For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான நபரை காதலித்து ஏமார்ந்த பெண் - உண்மை கதை!

திருமணமான நபரை காதலித்து ஏமார்ந்த பெண் - உண்மை கதை!

|

என் வயது 32. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர் தான். என் பெற்றோருக்கு நான் இரண்டாவது மகள். எல்லாரையும் போல நானும் எனது தந்தையை ஹீரோவாக பாவித்து வளர்ந்த பெண் தான். என் வாழ்க்கை மிகவும் வண்ணமையாக திகழ்ந்துக் கொண்டிருந்தது.

எனக்கு சிறந்த தோழமைகள் அமைந்திருந்தன. அவர்களுடன் என் வாழ்வில் எல்லா விஷயங்களையும், இரகசியங்களையும் நான் பகிர்ந்துக் கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் இருந்தது. பல சமயங்களில் மற்றவரின் இரகசியங்களையும் கேலி, கிண்டல் செய்து விளையாடியது உண்டு.

தினமும் எங்கள் உணவிற்கும், படிப்பு செலவுக்கும் பணம் ஈட்ட எனது தந்தை மிகவும் கடினமாக உழைத்தார், சில சமயங்களில் கடன் வாங்கினார். என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி தருவார்.

என் தாய், இந்த உலகில் சிறந்தவர் என கூறுவேன். என் தந்தையின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தனது ஒட்டுமொத்த வாழ்வியலையும் மாற்றி அமைத்துக் கொண்டவர் எனது தாய். நிறைய தியாகங்கள் செய்துள்ளார். ஆயினும், நாம் எனது குழந்தை பருவத்தை மிக இனிமையாகவே கழித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Small Things That Maybe The Reason Behind a Bitterness of Relationship!

Real Life Story: Small Things That Maybe The Reason Behind a Bitterness of Relationship!
Desktop Bottom Promotion