Just In
- 2 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 48 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சச்சினின் சூப்பர் ஃபேன் சுதிர் பற்றி நீங்கள் அறியாத சோகக்கதை!
கிரிக்கெட் கடவுள் சச்சினின் மிகப்பெரிய பக்தனாக வாழ்ந்து வருகிறார் சுதிர்.
உலகின் எந்த நாட்டிற்கு சென்று இந்தியா கிரிக்கெட் விளையாடினாலும் அங்கே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியின் பெரிய பலமே இதுதான். பிற அணிகளுக்கு சொந்த நாட்டை தவிர்த்து அயல் நாட்டில் இந்தியாவிற்கு கிடைக்கும் அளவிற்கு ரசிகர்களின் சப்போர்ட் இருக்காது.
இந்தியா எந்த நாட்டில் சென்று விளையாடினால் ஒரு ரசிகன் மட்டும் அங்கே இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்தி, உடலில் சச்சினின் பெயர் மற்றும் எண்ணை பெயின்ட் செய்து உற்சாகத்துடன் மைதானத்தில் சுற்றிக் கொண்டிருப்பார். பலருக்கும் சச்சினின் அந்த சூப்பர் ஃபேன் சுதிர் குமார் சவுத்திரி என தெரியும்.
ஆனால், அந்த சுதிரின் வாழ்க்கையில் இருக்கும் சோகக்கதை பற்றிப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்...
முஸாபர்பூர்!
சுதிர் முஸாபர்பூரில் ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் மீது, சச்சின் மீதும் ஆறு வயது முதலே அளவற்ற பாசமும், வெறியும் கொண்டிருந்த ஓர் சுப்பர் ஃபேன் சுதிர். கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தில் 14 வயதிலேயே படிப்பை கைவிட்டவர் சுதிர்.
வேலை!
இவருக்கு வேலை ஏதுமில்லை. இவர் ஒரு பால் கம்பெனி, சிக்ஷா மித்ரா, மற்றும் இன்னுமொரு இடத்தில் வேலை செய்திருக்கிறார். ஆனால், வேலைக்கு சேர்ந்த பிறகு எங்கேனும் இந்தியா போட்டி நடைபற்றால் வேலையை விட்டு அங்கே ஓடிவிடுவார், அது எந்த ஊராக இருந்தாலும், நாடாக இருந்தாலும் சரி.
சிக்ஷா மித்ராவில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது பிப்ரவரி 2004ல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டுகளிக்க இவர் வேலையை விட்டு ஓடிவிட்டார். இவருக்கு வயது 34. இன்னும் திருமணமாகவில்லை என வீட்டில் வருந்துகிறார்கள். இவரது பெற்றோர் இவருடன் பேசுவதே இல்லை.
சகோதரி!
சுதிரின் சகோதரி மட்டும் தான் இவருடன் பேசுகிறார். அவ்வப்போது கால் செய்து எங்க இருக்க, என்ன பண்ற, எப்படி இருக்க என பேசுவாராம் இவரது சகோதரி. எப்போதும் தனது போனுடன் பவர்பாங்கும் வைத்திருப்பார் சுதிர். சுவிட்ச் ஆப் ஆகக்கூடாது என்பதில் இவர் கவனமாக இருக்கிறார். ஆயினும் கூட தனது சகோதரியின் அழைப்புகளை இவர் அவ்வப்போது ஏற்பது இல்லையாம்.
திருமணம்!
திருமணம் செய்துக் கொண்டால் இந்திய அணி விளையாடுவதை காண முடியாது என்பதற்காக சுதிர் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எந்த நாடாக இருந்தாலும் சுதிர் இந்தியாவின் போட்டியை காண சச்சின் ஸ்பான்சர் செய்து வருகிறார்.
மேலும், சொந்த வாழ்க்கையை பற்றி கவலையின்றி இப்படி சுதிர் திரிவதை கண்டு இவரது தந்தை மிகுந்த மனவருத்தம் கொண்டிருக்கிறார்.
எரித்துக் கொள்வேன்!
இந்தியா விளையாடும் போட்டிகளை தான் காண இயலவில்லை எனில், தன்னை தானே எரித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என இவர் மிரட்டல் விடுத்திருந்தார் ஒருமுறை. இந்திய அணிகளின் போட்டிகளை காண என்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் சுதிர்.
போலீஸ் மன்னிப்பு!
கான்பூரில் பயிற்சியில் ஈடுபட சச்சின் வந்திருந்த போது, அவருடன் கைகுலுக்க சுதிர் முயற்சித்தார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் சுதிரை தாக்கி தள்ளிவிட்டார். பிறகு, இது சச்சின் அறிந்து, விஷயம் பெரிதாக சுதிரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் அந்த காவல் அதிகாரி.
பியான்ட் தி பவுண்டரி!
இந்திய கிரிக்கெட் அணி பற்றிய பியான்ட் தி பவுண்டரி என்ற டாக்குமென்ட்ரியில் சுதிர் குமாரும் முக்கிய நபராக தோன்றியிருந்தார். சூப்பர் ஃபேன் என்ற பெயரில் இவரை பற்றி விரிவாக கூறியிருந்தனர்.
கிரிக்கெட் கடவுள் சச்சினின் மிகப்பெரிய பக்தனாக வாழ்ந்து வருகிறார் சுதிர்.