Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Leo Movie: லியோ படத்தில் வரும் கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயம் தெரிஞ்சா.. அசந்து போவீங்க...
Leo Movie Hyena: நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தை பார்த்தவர்கள் இது ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
அதுவும் இந்த திரைப்படத்தில் கழுதைப்புலியுடன் விஜய் போடும் சண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. லியோ திரைப்படத்தில் கழுதைப்புலி இடம் பெற்றதும், இந்த கழுதைப்புலியின் குணங்கள் லியோ திரைப்படத்தின் கதைக்கருவா இருக்குமோ என்று பலரும் நினைக்கலாம்.

எதுவாயினும், கழுதைப்புலிகளின் உண்மைகளின் குணங்களைப் பற்றி பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்காது. இப்போது லியோ படத்தில் வரும் கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயங்களைக் காண்போம்.
நான்கு வகைகள்
கழுதைப்புலியில் 4 வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை கழுதைப்புலி இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ளது. முதல் வகை புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி, இரண்டாவது வரிகள் கொண்ட கழுதைப்புலி, மூன்றாவது வகை கிரே கழுதைப்புலி, நான்காவது வகை ஓநாய் மாதிரியான தோற்றத்தைக் கொண்ட கழுதைப்புலி. இந்த கழுதைப்புலிகள் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன.
கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்
* மற்ற மிருகங்களை விட, கழுதைப்புலிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பைப் கொண்டது. அதாவது இந்த கழுதைப்புலிகளில் பெண்கள் தான் வலிமையானது. பெண் கழுதைப்புலிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும்.
* கழுதைப்புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இரைத் தேடும். அதுவும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டு மீதமுள்ளதை பெரும்பாலும் இந்த கழுதைப்புலி தான் உட்கொள்ளும்.
* கழுதைப்புலியின் தாடைகள் மற்ற விலங்குகளை விட வலிமையானவை. அதுவும் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள், பற்கள், கொம்புகள் போன்ற கடினமான பகுதிகளையும் சாப்பிடும் அளவில் மிகவும் வலிமையானவை.
* முக்கியமாக கழுதைப்புலிகள் நல்ல நட்பு எண்ணம் கொண்டவை. சொல்லப்போனால் நட்பிற்கு உதாரணமாக கழுதைப்புலியைக் கூறலாம்.
* பலரும் பாம்பை சீண்டினால் அது பழிவாங்கும் என்று சொல்வார்கள். உண்மையில் அது தவறு. ஆனால் கழுதைப்புலிகள் பழிவாங்கும் புத்திக்கூர்மை கொண்டவை. தன்னை யாரேனும் சீண்டினால், எரிச்சலூட்டினால் அல்லது இடையூறு செய்தால், அது அவர்களை குறி வைத்து தாக்கும்.



Click it and Unblock the Notifications