Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சாணக்கிய நீதி படி இந்த தவறுகளை செய்யும் பெற்றோர்கள் வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில்தான் கஷ்டப்படணுமாம்...!
Chanakya Niti: நமது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உறவுகளில் சிறந்து விளங்க சிறந்த ஆளுமைகளின் போதனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. நம் குழந்தைகளுக்கு கூட, விலைமதிப்பில்லாத அறிவையும், திறமையையும் வழங்க வேண்டியது பெற்றோராக நமது கடமையாகும்.
திருமணம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் சாணக்கியரின் போதனைகளை கடைபிடிப்பது போலவே, பெற்றோரைப் பற்றிய சாணக்கியரின் போதனைகளும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் ஒழுக்க நடத்தை பற்றிய பல விஷயங்களை தனது சாணக்கிய நீதியில் எழுதியுள்ளார்.

சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளுக்கு நீதி, அநீதி பற்றிய புரிதலை ஏற்படுத்தினால், அவர்கள் ஒருபோதும் வழிதவற மாட்டார்கள். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சுயநலம் மிக்கவர்களாக மாறுவதாகவும், முதியோர் இல்லங்களில் சேர்த்து அவர்களைப் புறக்கணிப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.
எனவே நமது குழந்தைகள் பொறுப்புள்ள நபர்களாக வளர, அவர்களுக்கு சரியான கல்வியை ஆரம்பத்திலிருந்தே வழங்குவது அவசியம். இதனை சரியாக செய்யாததால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைளுக்கு தாங்களே எதிரிகளாக மாறுகிறார்கள்.
கல்வியை இழந்தவர்கள்
குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தாத பெற்றோர்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறுகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் அனைவராலும் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். இந்த தாக்கம் குழந்தைகளின் மனதை ஆழமாக பாதிக்கிறது.
குழந்தைகளின் சரியான கல்வியை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்காத பெற்றோர்கள் அவர்களின் இறுதி காலத்தை தனிமையில்தான் கழிக்க வேண்டியிருக்கும்.
சரியான பாதையில் வழிநடத்துவது
சாணக்கியரின் போதனைகளின்படி, குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களை குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவது பெற்றோரின் பொறுப்பாகும். அவர்களிடையே நல்ல நடத்தையை வளர்ப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமின்றி பெற்றோரின் எதிர்காலத்திற்கும் அவசியம். சாணக்கியர் சொன்னது போல், எப்படிப்பட்ட விதை விதைக்கப்படுகிறதோ, அதனைப் போன்ற பழம்தான் கிடைக்கும்.
அன்பு மற்றும் அக்கறை
சாணக்கியர், குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி அனைத்து செயல்களையும் செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார். பெற்றோர்கள் அவர்களின் தவறுகளை சரியான நேரத்தில் திருத்தி, அவர்களுக்கு எது சரி எது தவறு என்று புரிய வைக்க வேண்டும். தவறான பாதைகளில் சிக்கிக்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.
பொறுப்புகளை நிறைவேற்றுதல்
சாணக்கியரின் போதனைகள், பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொள்வது அவசியம். இந்தக் கடமையைப் புறக்கணிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கைவிடும் உணர்வை உருவாக்குகிறார்கள்.
சாணக்கியரின் போதனைகளைக் கடைப்பிடிப்பது வயதான காலத்தில் நம்மைக் கைவிடாத குழந்தைகளை வளர்க்க உதவும். ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலையும் கல்வியையும் வழங்குவது பெற்றோரின் பொறுப்பு.
நம் குழந்தைகளுடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கி, அவர்களை பொறுப்பான மற்றும் அக்கறையுள்ள நபர்களாக மாற முடியும். சாணக்கியரின் போதனைகளைத் தழுவி, நம் சொந்த வாழ்க்கையை முன்னேற்ற பாடுபடுவது போல், நம் குழந்தைகளையும் நிறைவான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications
