Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை
Chanakya Niti: சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவருக்கு மனித வாழ்க்கைக் குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆழமான புரிதல் இருந்தது. சாணக்கியரின் கொள்கைகள் எந்த காலகட்டத்திற்கும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இதனை பின்பற்றுவது கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழிநடத்தலாம்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சாணக்கிய நீதி பிரபலமானதாக இருப்பதற்கு காரணம் அதன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தன்மைதான். ஆண்கள் மற்றும் பெண்களின் குணாதிசயங்கள் பல சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் எந்த வகையான ஆண்களைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இந்த நூலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆண்களுடன் நட்பு அல்லது வேறு ஏதேனும் உறவு கொள்வது பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அவர்கள் எந்தெந்த வகையான ஆண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களை மதிக்காத ஆண்கள்
சாணக்கிய நீதி மற்றும் மனுஸ்மிருதியின்படி, பெண்களை இழிவாக நினைக்கும் மற்றும் பெண்களை அவமதிக்க முற்படும் எந்தவொரு ஆணிடமும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தகைய ஆண்களால் ஒரு பெண் பொருளாதார ரீதியாக முன்னேறுவதையோ, சுதந்திரமாக இருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும், அவர்கள் மதநெறிக்கு எதிரானவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். எனவே, அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நற்குணம் இல்லாத ஆண்கள்
சாணக்கிய நீதி படி, நற்பண்பு இல்லாத ஒரு ஆணுடன் எந்தப் பெண்ணும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அத்தகைய ஆண்களுக்குப் பெண்கள் அனைவர் மீதும் தீய எண்ணங்களே இருக்கும். அத்தகைய நபரை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. பிறருடைய மனைவியின் மீது தவறான எண்ணம் கொள்வது தர்மத்திற்கு முரணான செயலாகும். இத்தகைய குணம் கொண்ட ஆண்களிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது.
மூர்க்கத்தனமான ஆண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்களுக்கு எதிராகக் கையை ஓங்கும் ஒரு ஆணுடன் எந்தப் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடாது. அத்தகைய ஆணிடமிருந்து ஒரு பெண் விலகியே இருக்க வேண்டும். பெண்ணுக்கு எதிராகக் கையை ஓங்கும் எந்தவொரு ஆணும் அரக்கனாகவே வகைப்படுத்தப்படுகிறான். அப்படிப்பட்ட ஆண்கள் தங்களின் முன்கோபத்தால் எந்த நிலையிலும் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்கள்.
போதைக்கு அடிமையான ஆண்கள்
சாணக்கிய நீதி மற்றும் மனுஸ்மிருதியின்படி, போதைக்கு அடிமையான ஒருவருடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது. அத்தகைய நபர் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்றவர் அல்ல. எனவே, அத்தகைய நபரிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது. இப்படிப்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் வாழ்க்கை நரகத்தை விட மோசமானதாக இருக்கும்.
வஞ்சகமான ஆண்கள்
சாணக்கிய நீதியின்படி, வஞ்சகமும் ஏமாற்றும் குணமும் கொண்ட ஆண்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தக்கூடும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் அத்தகைய ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள் தங்களின் சுயநலத்திற்காக யாரை வேண்டுமென்றாலும் பலி கொடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications
