Latest Updates
-
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை தெரிஞ்சிகிட்டா உங்களை யாராலும் ஜெயிக்கவே முடியாதாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் நெறிமுறைகள் சிறந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அவற்றைப் பின்பற்றுபவர் வாழ்க்கையில் ஒருபோதும் வருத்தப்பட மாட்டார். சாணக்கியரின் கொள்கைகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு வழியை பரிந்துரைக்கின்றன.
சாணக்கிய நீதியின் படி, உண்மையான வெற்றிகரமான மனிதன் மற்றவர்களை வெற்றிபெற ஊக்குவிப்பவன். செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியும் அத்தகையவர்களை ஆசீர்வதிக்கிறார். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, தனது இலக்கை அடைய முடியாது என்று கூறியுள்ளார்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அல்லது வெற்றிகரமான நபராக இருக்க இந்த விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஒருவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியை சந்திக்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்களே முயற்சி செய்து செய்து கற்றுக்கொள்ள நினைத்தால், உங்கள் ஆயுட்காலம் முழுவதும் பத்தாது, உங்களின் போராட்டமும் அதிகரிக்கும். நீங்கள் வெற்றியை அடைய விரும்பினால், மற்றவர்களின் அனுபவத்தை கவனிக்க மற்றும் பயன்படுத்திக் கொள்ள தயங்காதீர்கள்.
ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நட்பு
உங்களைப் போன்ற எண்ண ஓட்டம் கொண்ட ஒருவருடன் நட்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிரபலமானவர்களின் நட்பு நீண்ட காலம் நீடிக்காது.
ஆடுகள், புலிகள் மற்றும் பாம்புகள் ஒருவருக்கொருவர் நட்பு கொள்ள முடியாது. மேலும், உங்கள் குணத்திற்கு நேரெதிர் இயல்புடையவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். நட்பு என்பது ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் மட்டுமே இருக்க வேண்டும். இல்லையெனில் அது உங்கள் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அறிவைப் பெற வேண்டும்
காமதேனு பசுவைப் போல அறிவைப் பெறுவதில் இருக்க வேண்டும். அறிவு எப்போது, எங்கு கிடைத்தாலும் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவு ஒருபோதும் வீணாகாது. அறிவுடன் ஒப்பிடும் போது அரச செல்வமும் அதற்கு சமமாகாது.
ஒரு மன்னன் தனது சொந்த மாநிலத்தில் மட்டுமே மரியாதை பெறுகிறான், ஆனால் ஒரு அறிவாளிக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்கும். அறிவு என்பது நெருக்கடியான சூழ்நிலையில் ஒருவரிரின் மிகப்பெரிய பலமாக மாறும்.
தர்மத்தை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, தியாகம் செய்யக்கூடிய செல்வம் எதற்கும் பயன்படாது. ஏனென்றால் தர்மம் எப்போதும் செல்வத்திற்கு மேல் வைக்கப்பட வேண்டும்.
மறுபுறம், பணத்திற்காக நீங்கள் உங்கள் எதிரிகளை மகிழ்விக்க வேண்டியிருக்கும், உங்கள் பெருமையை நீங்கள் சமரசம் செய்ய நேரிடும், எனவே அதனை நோக்கி ஈர்க்கப்படுவது பெரிய முட்டாள்தனம். இதைச் செய்பவர் தனது அடையாளத்துடன் மரியாதையையும் இழக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
