெற்றி பெற உதவுங்கள். நவராத்திரி பூஜை என்றால் கொழு வைப்பது மட்டும் தானா? இந்த நல்ல நாட்களில் வேறு என்ன எல்லாம் செய்யலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

கூட்டு பிராத்தனை
நவராத்திரி காலங்களில் குடும்பத்தார் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுப்பிராத்தனை செய்ய வேண்டியது அவசியம். பூஜை அறையை மற்றும் கொலு மேடையை சுத்தம் செய்து, உலக உயிர்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டும் ஐந்து முக விளக்கை ஏற்ற வேண்டும்.

குழந்தைகள்
குழந்தைகளின் தெய்வீக சிந்தனையை அதிகப்படுத்துங்கள். அபிராமி அந்தாதியில் உள்ள ஒரு பாடலை மனப்பாடம் செய்ய சொல்லுங்கள்.

பரிசு
கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுத்து வழியனுப்புங்கள். இதனால் உங்களது வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.

துர்க்கை வழிபாடு
அம்மன் கோவில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்கு பூஜை நடத்துங்கள். கன்னிப்பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

கோ பூஜை
பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டால் மூன்று தேவிகளின் மனம் குளிரும். அவர்களின் அருள் கிடைக்கும்.

உதவுங்கள்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளை செய்து, அன்னமிடுங்கள். இதனால் தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications