Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
ஹைதராபாத் நிஜாம் 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக கொடுத்தாரா? இந்தியாவின் மிகப்பெரிய ரகசியம் வெளிய வந்துருச்சு...
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் அது பல ராஜ்ஜியங்களாக, சமஸ்தானங்களாக அரசர்கள், சுல்தான்கள் மற்றும் நவாபுகளால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் பொற்காசுகளை பொதுமக்கள் நன்மைகளுக்காகவும், தொண்டுகளுக்காகவும் நன்கொடையாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
தங்கள் செல்வத்தை தாராளமாக வழங்கிய அரச குடும்பங்களின் கதைகள் இந்திய வரலாறு முழுவதும் நிரம்பியுள்ளது. அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஹைதராபாத் நிஜாம். ஹைதராபாத்தின் 7வது நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் இந்திய அரசுக்கு 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியதைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 5000 கிலோ தங்கத்தை தானம் செய்வதை நம்புவது கடினம்தான். இந்த சம்பவத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வரலாற்றில் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலிகான் பெரும் செல்வந்தராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவரிடம் டன் கணக்கில் தங்கம் மற்றும் கிலோ கணக்கில் விலை மதிப்பில்லாத வைரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் 5000 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருக்கலாம் என்பது நம்பத்தகுந்ததாக இருக்கலாம். ஆனால் அதனை முழுமையாக நம்பிவிட முடியாது. 5000 கிலோ தங்கம் நன்கொடையின் பின்னணியில் உள்ள புதிரான கதையை மேற்கொண்டு பார்க்கலாம்.
1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் கதை
1965 இல், இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது போரில் ஈடுபட்டன. போர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இந்தியாவும் இந்த சவாலை எதிர்கொண்டது. அப்போது, பாரத பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ராணுவ நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த காலகட்டத்தில், அவர் ஹைதராபாத் நிஜாமையும் சந்தித்தார்.
நன்கொடை அல்ல, முதலீடு
இந்த சந்திப்பிற்குப் பிறகு, பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ நிஜாம், மீர் உஸ்மான் அலி கான் 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்ததாக வதந்திகள் பரவின. இதைப் பற்றி முரண்பட்ட கணக்குகள் இருந்தாலும், ஏழாவது நிஜாமின் பேரன்களில் ஒருவரான நவாப் நஜாப் அலி கான், 2020 இல் உஸ்மான் அலி அந்தத் தொகையை நன்கொடையாக அளித்ததாக மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த கதை 50-60 ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தது, ஆனால் அதுபற்றிய உண்மை அறியப்படவில்லை.
நிஜாம் உண்மையில் தங்கத்தை வழங்கினார், ஆனால் நன்கொடையாக அல்ல. மாறாக தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில் முதலீடு செய்தார். அவர் மொத்தம் 425 கிலோ தங்கத்தை முதலீடு செய்தார், அதற்கு ஈடாக அவருக்கு 6.5% வட்டி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த உண்மை 2019 இல் பிரதமர் அலுவலகத்தின் RTI (தகவல் அறியும் உரிமை) பதிலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் மிர் உஸ்மான் அலி கான்
ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், இந்தியாவின் முதல் கோடீஸ்வரராகவும், அந்த காலகட்டத்தின் உலக பணக்காரர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்பட்டார். 1886 ஆம் ஆண்டு பிறந்த இவர், பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டார். அவரது அளப்பரிய செல்வம் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் ஆகும். அவரது வியக்க வைக்கும் நிதி நிலை, பிப்ரவரி 22, 1937 இல் டைம் இதழின் அட்டைப்படத்தில் "ஹிஸ்ஸலாட் ஹைனஸ் தி நிஜாம் ஆஃப் ஹைதராபாத்" என்ற தலைப்பில் அவருக்கு இடம் கொடுத்தது.
நவீன ஹைதராபாத்தின் கட்டிடக் கலைஞராக அறியப்பட்ட அவர், மின்சாரம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, பேகம்பேட் விமான நிலையம் மற்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் போன்ற முக்கிய நிறுவனங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
1967 இல் அவர் இறந்த போது,லட்சக்கணக்கான மக்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.



Click it and Unblock the Notifications
