Latest Updates
-
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என்
International Yoga Day 2026: யோகா உலகளவில் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சிறந்த வழிமுறையாக கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் தொன்மையான, கண்டங்கள் கடந்து உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'சர்வதேச யோகா தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை மற்றும் சீரான முதுமை காலத்தை ஊக்குவிக்கும், பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்படும் இந்தியாவின் பொக்கிஷத்தை இந்த நாள் கொண்டாடுகிறது.

சமஸ்கிருத மொழியிலிருந்து உருவான 'யோகா' என்ற சொல்லின் பொருள் 'இணைத்தல்' அல்லது 'ஒன்று சேர்த்தல்' என்பதாகும், இது உடல் மற்றும் உணர்வுநிலை ஆகியவற்றின் இணைப்பையும் குறிக்கிறது. யோகா பயிற்சியால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தின் வரலாறு
செப்டம்பர் 27, 2014 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69-வது கூட்டத்தொடரின் தொடக்க உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினத்திற்கான யோசனையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். "யோகா என்பது நமது பண்டைய பாரம்பரியத்திலிருந்து நமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற கொடையாகும். மனம் மற்றும் உடல், சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை யோகா வெளிப்படுத்துகிறது. இது நமது உடல்நலத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியமான ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது உங்களை நீங்களே அறிந்துகொள்வதோடு, உலகம் மற்றும் இயற்கையுடனான ஒன்றிணைந்த உணர்வை கண்டறியும் ஒரு வழியாகும்," என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 11, 2014 அன்று, 175 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 69/131 என்ற தீர்மானத்தின் மூலம், ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
2023-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்குப் பிரதமர் மோடி தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யோகா ஆர்வலர்கள் பங்கேற்றதன் கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.
2026 சர்வதேச யோகா தினத்தின் தீம்
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் தீம் "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா(Yoga for Healthy Ageing)" என்பதாகும். இது நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக யோகாவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தீம், மக்கள் ஆயுட்காலம் மீது மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் காலமான 'ஆரோக்கியக் காலம்' மீதும் கவனம் செலுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரோக்கியமான முதுமையில் யோகாவின் பங்கு, உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" தொடர்பான வெளியீடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.
சர்வதேச யோகா தினம் 2026 கொண்டாட்டங்கள்
சர்வதேச யோகா தினம் 2026-இன் முக்கியக் கொண்டாட்டம், மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஜூன் 21 அன்று நடைபெறும். பாஜக தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட மாநில அரசு, அதிகபட்சப் பங்கேற்பிற்கான கின்னஸ் உலக சாதனையை இலக்காகக் கொண்டு, பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்திருக்கிறது. ஜூன் 14 அன்று ஒரு சிறப்பு இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது, அதன் மூலம், குடிமக்கள் ஒரு கட்டணமில்லா எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இந்திய நிரந்தரத் தூதரகம், இந்தியாவின் இந்த மரபைக் கொண்டாடுவதற்காக, ஜூன் 18 அன்று ஐ.நா தலைமையகத்தில் உலகெங்கிலும் இருந்து மக்களை வரவேற்கும். இதில் ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மற்றும் நியூயார்க்கில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். இதற்கிடையில், பிரதமர் மோடியின் யோகா குருவான எச்.ஆர். நாகேந்திரா, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
