For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌசல்யாவை கொச்சைப்படுத்தும் மிருகங்களுக்கு இந்த பதிவு!

கௌசல்யாவை கொச்சைப்படுத்தும் மிருகங்களுக்கு இந்த பதிவு!

|
Whats Wrong in Udumalai Kowsalyas Re-Marriage with Parai Musician Sakthi?

தமிழகம் எண்ணற்ற ஆணவக் கொலை வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், உடுமலை ஷங்கர் - கௌசல்யாவின் காதல் திருமணம் மற்றும் ஷங்கரின் ஆணவக் கொலை வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது. வேறு சாதி ஆணை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒரே காரணத்தால், தன் குடும்பத்தாரால் காதல் கணவனை ஆணவக் கொலைக்கு பலிக் கொடுத்து தனி ஆளாக நின்றவர் கௌசல்யா.

ஆனால், தன் கணவனோடு அந்த கௌசல்யாவும் இறந்து, ஒரு புது கௌசல்யா பிறக்கிறார். அவர் சமூக நீதிக்காக போராடுகிறார், தன்னை தற்காத்துக் கொள்ள கராத்தே கற்றுக் கொள்கிறார், பறை இசை கற்கிறார், அம்பேத்கர், பெரியாரை ஆழமாக படிக்கிறார். சாதிக் கொடுமை, சாதி எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு தனது பதிவை வலுவாக பதிவு செய்கிறார்.

தலித் குழந்தைகளின் வளர்ச்சிக்காக போராடுகிறார். அனைத்திற்கும் மேலாக, தன் காதல் கணவனை இழந்த இரண்டே ஆண்டுகளுக்குள் கணவனின் கொலைக்கு காரணமான தன் குடும்பத்தாருக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தருகிறார். ஷங்கரின் காதலியான கௌசல்யா, தமிழ் சமூகத்தில் போராளி கௌசல்யாவாக மாறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's Wrong in Udumalai Kowsalya's Re-Marriage with Parai Musician Sakthi?

There is Nothing Wrong in Udumalai Kowsalya's Re-Marriage with Parai Musician Sakthi. But, Why set of people Humiliating Kowsalya for her bold move.
Desktop Bottom Promotion