Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
கருவிழியை சவரம் செய்யும் சீனக்கலைஞர்! அதிர்ச்சியூட்டும் சீன மருத்துவம்
சீனாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்
எப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறிமுகம் தான் இது.
சவரம் செய்வதை சர்வ சாதாரணமாக கடந்துவிடுவோம். ஆனால் இங்கே சீனக்கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்.

40 ஆண்டுகளாக :
சீனாவைச் சேர்ந்த அறுபத்தி ரெண்டு வயதாகும் நபர் க்சியாங் காவு. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்களில் சவரம் செய்து வருகிறார்.

கண்களுக்கு சவரம் :
கூர்மையான கத்தியை பட்டை தீட்டி அதில் ஏதோ ஒரு திரவத்தை வைக்கிறார். அதனைக் கொண்டு தன் முன்னால் படுத்திருக்கும் நபரின் கண்களை அகல விரித்து சவரம் செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு :
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கண்களை சவரம் செய்வது மருத்துவமனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.

பார்வையை பாதிக்கும் :
பின்னர் பயன்படுத்தும் கத்தி துருபிடித்திருந்தால் அது பார்வையையே பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால் இந்த நடைமுறை அப்படியே வழக்கொழிந்து போய்விட்டது.

துல்லியமான பார்வை :
நாற்பது ஆண்டுகளாக பலரும் இவரிடம் கண்களை சவரம் செய்திருக்கிறார்களாம் ஆனால் இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்ப்பட்டதில்லையாம். முப்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வதால் கண்களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லியமாக இருக்குமாம்.



Click it and Unblock the Notifications











