Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
'மரணம்' பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்!
உங்கள் வாழ்க்கையில் ஓர் தீராத பயம் என்றால் அது என்ன என்று கேட்டால், அதற்கு நிச்சயம் மரணம் தான் பதிலாக இருக்கும். ஏனெனில் நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் மரணம் நிச்சயம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிகழும். வாழ்வில் ஏற்படும் ஓர் மாற்றத்தை தவிர்க்க முடியாது என்றால் அது மரணமாகத் தான் இருக்கும். சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட மரணத்தைப் பற்றிய திடுக்கிட வைக்கும் சில உண்மைகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துப் பாருங்கள். மேலும் நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

உண்மை 1
இடக்கை பழக்கம் உள்ளவர்கள், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட 3 வருடம் முன்பே மரணத்தை சந்திப்பார்களாம்.

உண்மை 2
இறந்த சடலங்களை நான்கு நாட்கள் கழித்துப் பார்த்தால் வீங்கி காணப்படும். அது ஏன் என்று தெரியுமா? ஏனென்றால், உடலில் உள்ள வாயுக்கள் மற்றும் நீர்மங்கள் தன்னழிவு மூலம் வெளியேற்றப்படுவதால் தான்.

உண்மை 3
மனிதன் வயதாவதால் இறப்பதில்லை, வயதாகும் போது உடலைத் தாக்கும் நோய்களால் தான் மரணிக்கப்படுகிறான்.

உண்மை 4
தடயவியல் விஞ்ஞானிகளால் இறந்த சடலத்தின் மீதுள்ள உயிரினங்களைக் கொண்டே, இறந்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்பதை சொல்ல முடியும்.

உண்மை 5
ஒரு மனித தலை துண்டிக்கப்பட்ட பின்னர் சுமார் 20 நொடிகள் நனவுடன் இருக்கும்.

உண்மை 6
உலகில் பெரும்பாலான மக்களின் இறப்பிற்கு காரணமாக இருப்பது இதய நோய், விபத்துக்கள் அல்லது பிரசவம்.

உண்மை 7
இதய துடிப்பு நின்ற சில நிமிடங்களிலேயே மூளைச் செல்களும் இறந்துவிடும். ஆனால் நம் சரும செல்கள் 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications