Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
பாபா வாங்கா கணிப்பு படி 2028-ல் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அழிவு என்ன தெரியுமா?
உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பாபா வாங்காதான். 1996-ஆம் ஆண்டு தனது 85-வது வயதில் காலமான, பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற ஆன்மீகவாதியான பாபா வங்கா, தனது ஆச்சரியமளிக்கும் தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களை இன்றும் கவர்ந்து வருகிறார்.

'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று குறிப்பிடப்படும் பாபா வாங்கா, தனது பன்னிரண்டாவது வயதில் பார்வையை இழந்த பின்னர், தனக்குத் தீர்க்கதரிசனம் கூறும் வரம் கிடைத்ததாகக் கூறினார். நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீது, 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு மிகவும் பிரபலமான கணிப்புகளில் ஒன்றாகும். பாபா வாங்கா கணிப்பு படி வரப்போகும் ஆண்டுகளில் நடக்கப்போகும் முக்கிய சம்பவங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உலகின் முடிவு
5079-ஆம் ஆண்டில், மிக பிரம்மாண்டமான அளவிலான ஒரு பிரபஞ்ச நிகழ்வின் காரணமாக உலகம் அழியக்கூடும் என்பது பாபா வாங்காவின் அவரது மிகவும் திடுக்கிட வைக்கும் கணிப்பாகும். உலகின் இறுதி முடிவு குறித்த மனிதர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் இந்த உலக அழிவு சார்ந்த தரிசனம், உலக மக்களை வியப்பிலும் அதே சமயம் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
காலநிலை மாற்றமும் உயரும் கடல் மட்டும்
2028-ஆம் ஆண்டில், புதிய ஆற்றல் மூலங்களைத் தேடி மனிதகுலம் வெள்ளிக் கோளை அடைய முயற்சிக்கும். 2033-ஆம் ஆண்டிற்குள், துருவப் பனிப்படலங்கள் உருகுவதால், கடல் மட்டங்களில் உயர்வு ஏற்படும் என்று அவர் கணித்தார். இந்தக் கணிப்பானது, காலநிலை மாற்றம் குறித்தும், உலகளாவிய கடல் மட்டங்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் தற்போது உள்ள கவலைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது.
பூமியின் அழிவு
3797-ஆம் ஆண்டில் பூமி ஒரு மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இருப்பினும், அதற்குள் மனித இனம் சூரியக் குடும்பத்திற்குள்ளேயே உள்ள வேறொரு கோளுக்குக் குடியேறும் திறனைப் பெற்றிருக்கும் என்றும், இதன் மூலம் மனித இனம் அந்த பேரழிவிலிருந்து தப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேற்றுலகத் தொடர்பு
2130-ஆம் ஆண்டிற்குள், மனிதகுலம் வேற்றுலக உயிரினங்களுடன் தொடர்பை உருவாக்கும் என்று பாபா வங்கா முன்னறிவித்தார். இந்த மகத்தான திருப்புமுனையானது, மனித வரலாற்றையும் பிரபஞ்சம் குறித்த நமது புரிதலையும் மறுவரையறை செய்யக்கூடும்.
உலகளாவிய வறட்சி
2170-ஆம் ஆண்டில், கடுமையான உலகளாவிய வறட்சி ஏற்படும் என்றும், அது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இந்தக் கணிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வள மேலாண்மை குறித்த கவலைகளை தொடர்ந்து அதிகரிக்கிறது.
கோள்களுக்கிடையேயான மோதல்
பூமியின் எதிர்காலத்தைக் கணித்த பாபா வங்கா, 3005-ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் ஒரு போர் ஏற்படும் என்று முன்னறிவித்தார். இது, மனிதகுலம் விண்வெளியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும்போது கோள்களுக்கிடையேயான மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை விளக்குகிறது.
அரசியல் மாற்றங்கள்
பாபா வாங்கா பெரும் அரசியல் மாற்றங்களையும் முன்னறிவித்தார். 2076-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் கம்யூனிசம் மீண்டும் திரும்பும் என்று அவர் கணித்தார். இது உலகின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது, இது வரலாற்றின் போக்கையே மாற்றக்கூடும்.



Click it and Unblock the Notifications
