Latest Updates
-
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இந்த அறிகுறிகளை செக் பண்ணி பாருங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...
பெங்களூரை வெறும் 3 இலட்சத்துக்கு விற்ற முட்டாள் இந்திய அரசர்... அதனை வாங்கியவர் யார் தெரியுமா?
History of Bangalore: பெங்களூருவின் வரலாறு என்பது மிகவும் பல திருப்பங்கள் நிறைந்தது மற்றும் சுவாரஸ்யமானது. கர்நாடகாவின் தலைநகரமாகவும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாகவும் இப்போது அறியப்படும் பெங்களூரு கடந்த காலத்தில் மைசூரு சாம்ராஜ்யத்தின் அங்கமாக இருந்து.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெங்களூர், அப்போது மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்ட கர்நாடகாவின் தலைநகராக மாறியது. இன்று ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டும் பெங்களூரு நகரம் ஒரு காலத்தில் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

நீங்க நம்பலானாலும் அதான் நிஜம். இந்த சுவாரஸ்யமான விற்பனைக்கு பின்னால் இருக்கும் கதையைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிக்க தேவராஜா யார்?
1673 ஆம் ஆண்டில், சிக்க தேவராஜா மைசூர் அரியணையில் ஏறினார் மற்றும் மைசூர் இராஜ்ஜியத்தின் எல்லைகளை மிகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்திய பெருமைக்குரியவர் இவர்தான்.
முன்னாள் விஜயநகரப் பேரரசை மீண்டும் நிறுவும் நோக்கத்துடன் இக்கேரி, பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட ஸ்ரீ ரங்கா VI-ஐ தோற்கடித்த அவர் ஒரு சிறந்த இராணுவ தளபதியாக அவர் இருந்தார். மைசூரின் செல்வாக்கை தெற்கே திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க மதுரை சொக்கநாத நாயக்கரை அவர் தோற்கடித்தார்.
மராட்டியர்களுடனான போர்
தென்னிந்தியாவில் படையெடுப்பின் போது பிஜப்பூர் சுல்தானகத்தின் பழைய பிரதேசங்களைக் கைப்பற்ற முயன்றபோது, மராட்டியப் பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தைக் கைப்பற்றினார்.
ஏப்ரல் 1682 இல், சிக்க தேவராஜா மராட்டியர்களுக்கு எதிராக பல போர்களில் வெற்றி பெற்றார், மேலும் இக்கேரியின் பசப்ப நாயக்கா, கோல்கொண்டாவின் குதுப் ஷா மற்றும் சிவாஜியின் மகன் சாம்பாஜி ஆகியோரின் கூட்டுப் படைகளை இன்றைய ஹாசனில் உள்ள பனாவராவில் தோற்கடித்தார்.
மராட்டியர்கள் மற்றும் முகலாயர்கள்
சிவாஜியின் தந்தை ஷாஹாஜி பீஜப்பூர் இராணுவத்தில் ஒரு ஜெனரலாக இருந்தார், மேலும் அடில் ஷாஹியால் பெங்களூருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது பின்னர் அவரது மகன் எகோஜிக்கு சென்றது, அவர் 1674 இல், தஞ்சாவூரில் உள்ள உள்ளூர் ஆட்சியாளரின் வாரிசு தகராறைத் தீர்ப்பதற்காக அடில் ஷாவால் அனுப்பப்பட்டார். இறுதியில், எகோஜி தஞ்சாவூரின் அரசராக முடிசூட்டினார், மேலும் பெங்களூரு தொடர்பாக குடும்ப தகராறை எதிர்கொண்டார்.
சிவாஜி மற்றும் பின்னர் அவரது மகன் சாம்பாஜி இருவரும் பெங்களூரை விரும்பினர். 1686 இல், முகலாயப் பேரரசு பீஜாப்பூரைக் கைப்பற்றியது, அடுத்த ஆண்டில், அவர்கள் கோல்கொண்டா மீது படையெடுத்தனர். அதன்பிறகு, தென்னிந்தியாவுக்கான வாயில்கள் கர்னாட பேரரசு என்று அழைக்கப்பட்டதால், அவர்கள் தெற்கு ராஜ்ஜியங்களின் மீது தங்கள் தீவிரத்தை அதிகரித்தனர்.
காசிம் கானின் தலைமையில், முகலாயப் படைகள் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா வழியாக தங்கள் ஊடுருவலைத் தொடங்கியது.
சிக்க தேவராஜா முகலாயரின் கைகளில் இருந்து தும்கூரைக் காப்பாற்றினார், ஆனால் எகோஜி பெங்களூரை இழக்கும் அச்சுறுத்தலில் இருந்தார். பி முடாச்சாரியா, 'The Mysore Mughal Relations (1686-87)' என்ற புத்தகத்தில், அந்த நேரத்தில் மராத்தியர்கள் பொருளாதாரரீதியாக பலவீனமாக இருந்ததாகவும், உள்ளூர் ஆட்சியாளர்களால் பெங்களூரு மாகாணத்தில் அடிக்கடி படையெடுப்புகளால் ஏற்படும் சுமை தாங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே எகோஜி பெங்களூரை அதிக விலைக்கு ஏலம் எடுத்தவருக்கு விற்க முடிவு செய்தார். சிக்க தேவராஜிடம் பேரம் பேசி, பெங்களூரை ரூ.3 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டார். சிக்கா தேவராஜா தனது படைகள் நகரத்தை கைப்பற்றுவதற்கு முன்பே பணம் செலுத்தினார்.
பெங்களூருக்காக நடந்த போட்டி
சாம்பாஜி பழைய குடும்ப தகராறைத் தீர்ப்பதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொண்டார் மற்றும் சிக்க தேவராஜாவின் இராணுவம் அங்கு செல்வதற்கு முன்பு நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற தனது தளபதிகளான சாந்தாஜி மற்றும் கேசவ திரியம்பக் பந்த் மற்றும் செஞ்சியின் ஆளுநரான ஹாராஜி ஆகியோரை அனுப்பினார்.
ஆனால், பரிவர்த்தனை நடந்துகொண்டிருந்தபோது, காசிம் கானின் தலைமையில் முகலாயப் படை வந்து, நகரத்தை ஆக்கிரமித்து, அதன் அரண் மீது 1687 ஜூலை 10 அன்று முகலாயக் கொடியை ஏற்றியது. மராத்தியர்கள் நகரத்தை அடைந்தபோது, முகலாயக் கொடி பறப்பபதைக் கண்டார்கள், அதனால் அவர்கள் பின்வாங்கினார்கள்.
திருமலராயரால் எழுதப்பட்ட சமகாலப் படைப்பான 'அப்ராதிமா விர சரிதம்' படி, சிக்க தேவராஜா பெங்களூருவை கைப்பற்ற உறுதிபூண்டார், மேலும் அவர் முகலாய படைகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தார். இருப்பினும், பேரரசர் ஔரங்கசீப்பின் நட்பைப் பெறுவதற்காக, அவர் மராத்தியர்களுடன் போரிட்டதாக சில குறிப்புகள் கூறுகின்றன.
முகலாயர்களுடனான ஒப்பந்தம்
ஜூலை 14, 1687 இல், காசிம் கான் சிக்க தேவராஜா மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார், அதன்படி பெங்களூரு சிக்க தேவராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பெங்களூரு வழியாக சிராவிற்கு முகலாயர்களின் போக்குவரத்தை உறுதிசெய்து மற்றும் தும்கூரில் அவர்கள் தங்கள் பிராந்திய அரசாங்கத்தை நிறுவினர்.



Click it and Unblock the Notifications












