Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களில் நீங்க எச்சரிக்கையாக இல்லனா உங்க உயிருக்கே ஆபத்து வந்துருமாம்...!
Chanakya Niti: கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர் ஒரு பண்டைய இந்திய பொருளாதரா மேதை, தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். வாழ்க்கை மற்றும் வெற்றி பற்றிய அவரது மதிப்புமிக்க கொள்கைகள், வளமான வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் அறிவுரைகளின் தொகுப்பான சாணக்கிய நீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, உங்கள் நல்வாழ்வை அச்சுறுத்தும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். சாணக்கிய நீதியில் மூன்று விஷயங்களைப் பற்றி சாணக்கியர் எச்சரிக்கிறார்.

இந்த விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது உங்கள் உயிருக்கு கூட அச்சுறுத்தலாக மாறலாம். சாணக்கியர் எச்சரித்துள்ள இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்து, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தலாம்.
நீர் மற்றும் நெருப்பு
சாணக்கியர் நெருப்பையும் தண்ணீரையும் கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று சாணக்கியர் எச்சரிக்கிறார், ஏனெனில் அவை சரியாக கையாளப்படாவிட்டால் அவை ஆபத்தானதாக மாறும். நெருப்பும் நீரும் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாத கூறுகளாகும்.
ஆனால் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற சக்திகளாக மாற அதிக காலம் எடுக்காது. எனவே அவற்றை சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு சாணக்யா அறிவுறுத்துகிறார்.
உங்கள் திறமைக்கு ஏற்ப நெருப்புடனும் தண்ணீருடனும் விளையாடுங்கள், இல்லையெனில் கடுமையான காயம் அல்லது மரணத்தை விளைவிக்கும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
ஆபத்தான விலங்குகள்
சிங்கம், கரடி மற்றும் புலி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஏனெனில் அவர்களின் இயல்பு ஆக்ரோஷமானது. அவர்கள் ஒரு கணம் நம்முடன் நட்பாக இருந்தாலும், அவர்கள் கோபமாகவோ அல்லது பசியாகவோ இருக்கும்போது நம்மீது வெறி கொள்ளலாம்.
எனவே இந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது நல்லது.
ஆபத்தான நண்பர்கள்
கெட்ட சகவாசம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்பவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் எச்சரிக்கிறார். கெட்ட நண்பர்களுடன் பழகுவது உங்களை இருளுக்கு இட்டுச் சென்று உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.
மேலும் ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கோபத்தில் எந்த நேரத்திலும் அவர்கள் உங்களைத் தாக்கி உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
சோம்பேறித்தனம்
சாணக்கியரின் கூற்றுப்படி, சோம்பேறித்தனம் மனிதனின் மிகப்பெரிய எதிரி. ஒரு மனிதன் ஒருபோதும் சோம்பேறியாக இருக்கக்கூடாது. சோம்பேறிகளால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. எனவே சோம்பலைத் தவிர்க்க வேண்டும்.
கோபத்தைக் குறைக்க வேண்டும்
அதிகமாக கோபம் கொள்பவர்கள் தங்களுக்கு அதிக பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி கோபத்தில் தவறான முடிவுகளை எடுப்பார்கள். அது வரவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது, மேலும் ஆபத்தை வரவைக்கிறது. எனவே உங்கள் கோபத்தை விடவேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
