Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!
டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் அறிவுரை அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.
இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாக இருந்த டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் மறைந்தாலும், இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். அப்துல் கலாம் அவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்தவர். இதற்கு இவரது குணம் மட்டுமின்றி, பேச்சாற்றலையும் காரணமாக சொல்லலாம்.
டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தாலும், தன் அயராத உழைப்பினால், பலவற்றை சாதித்து, உலக அளவில் மிகவும் பிரபலமான மனிதரானதோடு, மிகச்சிறந்த பேராசிரியராகவும் விளங்கினார். மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் பல அறிவுரைகளை வழங்கினார். இவரது அறிவுரை அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.
இங்கு டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் சில ஊக்கமூட்டும் மற்றும் எழுச்சியூட்டும் பொன்மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொன்மொழி 1
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால்,
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

பொன்மொழி 2
கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது அல்ல..
உன்னை தூங்க விடாமல்
செய்வதே (இலட்சிய) கனவு

பொன்மொழி 3
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பொன்மொழி 4
நாம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்,
அனைவருக்கும் திறமையை
வளர்த்துக் கொள்ள ஒரே
மாதிரி வாய்ப்புகள்
உள்ளன.

பொன்மொழி 5
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...

பொன்மொழி 6
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்,
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

பொன்மொழி 7
ஒரு முட்டாள் தன்னை முட்டாள்
என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான்.
ஆனால்,
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்
முட்டாளாகின்றான்

பொன்மொழி 8
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

பொன்மொழி 9
கஷ்டம் வரும் போது
கண்ணை மூடாதே,
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
அதை வென்றுவிடலாம்.

பொன்மொழி 10
உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...
ஏனென்றால்,
கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு.



Click it and Unblock the Notifications