Latest Updates
-
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன?
நிர்வாண மாடலை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்த போலீசார்!
பாரம்பரிய கோவில் நிர்வாணமாக போட்டோ எடுத்துக் கொண்டதற்காக மாடலை வலுக்கட்டாயமாக சிறையில் அடித்த போலீசார்!
மரிஸா பாபேன் என்பவர் பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு நிர்வாண மாடல் அழகி. இவர் ஜெஸ்சி வாக்கர் எனும் புகைப்பட கலைஞருடன் வடக்கு ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கே பண்டையக் காலத்து எகிப்து பகுதியில் சில புகழ் பெற்ற இடத்தில் ஷூட் எடுக்க வேண்டியிருந்தது. அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, கிஸா (Giza) எனும் மதிப்பிற்குரிய இடத்தில் ஷூட் எடுத்துள்ளனர்.
மரிஸா பாபேன் தனது உடைகளை அவிழ்த்து நிர்வாண போஸ் கொடுக்க துவங்கினார். லக்ஸர் எனும் இடத்தில், இப்படி மரிஸா பாபேன் மற்றும் ஜெஸ்சி வாக்கர் நிர்வாண படங்களை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த காவலாளிகள் நால்வர் இவர்கள் இருவரை கைது செய்தனர்.

லக்ஸர்!
தெற்கு எகிப்து பகுதியில் நைல் நதியின் கிழக்கு கரையில் அமைந்திருக்கும் பகுதி லக்ஸர்.இது ஒரு பண்டையக் கால சிறப்புகள் கொண்டு இடமாகும்.
கைதான மாடல் அழகி, "கடந்த இரண்டு ஆண்டுகளில் 50-ற்கும் மேற்பட்ட நாடுகளில் வைல்டு அன்ட் ஃப்ரீ புகைப்படங்கள் எடுத்து வருகிறோம். ஆனால், அரிய வகையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் எகிப்தில் நடந்த ஒரு நிர்வாண ஷூட்டில் கைது செய்யப்பட்டோம்", என கூறியுள்ளார்.
Image Credit: Instagram

கலாச்சாரம்!
"எகிப்தியில் அந்த பகுதியில் இந்த நிர்வாண படங்கள் எடுப்பது ஆன்மீக, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக எதிரான செயல் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதற்காக நாங்கள் கைது செய்யப்படுவோம் என்றும் எதிர்பார்க்கவில்லை" என மரிஸா பாபேன் கூறியுள்ளார்.

பிரமிடுகள்!
"முதலில் கிஸா பிரமிடுகள் இடத்தில் நிர்வாண படங்கள் ஷூட் செய்தோம். பிறகு, மற்றொரு இடத்தில், ஒரு காவலாளிக்கு லஞ்சம் கொடுத்து ஒப்புதல் வாங்கி ஷூட் நடத்தியுள்ளனர். ஆனால், அது மற்ற காவலாளிகள் அறிந்திருக்கவில்லை.
திடீரென வந்த காவலாளிகள் எங்களை பதில் கூறவிடாமல், இது கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி கைது செய்தனர். அவர்களுக்கு நிர்வாணத்திற்கும், கலைக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என மரிஸா பாபேன் பேட்டியில் கூறியுள்ளார்.
Image Credit: Instagram

போலீஸ் நடவடிக்கை!
"எடுத்த படங்களை அழிக்க கூறியும், வேறு எஸ்.டி கார்டு இருக்கிறதா என ஆராய்ந்தும் போலீஸார் பரிசோதனை செய்தனர். அங்கே இருந்த லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இரவு சிறையில் அடைத்தனர்.
அங்கே சிறையில் இருந்த கைதிகள் வலுவாக தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்தவலிந்த நிலையில் இருந்தனர். அவர்களை பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது."
Image Credit: Instagram

நீதிபதி!
"பிறகு சிறுது நேரம் கழித்து, நீதிபதி முன்னர் எங்களை அழைத்து சென்றனர். அங்கே கொஞ்சம் கதையை உல்டாவாக்கி, நாங்கள் சுற்றுலா பயணிகள், ஸ்கின் கலர் உள்ளாடை அணிந்து நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம், அதை இவர்கள் தவறாக புரிந்துக் கொண்டனர் என கூறினோம். பிறகு ஏதோ முட்டாள் சுற்றுலா பயணிகள் என கருதி எங்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இல்லையேல், வெளியே விட்டிருக்க மாட்டார்கள்", என மரிஸா பாபேன் கூறியுள்ளார்.
பிறகு ஹோட்டல் திரும்பியவுடன், அட்வான்சுடு சாப்ட்வேர் பயன்படுத்தி அழித்த படங்களை மீட்டெடுத்துள்ளனர் இவர்கள்.
Image Credit: Instagram



Click it and Unblock the Notifications











