Just In
- 20 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 தமிழ் நடிகைகள்!
ரசிகர்கள் என்ற பெயரில் சிலரும், அவர்களை அருகில் சென்ற பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தவறுதலாகவும் என ஒருசில தருணங்களில் தமிழ் நடிகைகள் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
"புகழ், செல்வாக்கு, ஆடம்பரமான வாழ்க்கை அவங்களுக்கு என்னப்பா ரொம்ப ஜாலியா வாழ்க்கையா வாழ்றாங்க..." பெரும்பாலும் பிரபலங்களை பார்த்து ஒரு சாமானிய மனிதன் கூறும் வார்த்தைகள் இவை. எப்போதும் பெரிய, பெரிய விஷயங்களில் கிடைக்கும் சந்தோசத்தை விட, சின்ன, சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷம் தான் பெரிது.
பிரபலங்கள் இழப்பது இந்த சின்ன, சின்ன சந்தோசங்களை தான். தான், சிறு வயதில் ஓடிவிளையாடிய இடங்களை, படித்த பள்ளியை சாதாரணமாக அவர்கள் சென்று பார்த்து ரசிக்க முடியாது. ஒரு பெரும் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொள்ளும். நடிகைகள் என்று வரும் போது அந்த கூடத்தில் சிலர் அவர்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.
அப்படி பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தமிழ் நடிகைகள்....
நக்மா!
நக்மா ஒருமுறை தேர்தல் சமயத்தில் தன் கட்சி எம்.எல்.எ-வால் பொது இடத்தில் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளானார். நக்மாவை அவர் எதிர்பாராத தருணத்தில் பொது இடத்தில் வைத்து முத்தமிட்டார்.
ஸ்ரேயா!
ஸ்ரேயா திருமலை ஏழுமலையான் கோவிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தரிசனம் முடிந்து வரும் போது ஒரு ரசிகர் இவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டார், அவரை சம்பவ இடத்திலேயே ஓங்கி அறைந்தார் ஸ்ரேயா.
நயன்தாரா!
நயன்தாரா ஒருமுறை சென்னையில் பள்ளி விழாவில் கலந்துக் கொள்ள சென்றிருந்த போது. ரசிகர் கூட்டம் அதிகரித்துவிட்டது. போலீசால் கட்டுப்படுத்த முடியமால் போகவே, பல ரசிகர்கள் இவரை தொட்டு பார்க்கும் முயற்சியில் இறங்கினர். இதனால் நயன்தாரா தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்.
ஜோதிகா!
ஜோதிகா ஒருமுறை பொது இடத்தில் பாலியில் வன்முறை ரீதியான முறையில் தாக்கத்திற்கு உள்ளனார். எதிர்பாராத விதமாக இது, வீடியோ பதிவு மூலமாக தான் கண்டறியப்பட்டது. ஒரு நபர் பொது இடத்தில் ஜோதிகாவை தவறான ரீதியில் தீண்டி சென்றார்.
முமைத்கான்!
ஸ்டார் ஹோட்டலில் ஒருமுறை, ஒரு நபர் முமைத்கானை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பிரயோகம் செய்து பேசினார்.
ஜெனிலியா!
ஐதராபாத்தில் ஒருமுறை பொது இடத்தில் ரசிகர் ஒருவர் ஜெனிலியாவிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டார். ஆத்திரமடைந்த ஜெனிலியா பளார் என அறைந்தார். சுதாரித்த பவுன்சர் பாயிஸ் மற்றும் போலீஸ் அவரை சுற்றி வளைத்து பாதுகாப்பு கொடுத்தனர்.
நமிதா!
சென்னையில், பெங்களூர் என இருமுறை நமீதா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். சென்னையில் ப்ரைவேட் நிகழ்ச்சியல் கலந்துக் கொள்ள வந்த போது அவரது அந்தரங்க பாகங்களை ஒருவர் தொட முயன்றார். பெங்களூர்-ல் ஒருமுறை இது போன்ற சம்பவம் 2007-ல் நடந்தது.
தமன்னா!
விசாகப்பட்டின விமான நிலையத்தில் போராட்டாக் காரர்கள் தமன்னாவை வழிமறித்து, அவரை அவரகளது துதி பாட கூறி வற்புறத்தினர்.
சமந்தா!
திருப்பதியில் மூன்று இளைஞர்கள், ப்ரைவேட் நிகழ்ச்சி ஒன்றில், திறப்பு விழாவின் போது பின்புறத்தில் தீண்டி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 2011-ல் நடந்தது.
ராய் லட்சுமி!
புதுச்சேரியில் படப்பிடிப்பின் போது, ராய் லட்சுமியிடம் கையொப்பம் கேட்டு சென்றனர். புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அணுகி, அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட, ஷூட்டிங் ரத்தானது.
ஹன்ஷிகா!
கோவையில் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள வந்த போது, அவரது ரசிகர்களே ஹன்சிகாவை தகாத முறையில் தீண்ட முற்பட்டனர். பாதுகாவலர்கள் உடனே அவரை சுற்றி வளைத்து, காரில் ஏற்றி அனுப்பினர்.
ப்ரியாமணி!
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் விளையாட்டின் போது, ஒரு பிரபலம் குடிபோதையில், ப்ரியாமணியிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சி செய்தார்.