12 ஆயிரத்துக்கு பதிலாக தவறுதலாக 12 லட்சத்தை டொனேஷனாக அனுப்பிய இளைஞர்... க்ளைமாக்ஸில் வந்த ட்விஸ்ட்...!

தொண்டு செய்வது அல்லது டொனேஷன் கொடுப்பது என்பது நல்ல காரியம்தான். ஆனால் தங்கள் தகுதிக்கு ,மீறி தானம் செய்வது எப்போதும் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் "அளவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று கூறியுள்ளார்கள். இதேபோல தற்போது இந்தியாவில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Man Accidentally Transfers Over Rs 12 Lakh While Trying To Donate Rs 12 435 for Charity

சமீபத்தில் மும்பையில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது, மைக்கேல் என்ற நபர் தற்செயலாக பங்களாதேஷை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ரூ.12,435க்கு பதிலாக ரூ.12 லட்சத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார். மைக்கேல் அந்த பணத்தை பங்களாதேஷில் உள்ள ஏழ்மையான மக்களுக்காக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. மைக்கேல் தான் செய்த தவறை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திய பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தனியார் செய்தி நிறுவனத்தில் வெளிவந்து செய்தியின்படி, பங்களாதேஷத்தில் உள்ள ஒரு சமூகத்திற்காக அவர் நடத்தும் தொண்டு பற்றி தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜோ சொன்னதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக மைக்கேல் கூறினார். GoFundMe பக்கத்திற்குச் சென்று USD 150 நன்கொடையாக வழங்கியதாக மைக்கேல் கூறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு செய்தி வந்தது, அது அவரது கிரெடிட் கார்டில் வழக்கத்திற்கு மாறாக பெரிய பரிவர்த்தனை செய்துள்ளதாக எச்சரித்தது.

அவர் அந்த மெசேஜை திறந்தபோது, அவர் GoFundMe க்கு USD 15,041 செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது தவறை உணர்ந்த மைக்கேல், அடுத்த 10-15 நிமிடங்களை தனது பணத்தைத் திரும்பப் பெறச் செலவிட்டார், மேலும் அவரது கிரெடிட் கார்டு எண்கள் 4 மற்றும் 1-ல் தொடங்குகிறது என்பதை உணர்ந்தார். ரூ. 12,435 அதாவது USD 150 நன்கொடை அளிக்க முயன்றபோது, தவறுதலாக தனது கிரெடிட் கார்டு எண் 41ஐ டைப் செய்தார், இது USD 150 பதிலாக 15,041 வரை என்று டைப் செய்துவிட்டார்.

அவர் தான் செய்த பிழையை உணர்ந்த பிறகு, மைக்கேல் GoFundMe-இன் கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டார், இதுபோன்ற தவறுகள் பொதுவானது என்று அவர்கள் கூறினார்கள். மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிப்பதாக கஸ்டமர் கேர் நிர்வாகி மைக்கேலிடம் கூறினார். இருப்பினும், நன்கொடைத் தொகை தோன்றுவதையும் பின்னர் நிதியிலிருந்து மறைந்து போவதையும் தொண்டு நிறுவனம் இன்னும் காண முடியும் என்றும் மைக்கேலிடம் கூறப்பட்டது.

இருப்பினும், நன்கொடைத் தொகை தோன்றுவதையும் பின்னர் நிதியிலிருந்து மறைந்து போவதையும் தொண்டு நிறுவனம் இன்னும் காண முடியும் என்றும் மைக்கேலிடம் கூறப்பட்டது.

அவர் ஜோவிடம் பேசத் திட்டமிட்டார், ஆனால் அடுத்த நாள், தாராளமான நன்கொடைக்கு நன்றி தெரிவித்து மக்களிடமிருந்து பல செய்திகளைப் பெற்றார். இதையடுத்து, ரூ.12,46,991க்கு பதிலாக ரூ.82,906 வழங்க முடிவு செய்தார். இந்த முழு அனுபவமும் வின்-வின் சூழ்நிலை என்றும் அவர் கூறினார். ஆனால் அவருக்கு பணம் திரும்ப கிடைத்ததா என்பதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

Desktop Bottom Promotion