Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம் : நெகிழ்வூட்டும் நினைவுகளின் பயணம்!
இன்றைய தலைமுறை அறியாத, சென்ற தலைமுறை கொண்டாடிய தீபாவளி நினைவுகள் பலவன இருக்கின்றன. ஸ்மார்ட் போன், யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் இல்லாத ஒரு மாபெரும் இன்பத்தின் குவியல் அது.
தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறை ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்று விடுவார்கள். சென்ற தலைமுறையிடம் கேளுங்கள், ஒரு கட்டுரையே எழுதுவார்கள். நான்கைந்து நாட்களும் கொண்டாட்டம். தீபாவளி வரும் பத்து நாளுக்கு முன்னரே வீதிகளில் ஆங்காங்கே பழைய பட்டாசுக்கள் வெடித்து சிதறும்.

தாத்தா, பாட்டி தீபாவளி பணம், அம்மா சுடும் சுவையான பலகாரம். மாமா, பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு வந்து செல்வது. தையல் காரரிடம் துணி தைக்க கொடுத்து காத்திருந்து வாங்கி உடுத்துவது. நிச்சயம் இந்த விஷயங்கள் உங்களை குழந்தை பருவத்திற்கு கூட்டி செல்லும்.
நேற்று வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்த ஒரு செய்தியின் தொகுப்பில் இருந்து...

நினைவு #1
நண்பர்களில் யாருக்கு அதிக தீபாவளி பணம் கிடைத்தது என்ற தேடல்.

நினைவு #2
தைக்க கொடுத்த தீபாவளி புதுத்துணியை தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா ஏக்கம்.

நினைவு #3
ஒரு வாரத்திற்கு முன்னதாக அம்மா தீபாவளி பலகாரம் செய்யும் போது, அருகே அமர்ந்து சுடசுட ருசிப் பார்ப்பது.

நினைவு #4
எண்ணெய் தேய்த்து, ஒருசில வார இதழ்கள், தின பத்திரிக்கைகள் இலவசமாக இணைத்து தரும் கங்கா நீர் கலந்து குளிப்பது.

நினைவு #5
தெருவில் முதல் ஆளாக எழுந்து யார் பட்டாசு வெடிப்பது என்ற போட்டிப் போட்டு சீக்கிரமாக முதல் சரம் வெடிப்பது.

நினைவு #6
ஆசை, ஆசையாக வாங்கி வைத்த புத்தாடையில், அம்மா எப்போது மஞ்சள் வைத்து தருவார் என காத்திருப்பது. (சிலருக்கு அந்த மஞ்சள் வைப்பது பிடிக்காது. அதற்கு அடம் பிடிப்பது தனிக் கதை)

நினைவு #7
வேண்டாம், வேண்டாம் என அடம்பிடித்து, கண்கள் எரிய, கண்ணீர் கசிய சீயக்காய் தேய்த்து அம்மா கையால் தலைக்கு குளிப்பது.

நினைவு #8
அப்பா, அம்மா காலில் விழுந்து தீபாவளி அன்று புத்தம் புதிய தாளை வாங்கி கசங்காமல் பத்திரப்படுத்துவது.

நினைவு #9
ஊர் முழுக்க பட்டாசு வாசனை அடித்தாலும், சரியாக 8 மணிக்கு அம்மா ஸ்பெஷலாக சமைக்கும் உணவின் வாசனை மூக்கை துளைக்க, பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு ஓடி சென்று சாப்பிடுவது.

நினைவு #10
சரம் தீர்ந்து விட்டால் பிஜிலி வெடியை சரம் போல கோர்த்து வெடிப்பது. வருடம் முழுக்க ஒதுக்கப்பட்டாலும், தீபாவளி அன்று தேடப் பிடித்து பழைய பீர் பாட்டில் எடுத்து ராக்கெட் விடுவது.



Click it and Unblock the Notifications











