விநாயகர் சதுர்த்தி 2023: விநாயகருக்கு எந்த இலையை வைச்சு கும்பிட்டா என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Ganesh Chaturthi 2023: மக்களின் விருப்ப பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. இந்து மதத்தின் முக்கிய கடவுளான விநாயகப் பெருமான், தம் பக்தர்களின் வாழ்வில் உள்ள தடைகளை நீக்குவதாக பரவலாக அறியப்படுகிறார். விக்ஹர்தா என்றும் அழைக்கப்படுபவர், அவர் ஞானம் மற்றும் புத்தியின் கடவுளாவார்.

எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன், விநாயகப் பெருமானை வழிபடுவது அதில் வெற்றியைத் தரும். அவர் தொடக்கத்தின் கடவுள் மற்றும் அவருக்கு பிடித்த வகையில் வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் விநாயகர் வழங்குவார்.

Leaves To Offer To Ganesha During Ganesh Chaturthi

புத்தியின் கடவுளை அவருக்கு பிடித்த இனிப்பு-கொழுக்கட்டை மற்றும் புனித இலைகளை வைத்து வணங்குவது அவரை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் ஒரு எளிய வழியாகும்.

பங்க்ராயா இலை

நீங்கள் உங்கள் வேலையில் பதவி உயர்வு பெற விரும்பினால் அல்லது உங்கள் பணியிடத்தில் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால் இந்த இலை உங்கள் ஆசையை நிறைவேற்றும். விநாயகப் பெருமானை வணங்க, 'கனாதிசாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது, கடவுளுக்கு ஒன்பது பங்க்ராய இலைகளை அர்ப்பணிக்க வேண்டும்.

வில்வ இலை

ஆரோக்கியமான குழந்தைக்கான ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றும் மந்திர இலை இது. மேலும், கருவுறுதல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் 'உம்புத்ரே நமஹ' என்று ஜபிக்கும் போது விநாயகப் பெருமானுக்கு ஏழு வில்வ இலைகளை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அர்ஜுன இலை

உறுதியான இதயம் மற்றும் உடலில் நல்ல இரத்த ஓட்டம் இருக்க, ஒருவர் பதினொரு அர்ஜுன இலைகளை ஞானத்தின் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். மேலும் 'கபிலாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது இந்த இலைகளை வழங்குவது நல்லது.

பிரியாணி இலை

எல்லோரும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள், ஞானம் மற்றும் கல்வியின் அதிபதியான விநாயகப் பெருமான் மட்டுமே அதை உங்களுக்கு அருள முடியும். சமூகப் புகழை அடைய, 'சதுர்ஹோதேரி நமஹ்' என்ற மந்திரத்தை உச்சரித்து, ஏழு பிரியாணி இலைகளை விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

செவ்வரளி இலை

நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள் இந்த இலையை விநாயகருக்கு வழங்க வேண்டும். 'விகத்யா நமஹ்' என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது, விநாயகப் பெருமானுக்கு நீங்கள் ஐந்து செவ்வரளி செடியின் இலைகளை அர்ச்சனை செய்தால், அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் நீக்குவார்.

கேதகி இலை

உங்கள் புதிய தொழிலைத் தொடங்குவதற்கு முன், விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். ஒன்பது கேதகி இலைகளை சமர்பிப்பதன் மூலமும், 'சித்திவிநாயக நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் விநாயகரின் ஆசியைப் பெறலாம்.

எருக்கம் இலை

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய விரும்புபவர்கள் 'விநாயக நம' என்ற மந்திரத்தை உச்சரித்து போது விநாயகருக்கு ஒன்பது எருக்கம் இலைகளை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஷமி இலை

சனி பகவான் ஒருவரின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் போது அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கலாம். இந்த தீங்கான தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஒன்பது ஷமி இலைகளை சமர்பித்து, 'சுமுகாய நமஹ்' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

இலந்தைப்பழ மர இலை

தங்களின் ஆரோக்கியத்திற்காகவும் பிறர் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், 'லம்போதராய நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஐந்து இலந்தைப்பழ மர வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.

Desktop Bottom Promotion