வாழும் நோஸ்ட்ரடாமஸின் கணிப்பு படி 2026-ல் உலகம் சந்திக்கப்போகும் 2 பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?

உலகின் மிகவும் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவர் நோஸ்ட்ரடாமஸ். உலகில் நடந்த பல முக்கியமான சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பலரும் அவரை பின்பற்றி தீர்க்கதரிசனங்ளை கூறி வருகின்றனர். அதில் வெகுசிலரின் தீர்க்கதரிசனங்கள் மட்டுமே பலித்து வருகிறது. 'வாழும் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரேசிலிய மனோதத்துவ நிபுணர் அதோஸ் சலோமி, 2026 ஆம் ஆண்டுக்கான தனது கணிப்புகளால் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த முறை, அவரது எச்சரிக்கைகள் உலகிற்கு அச்சமூட்டுவதாக உள்ளன. இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றை முன்கூட்டியே கணித்ததன் மூலம் ஏற்கனவே பிரபலமான சலோமி, இப்போது உலகம் பல ஆபத்துகளின் விளிம்பில் இருப்பதாகக் கணித்துள்ளார்.

Living Nostradamus Issued A Grim Warning For 2026

தனது சமீபத்திய கணிப்புகளில், சலோமி மோதலுக்கான சாத்தியமற்ற இரண்டு பதற்றமான இடங்களை குறிப்பிட்டுள்ளார், அவை ஆப்பிரிக்காவில் உள்ள சஹேல் பிராந்தியம் மற்றும் ஆர்க்டிக் சர்க்கிள். "நைஜரின் வடக்கு பிராந்தியங்களில் தீவிரவாதக் குழுக்களின் எழுச்சியால், மேற்கத்தியப் படைகள் வெளியேறிய பிறகு அந்த பகுதியில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க முயலும் நாடுகளுக்கு இடையே அந்த பகுதி ஒரு மறைமுக மோதல் களமாக மாறக்கூடும்" என்று அவர் கணித்துள்ளார்.

மேலும், ஆர்க்டிக் பகுதி வடக்கில் ஒரு போர்க்களமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். ரஷ்யா, நேட்டோ மற்றும் நட்பு நாடுகள் தங்கள் இராணுவத் திறன்களை வலுப்படுத்தப் போகின்றன. "மிகச் சமீபத்திய இடைமறிப்புகள், ரஷ்யா தனது ஏவுகணை அமைப்புகளை ஆர்க்டிக்கில் உள்ள மூலோபாயப் பகுதிகளுக்கு நகர்த்துவதைக் காட்டுகின்றன. இது 2026-ல் பனி உருகும் காலத்தில் நேட்டோவுடன் நேரடி மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று சலோமே எச்சரித்தார்.

செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு

சலோமியின் மற்றொரு கவலைக்குரிய கணிப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு பற்றியது. செயற்கை நுண்ணறிவு வேகமாக உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டு தொழில்நுட்பம் "மனித நெறிமுறைகளை விஞ்சிச் செல்லத் தொடங்கும்" தருணமாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதர்களின் வசதிக்காக மட்டுமல்லாமல், கையாளுதலுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் முன்னறிவிக்கிறார். மேலும், ஒரு பெரிய உலகளாவிய இணைய நிகழ்வையும் அவர் கணிக்கிறார். இது கடந்தகால தரவு மீறல்களை விட மிகவும் கடுமையான ஒன்றாக இருக்கலாம்.

மற்றொரு பெருத்தொற்று?

வரவிருக்கும் மற்றொரு ஆபத்து கொரோனா போன்ற ஆபத்தான நோயாக இருக்கலாம். சலோமி கோவிட்-19 போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படும் என்று கணிக்கவில்லை என்றாலும், கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளை பாதிக்கும் H5N5 என்ற பறவைக் காய்ச்சல் வகையை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வைரஸ் சமீபத்தில் முதல் மனித உயிரைப் பலிகொண்டது, இது அதன் பரவும் சாத்தியம் குறித்த அச்சங்களை எழுப்பியுள்ளது. இதனால் உலகம் முழுக்க அரசாங்கங்கள் எச்சரிக்கை நிலையில் இருக்கு வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Wednesday, December 31, 2025, 12:13 [IST]
Desktop Bottom Promotion