Latest Updates
-
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா?
இந்தியா தற்போது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதாரத்தை மட்டும் வைத்து நிர்ணயிப்பதல்ல அதன் உள்கட்டமைப்பையும் வைத்தும்தான். 2026-இல் இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக மேம்பட்டு வருகிறது. இருப்பினும், சீரான நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு கடந்த காலங்களை விட இப்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

பணவீக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் காரணம் காட்டி, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அதிகார அமைப்புகள் சுங்கக் கட்டணங்களை 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. பல சுங்கச்சாவடிகளில், ஒரு கார் பயணத்திற்கான கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை அல்லது பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், சுங்கச் சாவடிகளுக்கே தனி பட்ஜெட் போட வேண்டியிருக்கும். உங்கள் பயணச் செலவுகளைச் சரியாகத் திட்டமிட, அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் இடங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் இந்தியாவில் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் டாப் 5 டோல்கேட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கலாபூர் சுங்கச்சாவடி - மும்பை-புனே விரைவுச்சாலை
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை-புனே விரைவுச்சாலையில் அமைந்துள்ள கலாபூர் சுங்கச்சாவடி, தற்போது இந்தியாவில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஒன் பாயிண்ட் சுங்கச்சாவடியாக உள்ளது. 2026-ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, ஒரு காருக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ. 320 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 94.5 கி.மீ நீளமுள்ள சாலையை உள்ளடக்கியதாக இருந்தாலும், சுங்கக் கட்டணம் முக்கியமாக இந்தச் சாவடியிலேயே வசூலிக்கப்படுகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் மலைப்பாதை பகுதியைப் பராமரிப்பதற்கான அதிக செலவு காரணமாக, இந்த சுங்கச் சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த பாதை அடிக்கடி பயணம் செய்பவர்கள் ரூ. 10,000-க்கும் அதிகமான விலையிலான மாதாந்திர பாஸ் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேசமயம் FASTag இல்லாமல் நுழைந்தால், சுங்கக் கட்டணத்தைப் போல இருமடங்கான ரூ. 640 அபராதம் உடனடியாக விதிக்கப்படுகிறது.
அடல் சேது / MTHL - மும்பை To நவி மும்பை
'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்' (MTHL) என்று பரவலாக அறியப்படும் 'அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவா ஷேவா அடல் சேது', இந்தியாவின் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட கடல்வழிப் பாலமாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடியாகவும் திகழ்கிறது. இதில் 21.8 கி.மீ தூரப் பயணத்திற்கு கார் உரிமையாளர்கள் ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்திய பொறியியல் துறையின் ஒரு மகத்தான சாதனையாகக் கருதப்படும் இப்பாலம், அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பயண நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்தும் வசதி ஆகியவற்றிற்காக இந்த அதிகக் கட்டணத்தைக் கொண்டுள்ளது. 2026-ல் பராமரிப்புப் பணிகளுக்காகக் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சில நிமிடங்களிலேயே கடலைக் கடக்கும் இந்த வசதி, ஒரு காஸ்ட்லியான பயண அனுபவமாக மாறியுள்ளது.
ஷேஷகிரிஹள்ளி சுங்கச்சாவடி - பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை தென்னிந்தியாவிலேயே அதிக கட்டணம் கொண்ட பாதையாக மாறியுள்ளது. ஷேஷகிரிஹள்ளி சுங்கச்சாவடியில், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ. 170 ஆகும். தேசிய நெடுஞ்சாலை 275-ல் அமைந்துள்ள இந்தச் சுங்கச்சாவடியில் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டண முறைக்கான சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முழு கட்டணமும் ஃபாஸ்டேக் மூலமாகவே வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருந்தபோதிலும், அதிவேகப் பயணம் மற்றும் தடையற்ற போக்குவரத்து வசதி காரணமாக இந்த சாலையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவதில்லை.
சைத்பூர் சுங்கச்சாவடி - டெல்லி-மீரட் விரைவுச்சாலை
டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் சைத்பூர் முக்கிய சுங்கச்சாவடியாகச் செயல்படுகிறது. டெல்லிக்கும் மீரட்டிற்கும் இடையிலான முழுப் பயணத்திற்கும் வாகன ஓட்டிகள் சுமார் ரூ. 160 கட்டணமாகச் செலுத்துகின்றனர். 2026-ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தைக் கணக்கிடும் ANPR அமைப்பு இங்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தப் முழுப் பயணத்திற்கான மொத்த சுங்கக் கட்டணம் நாட்டின் மிக அதிக கட்டணங்களில் ஒன்றாக உள்ளது. நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, வெறும் 45 நிமிடங்களில் மீரட்டைச் சென்றடைவதால் இந்த சாலையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
ஜெவார் மற்றும் மதுரா சுங்கச்சாவடி - யமுனா விரைவுச்சாலை
நொய்டா மற்றும் ஆக்ராவை இணைக்கும் யமுனா விரைவுச்சாலையில் மூன்று முக்கிய சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் ஜெவார் மற்றும் மதுரா ஆகிய இடங்களில் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு, ஒரு பகுதிக்கு ரூ. 150 முதல் ரூ. 165 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுப் பயணத்திற்கான மொத்தக் கட்டணம் ரூ. 440-க்கும் அதிகமாக இருப்பதால், இது இந்தியாவின் மிக அதிக கட்டணம் கொண்ட நெடுஞ்சாலைப் பாதைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications
