Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
வீட்டில் பெரியர்வர்கள் இறந்தால் மகனுக்கு மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா?
இங்கு வீட்டில் பெரியவர்கள் இறந்தால் ஏன் மொட்டை அடிக்க கூறுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருவர் பிறப்பதில் இருந்து, இறப்பது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பலவன இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை இன்றளவும் பின்பற்றி வரப்படுகின்றன. ஆனால், அந்த சடங்குகள் எதற்காக கொண்டுவரப்பட்டது, ஏன் செய்கிறோம் என்று தான் பலருக்கும் தெரியாது.
அதில், வீட்டில் ஒரு பெரியவர் இறந்தால் அவரது மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இந்த சடங்கு ஏன்? எதற்காக பின்பற்றப்பட்டது என இங்கு காணலாம்...

மனைவிக்கும்...
முன்பு வீட்டில் ஒரு ஆண் இறந்தால் அவரது மகனுக்கு மட்டும் இன்றி, அவரது மனைவிக்கும் மொட்டை அடிப்பார்கள். மற்றும் அவரது மனைவி வாழ்நாள் முழுக்க மொட்டை தலையுடன் தான் இருப்பார்கள். இந்த வழக்கம் காலத்தின் மாற்றத்தில், வாழ்வியல் மாற்றத்தில், நவநாகரீக வளர்ச்சியில் மாறி போனாது.

ஏன் மனைவிக்கு மொட்டை...
மனைவிக்கு ஏன் மொட்டை அடித்தார்கள் என்பதற்கும் காரணம் கூறப்படுகிறது. பெண்களுக்கு தலை முடி குறைவாக அல்லது தலை முடி இல்லை எனில், தாம்பத்திய எண்ணங்கள் குறையும் என்றும் கூறுகின்றனர்.

ஈர்ப்பு!
அவர்களது அழகு சார்ந்த ஈர்ப்பு குறையும் என்ற காரணம் காட்டியும், கணவன் இறந்த பிறகு அந்த பெண் மீது வேறு ஆண்கள் / அந்த பெண் வேறு ஆண்கள் மீது ஆசைக் கொள்ள கூடாது என்பதற்காகவும் இந்த சடங்கு பின்பற்றப்பட்டதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளன.

மகனுக்கு மொட்டை ஏன்?
வீட்டில் பெரியவர் இறந்த மறுநாள் அல்லது அந்த நாள் மாலையே மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இதனால், அந்த ஆணுக்கு ஈகோ குறைந்து போகும், பொறுப்புகள் கூடும், நல்லொழுக்கத்துடன் திகழ்வார், தன்னலமற்று குடும்பத்திற்காக உழைப்பார், அடுத்து அவர் தான் அந்த குடும்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்படுவார் என கூறப்படுகிறது.

வெளியாட்கள் அறிய...
மற்றும் மொட்டை அடிப்பதால் வெளியாட்களுக்கு அந்நபரின் வீட்டில் துக்கம் ஏற்பட்டுள்ளது என அறிந்துக் கொள்வார்கள். எனவே, சூழ்நிலை அறிந்து அவரிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

உளவியல் ரீதியாக...
மொட்டை அடிப்பதால் உளவியல் ரீதியாக அந்த நபரிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உணர்வு ரீதியாக அவர் ஒருமுகப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு தலைமை தாங்குவார். இது குடும்பத்துடனான இறுக்கத்தை, பற்றை அதிகரிக்கும், நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என கூறுகின்றனர்.

மெல்ல, மெல்ல குறைந்து போனது!
அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப இந்த சடங்குகள் பின்பற்றப்பட்டு இருக்கலாம். இன்று வாழ்வியல், சூழல் அனைத்தும் மாறுப்பட்டு போய்விட்டது. இன்றும் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் இருப்பினும், சிலர் வேலை, பணிபுரியும் இடம் காரணம் காட்டி மொட்டை அடிக்க தயங்குவது உண்டு. மெல்ல, மெல்ல இந்த பழைய சடங்கு முறை குறைந்து வருகிறது.



Click it and Unblock the Notifications











