Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
1962 ஆம் ஆண்டில் நேரு - 2017 ஆண்டில் மோடி!! இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் நேரு மற்றும் மோடி ஒப்பீடு.
வரலாற்றினை யாரும் மாற்றமுடியாது. நம் முன்னோர்களைப் பற்றியும் நம் நாட்டின் ஆரம்ப காலத்தைப் பற்றிய வரலாற்றினையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

சுதந்திரம் பெற்ற பிறகு புதிய இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நேரு நம் மூதாதையர்களின் தியாகத்தால் பெற்ற இந்திய நாட்டினை நல்வழியில் கொண்டு வர வேண்டும் உலக அரங்கில் முதன்மை படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

பிறருக்கு கொடுக்கலாம் :
பாரளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதம் நடந்த போது, மலைகள் சூழ்ந்த லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் புல் கூட வளராது . ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்றார். அப்படியானால், அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிடலாமா?

அக்சை சின் :
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா- சீனா எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது அக்சை சின் . சீனா தனது சீர்திருத்தின் போது அக்சை சின் இடத்தை சீனாவோடு சேர்த்துக் கொண்டார்கள். 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சீன வரைபடத்தில் அக்சை சின் இடம்பெற்றிருந்தது.
இதனை தீர்க்க, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்போதே பிரச்சனையை தீர்த்திருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியாக இருந்த நேரு அமைதி காத்தார்.

சீனா :
சீனா இந்தியாவில் தன்னை நிலைநாட்ட விரும்பியது. இதற்காக, இந்தியா அக்சை சின்னிலிருந்து விலகிட வேண்டும். அப்படி செய்தால், இந்தியாவின் வடகிழக்கு எல்லையை சீனா கடக்காது என்று அறிவித்தார்கள்.
இதனையடுத்து இந்தோ சீனா போர் நடந்தது. ஏராளமான உயிர்களை பலி கொடுத்ததன் பலனாக சீன மக்களை தூண்டிவிட்டார். பின்னர் இது சீன ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது.

எச்சரிக்கை :
நான் உங்களை எச்சரிக்கிறேன். சீனா இந்தியாவை தாக்க காத்திருக்கிறது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் ராணுவத்தை தயார்படுத்த வேண்டும் என்று எச்சரித்தார் அன்றைய ராணுவத் தலைவர் திம்மையா. ஆனால் நேருவும் ராணுவ அமைச்சர் வி.கே.மேனனும் இதனை பெரிதாக் அலட்டிக் கொள்ள வில்லை

வடகிழக்கு நாடுகள் :
இந்திய நாட்டில் புறக்கணிக்கப்பட்ட பகுதியென்றால் அது வடகிழக்கு பகுதிகளை சொல்லலாம். இதற்கு முந்தைய அரசு கச்சிதமாக வடகிழக்கு பகுதிகளை தவிர்த்தார்கள்.
இத்தனைக்கும் வடகிழக்கு நாடுகளுக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். கடந்த காலத்திலும் எந்த முக்கியத்துவமும் காட்டப்படவில்லை.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பல நாடுகளின் எல்லைகள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தான் இருக்கிறது.

என்ன செய்கிறது மோடி அரசாங்கம் ? :
மோடி அரசாங்கம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து ஜப்பானிய கம்பனிகளுக்கு சாலை அமைக்கிறது. இதன் மூலமாக போர் வீரர்களுக்கு ஆயுதங்கள், உணவு போன்றவற்றை போர்கால அடிப்படையில் விரைந்து கொடுக்க முடியும்.
இந்தியாவின் திரிபுரா மற்றும் பங்களாதேஷின் தென்கிழக்கில் இருக்கும் சிட்டாகோங் பகுதிக்கு வழி ஏற்படுத்தும் வகையில் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பங்களாதேஷ் :
ஆந்திர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தென் கிழக்கு நாடுகளுக்கு தானியங்களை கொண்டு செல்வதில் அதிக நேரம் ஆகும். பங்களாதேஷுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக திரிபுராவிலிருந்து உதவிகள் பெற முடியும்.

அனுமதி :
தலாய்லாமா அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள ட்வாங் இடத்திற்கு வர அனுமதியளிக்கப்பட்டது. ட்வாங்கில் நடைபெற திருவிழா ஒன்றிற்கு அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வர அனுமதியளிக்கப்பட்டது.
இதன்மூலமாக அருணாச்சலப் பிரதேசத்தின் மீது தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று சீனாவுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்தியா.
அதே போல சீன அரசியல்வாதி xi jinping என்பவரது ஒன் பெல்ட் ஒன் ரோடு (one belt one road) என்ற திட்டத்தையும் புறக்கணித்தார். இனியும் சீனாவின் தொல்லைகளை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

முடிவு :
சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மோடியும் அமைதியைத் தான் கடைபிடிக்கிறார். ஆனால் நாசூக்காகவும் திறமையாகவும் தன்னுடைய எதிர்ப்பை காண்பிக்கிறார். தனது எதிர்ப்பை பதிவு செய்ய போர் வீரர்களை பலியிட வேண்டும் என்றில்லை என்று சீனாவுக்கு முன்னால் இந்தியா தெளிவாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications











