Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
பிள்ளையார்பட்டி விநாயகர் மட்டும் தனித்துவமாக இருப்பது ஏன்???
யானை முகமுடைய பிள்ளையார் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வணங்கும் கடவுளாக திகழ்கிறார். கல்விக்கு உகந்த தெய்வமாக இருக்கும் விநாயகரை தென்னிந்தியாவில் மட்டும் தான் பிரம்மச்சாரியாக காண்கிறோம். ஆனால், வட இந்தியாவில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக வைத்து வணங்குகிறார்கள்.
குபேரனின் கர்வத்தை அழிக்க விநாயகர் எடுத்த பாடம்!
இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான விநாயகர் வழிபாட்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. ஆனால், நமது தமிழ்நாட்டில் இருக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மட்டும் தான் தனித்துவமாக திகழ்கிறார். இந்த தனித்துவம் இவரது தோற்றத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.
விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!
இங்கு இவர் மிக எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இனி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தனித்துவமான சிறப்புகள் பற்றி காணலாம்....
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

துதிக்கை வலம்சுழித்ததாக இருக்கும்
கற்பக விநாயக பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது தனி சிறப்பாக திகழ்கிறது.

இரண்டு கரங்கள்
பொதுவாக மற்ற வழிபாட்டு ஸ்தலங்களில் இருப்பதைப் போல நான்கு கைகள் இன்றி இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.

அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மற்ற கோவில் விநாயகரை போன்று இல்லாமல், அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.

"அர்த்தபத்ம" ஆசனம்
வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

பெருமித கோலம்
இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதமானக் கோலத்தில் காட்சியளிப்பது.

வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்பாலிக்கிறார்.

தந்ததின் வேறுபாடு
ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் வகையில், வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றத்தில்.



Click it and Unblock the Notifications