Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன?
2018ல் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்க, பெரியாரின் பொன்னான வாக்கியங்கள்!
2018ல் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்க, பெரியாரின் பொன்னான வாக்கியங்கள்!

சாதி, மத வெறி ஒழிய வேண்டும், நம்பிக்கை, தன்மானம், பகுத்தறிவு, ஒழிக்கம் வலவர வேண்டும். மூட நம்பிக்கை தவிர்த்து, தன்னம்பிக்கை வளர்த்துக் கொள் என தமிழ் மக்கள் எண்ணத்தில் புரட்சி விதையை தூவிச் சென்றவர் பெரியார் எனும் ஈரோடு வெங்கடப்பா ராமசாமி.
மது மதத்தை விட கொடியது, அது மதியை அழிக்கும் என அறிவுரைத்தவர். அதை எதிர்த்து போராட்டங்கள் பல நடத்தியவர். தனது வாழ்க்கையை ஏழைகள் மக்களின் தரம் உயர, நிலை உயர பாடுபட்டவர் பெரியார். எவன் ஒருவனிடம் ஒழுக்கமும், நற்பண்புகளும், உண்மையை மறைக்காத குணமும் இருக்கிறதோ அவனே பெரிய மனிதனாக உருவாகிறான் என உரைத்தவர் பெரியார்.
இதோ! ஒருவரிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும், கூடாது என பெரியாரின் பொன்மொழிகள்...
விலை!
இலட்சியத்தை அடைவதற்காக, கஷ்ட, நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.
பதவி!
நெருப்பும் குளிர்ச்சியாகலாம்,
வேப்பெண்ணெய் தேனாகலாம்,
ஆனால்,
பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது.
பெரிய மனிதன்!
மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும்
சிறு வயதில் இருந்தே ஒருவன் நன்றாக கற்றுக் கொண்டானானால்,
அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
நலன்!
வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது,
அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
மதி கெடுக்கும் மது!
மக்களின் ஒழுக்கம் மற்றும் மதியை கெடுப்பது மது.
பகைவன்!
மூட நம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் தான் சமூகத்தின் முதல் பகைவன்.
விதியை, நம்பி மதியை இழக்காதே!
சுபிட்சம்!
ஒரு நாடு சுபிட்சத்தோடு வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயப்பட்டு விடக் கூடாது.
ஒழுக்கம்!
பக்தி என்பது தனிச் சொத்து.
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை.
ஆனால், ஒழுக்கம் இல்லை எனில் பாழ்ப்பட்டுவிடும்.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு!
தாழ்ந்த மக்கள்!
கல்வி அறிவும்
சுய மரியாதை எண்ணமும்
பகுத்தறிவுத் தன்மையுமே
தாழ்ந்து கிடைக்கும் மக்களை உயர்த்தும்!
இருவர்!
உலகில் சந்தோஷமாக வாழ்பவர் இருவர் மட்டுமே.
ஏமாற்றும் அரசியல்வாதிகளும், கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.
ஓட்டு!
நான் என் ஆயுள் உள்ளவரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு புகழ் வார்த்தை சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்.
பலம்!
ஒழுங்காக தன்னை நடத்தி, உண்மையை மறைக்காமல் எல்லாவற்றிலும் நேர்மையை கடைப் பிடிப்பவனுக்கு அது ஒரு தனிப்பட்ட பலத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
மனிதன்!
கடவுளை மாற, மனிதனை நினை!
சாதி, மதம்!
மனிதனை மதம் மிருகமாக்கும்.
சாதி சாக்கடையாக்கும்!
பகுத்தறிவு!
சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு
பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
மாற்றம்!
மாறுதலுக்கு, வளைந்துக் கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.



Click it and Unblock the Notifications