Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இப்படி இருந்த பரவை முனியம்மா இப்ப என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? ரொம்ப பாவம்...
தமிழ் காமெடி நடிகையாகவும் நாட்டுப்புறப் பாடகியாகவும் இருந்த பரவை முனியம்மாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றியும் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய விளக்கமாக பதிவு தான் இது.
ஏய் சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேரான்டி என்ற பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் தான் நம்ம பரவை முனியம்மா. ஆனால் அதற்கு முன்பாகவே ஊர் முழுக்க சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். அதன்பின் ஆங்காங்கே மேடைகளில் ஏறி நாட்டுப்புறப் பாடல்களைச் பரவச் செய்தார்.
அவருக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்படுகிறது. அதுகுறித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இவர். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

நாடு சும்மா கெடந்தாலும்
அப்படி நாட்டுப்புறப் பாடல்களில் தீவிரமாக இருந்த பரவை முனியம்மாள் நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் என்னும் ஒரு சமூக அக்கறை மற்றும் கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் விஷயங்கள் பற்றியும் பாடிய பாடல்கள் பரவை முனியம்மா அவர்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வைத்தது.

திரைப்பிரவேசம்
நிறைய நாட்டுப் புறப்பாடல்கள் பாடியிருந்தாலும் நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் பாடலை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. அப்படி கிடைத்த முதல் வாய்ப்பு தான் தூள் திரைப்படம்.

தூள் திரைப்படம்
நடிகர் விக்ரம், ரீமாசென், ஜோதிகா ஆகியோர் நடித்த தூள் படம் தான் பரவை முனியம்மா அவர்களுடைய முதல் படம். அந்த முதல் வாய்ப்பை ஒரு போதும் அவர் மிஸ் பண்ணிவிடாமல் பயன்படுத்திக் கொண்டார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமல்லாது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அந்த பாடல் எஞ்சிய பட்டி தொட்டியெங்கும் பரவை முனியம்மாவை தங்கள் வீட்டு பாட்டியாக ஏற்றுக் கொள்ள வழிசெய்தது.

நடித்த படங்கள்
தூள் படத்தில் இவர் பட்டையைக் கிளப்பத் தொடங்கிய பின், வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் வந்தன. கிட்டதட்ட 25 படங்கள் நடித்துவிட்டார். அந்த பாடல்கள் என்னென்ன என்று பார்க்கலாம். தூள், காதல் சடுகுடு, தேவதையைக் கண்டேன், ஏய், ஜெய் சூர்யா, கண்ணாடி பூக்கள், தகதிமிதா, நெஞ்சில் ஜில்ஜில், நாகரீகக் கோமாளி, கை வந்த கலை, சுயேட்சை எம்எல்ஏ, பசுபதி c/o ராசக்காபாளையம், சண்டை, பூ. தோரணை, ராஜாதி ராஜா, தமிழ்ப்படம், மகனே என் மருமகனே, போக்கிரி ராஜா (மலையாளம்), பவானி ஐபிஎஸ், வேங்கை, வெளுத்துக்கட்டு, காசேதான் கடவுளடா, வீரம், மான் கராத்தே என அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

விவேக் காமினேஷன்
நகைச்சுவை நடிகர் விவேக்குடன் இணைந்து இவர் கலக்கிய அனைத்து படங்களும் காமெடிகளில் சூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். கள்ளிப்பால் காமெடி முதல் இன்னும் நிறைய காமெடிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

கிராமத்து சமையல்
கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபா அவர்களால் நடத்தப்பெற்ற சமையல் நிகழ்ச்சிகளில் கிராமத்து சமையல் என்னும் ஒரு பகுதியை தொகுத்து வழங்கியும் அதில் மருத்துவ குணம் மிக்க பாரம்பரிய சமையலை செய்து காட்டியும் அசத்தி வந்தார்.

வெளிநாடுகள்
தொலைக்காட்சி, திரைப்படங்கள், கிராம மேடைகள் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளுக்கும் சென்று இவர் பிரமாண்ட மேடைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

குடும்பம்
பரவை முனியம்மாவுக்கு மதுரைக்கு அருகில் உள்ள பரவை என்னும் கிராமம். இவர் பிறந்தது 1943 ஆம் ஆண்டு. பரவை முனியம்மாவின் கணவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். பரவை முனியம்மா அவர்களுக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர். ஐந்து குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

உடல்நிலை குறைபாடு
பெரிதாக தொழில் ஏதும் இல்லாம காரணத்தால் வீட்டிலேயே இருந்த பரவை முனியம்மாவுக்கு சில வருடங்களுக்கு முன்பாக உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவனிப்பதற்கு ஆளின்றி வறுமையில் வாடி வந்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் நலத்திட்டத்தின் வாயிலாக நலிந்த கலைஞர் என்ற முறையில் ஜெயலலிதா பரவை முகியம்மாவின் பெயரில் வங்கியில் 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொடுத்திருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போது முதலில் முன்வந்து மிகப்பெரிய உதவியைச் செய்தவர் நடிகர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனவளர்ச்சி குன்றிய மகன்
வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக உள்ள பணத்தில் இருந்து மாதம் 6000 ரூபாய் வட்டித் தொகை இவருடைய கைக்கு வந்தது. அதை வைத்துத் தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இவருடைய கடைசி மகனுக்கு வயது 36 ஆகிறது. இவருக்கு மனவளர்ச்சி குன்றியிருப்பதால் இவரை தன்னுடனே வைத்து பாதுகாத்து வருகிறார். தான் இறந்த பின் தன்னிடம் கொடுக்கும் வைப்புநிதி வட்டிப் பணமும் இந்த வைப்பு நிதியை தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்குச் சென்று சேருமாறு உதவிட வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

கலைமாமணி விருது
தன்னுடைய பாடல் பாடும் திறமையாலும் நடிப்புத் திறனாலும் நிரூபித்து பல உச்சங்களைத் தொட்ட காலத்திலேயே தனக்குரிய அங்கீகாரமும் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய விருதுகளை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் பரவை முனியம்மாவுக்கு இருந்து வந்தது. அந்த கவலையெல்லாம் போக்கும் விதமாக தற்போது தமிழக அரசால் நாட்டுப்புறக் கலைஞர் பரவை முனியம்மாவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நம்ம பரவை முனியம்மா.



Click it and Unblock the Notifications
