Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
பல் ஈறுகளில் பச்சை குத்திக் கொள்ளும் வினோத சடங்கு முறை!
பச்சை குத்திக் கொள்வது என்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள், தங்களை அழகாக காட்டிக் கொள்ள ஈறுகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்.
பற்களை பாதுகாப்பது, அவற்றை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானது. இதனை கண்டுகொள்ளாமல் விடுவதால் தொற்று ஏற்ப்பட்டு பல விதமான நோய்கள் உண்டாகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு பற்களை எல்லாரும் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வருந்தோறும் இன்றைய தினம் தேசிய பற் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
பச்சைக் குத்திக் கொள்வது இன்றைக்கு ஒரு பேஷனாகி விட்டது. சிலர் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்வார்கள். ஆனால் இதுவரை நீங்கள் கேள்விப்படாத வகையில் பற்களின் ஈறுகளில் பச்சைக் குத்திக்கொள்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.

ஆப்ரிக்கா :
ஆப்ரிக்காவில் உள்ள மேற்கு பகுதியில் சென்கல் என்ற பகுதியில் உள்ள பெண்கள் அதிகமாக ஈறுகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட எந்த டிசைனும் இல்லாத ஒரே மாதிரிபச்சை குத்திக் கொள்கிறார்கள். ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது, கருப்பு நிறத்தில் இருக்கிறது.
இப்படி பச்சைக் குத்திக் கொள்வது தான் அழகு என்றும் நினைக்கிறார்கள்.

நடைமுறை :
நெடுங்காலமாக நடைப்பெற்று வரும் இந்த வழக்கத்தை அங்கிருக்கும் பெண்கள் கடைபிடிக்கிறார்கள். வயதான பெண்மணி ஒருவர், தன் மடியில் படுக்க வைத்து இப்படி பச்சை குத்துகிறார். ஒரு வகையான திரவ எண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மிகச்சிறிய ஊசியை கொண்டு ஈறுகளில் குத்துகிறாள். சிலர் வலி தாங்காமல் அலற அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டே தொடர்ந்து குத்துகிறார்கள். அதற்கு மேல் கருப்பு நிற வண்ணத்தை பூசுகிறார்கள்.

7 லேயர்கள் :
ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்றப்படி பல லேயர்கள் வைக்கப்படுகிறது. குறைந்தது எல்லாரும் 7 லேயர்கள் வரை பூசிக் கொள்வார்களாம். ஆனால் மூன்று லேயர்களை தாண்டும் போதே வலி அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பற்கள் பாதுகாப்பு :
இந்த நடைமுறை பற்களையும் பாதுகாக்கும் என்று சொல்கிறார்கள். ஈறு வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படாது என்கிறார்கள். வலி அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஆனாலும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது தொடர்கிறது.



Click it and Unblock the Notifications