Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை
Chanakya Niti: சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவருக்கு மனித வாழ்க்கைக் குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆழமான புரிதல் இருந்தது. சாணக்கியரின் கொள்கைகள் எந்த காலகட்டத்திற்கும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இதனை பின்பற்றுவது கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழிநடத்தலாம்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சாணக்கிய நீதி பிரபலமானதாக இருப்பதற்கு காரணம் அதன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தன்மைதான். ஆண்கள் மற்றும் பெண்களின் குணாதிசயங்கள் பல சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் எந்த வகையான ஆண்களைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இந்த நூலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆண்களுடன் நட்பு அல்லது வேறு ஏதேனும் உறவு கொள்வது பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அவர்கள் எந்தெந்த வகையான ஆண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களை மதிக்காத ஆண்கள்
சாணக்கிய நீதி மற்றும் மனுஸ்மிருதியின்படி, பெண்களை இழிவாக நினைக்கும் மற்றும் பெண்களை அவமதிக்க முற்படும் எந்தவொரு ஆணிடமும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தகைய ஆண்களால் ஒரு பெண் பொருளாதார ரீதியாக முன்னேறுவதையோ, சுதந்திரமாக இருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும், அவர்கள் மதநெறிக்கு எதிரானவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். எனவே, அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நற்குணம் இல்லாத ஆண்கள்
சாணக்கிய நீதி படி, நற்பண்பு இல்லாத ஒரு ஆணுடன் எந்தப் பெண்ணும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அத்தகைய ஆண்களுக்குப் பெண்கள் அனைவர் மீதும் தீய எண்ணங்களே இருக்கும். அத்தகைய நபரை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. பிறருடைய மனைவியின் மீது தவறான எண்ணம் கொள்வது தர்மத்திற்கு முரணான செயலாகும். இத்தகைய குணம் கொண்ட ஆண்களிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது.
மூர்க்கத்தனமான ஆண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்களுக்கு எதிராகக் கையை ஓங்கும் ஒரு ஆணுடன் எந்தப் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடாது. அத்தகைய ஆணிடமிருந்து ஒரு பெண் விலகியே இருக்க வேண்டும். பெண்ணுக்கு எதிராகக் கையை ஓங்கும் எந்தவொரு ஆணும் அரக்கனாகவே வகைப்படுத்தப்படுகிறான். அப்படிப்பட்ட ஆண்கள் தங்களின் முன்கோபத்தால் எந்த நிலையிலும் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்கள்.
போதைக்கு அடிமையான ஆண்கள்
சாணக்கிய நீதி மற்றும் மனுஸ்மிருதியின்படி, போதைக்கு அடிமையான ஒருவருடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது. அத்தகைய நபர் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்றவர் அல்ல. எனவே, அத்தகைய நபரிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது. இப்படிப்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் வாழ்க்கை நரகத்தை விட மோசமானதாக இருக்கும்.
வஞ்சகமான ஆண்கள்
சாணக்கிய நீதியின்படி, வஞ்சகமும் ஏமாற்றும் குணமும் கொண்ட ஆண்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தக்கூடும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் அத்தகைய ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள் தங்களின் சுயநலத்திற்காக யாரை வேண்டுமென்றாலும் பலி கொடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications

