பாபா வாங்கா கணிப்பு படி ஜூன் 7 ஆம் தேதிக்கு பின் இந்த மோசமான 2 பேரழிவுகள் நடக்கபோகுதாம்... என்னென்ன தெரியுமா?

Baba Vanga's Prediction for 2025: பாபா வாங்காவும், அவரது கணிப்புகளும் உலகப் புகழ் பெற்றவை. செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதல் உட்பட முக்கிய உலக நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்த பல்கேரியாவின் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கண் தெரியாத தீர்க்கதரிசி பாபா வாங்கா, தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும், அச்சுறுத்தும் ஒரு கணிப்பை செய்துள்ளார்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, பாபா வாங்கா ஜூன் 7, 2025 அன்று (அதாவது இன்று) ஒரு பயங்கரமான கணிப்பை வெளியிட்டுள்ளார், இந்த நாளில் ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய் போர், ஆக்கிரமிப்பு, விபத்துக்கள் மற்றும் குழப்பங்களைக் குறிக்கிறது, மேலும் இந்த போர் கிரகத்தின் நிலையில் ஏற்படும் மாற்றம் மிகவும் அபசகுனமாகக் கருதப்படுகிறது.

Baba Vanga s Shocking Prediction About Massive Destruction After June 7 2025

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த நாளில் செவ்வாய் தனது ராசியை மாற்றப் போகிறார். ஜோதிடத்தில், செவ்வாய் போர், ஆக்கிரமிப்பு, விபத்துக்கள் மற்றும் தீ வைப்பு ஆகியவற்றின் கிரகமாகக் கருதப்படுகிறது. இப்போது செவ்வாய் தனது நிலையை மாற்றியிருப்பது, பலர் அதை வரவிருக்கும் காலத்திற்கு ஒரு அசுபமான அறிகுறியாகக் கருதுகின்றனர்.

பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள்

பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டிற்கான மோசமான கணிப்புகளைச் செய்துள்ளார். 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உலகம் முற்றிலும் மாறுபட்ட மனநிலைகளைக் கொண்ட இரண்டு தனித்தனி நாகரிகங்களாகப் பிரிக்கப்படும். இதில் ஒன்று தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும், மற்றொன்று ஆன்மீகத்தை சார்ந்திருக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறுகிறது. பல்கேரிய தீர்க்கதரிசி "கீழே இருந்து எழும் புகை அனைவரையும் பயமுறுத்தும்" என்று எச்சரித்திருந்தார், இது பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளை பயமுறுத்திய தெற்கு அட்லாண்டிக் காந்த முரண்பாடாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Baba Vanga s Shocking Prediction About Massive Destruction After June 7 2025

புதிய நோய் பரவல்

ஜூன் மாதத்திற்குப் பிறகு தண்ணீரில் கரையும் "விஷம்" புதிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஜூன் 2025 க்குப் பிறகு நீரினால் பரவும் வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் புதிய தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று பாபா வாங்கா எச்சரித்திருக்கிறார்.

தலைமைத்துவம், சக்தி மற்றும் ஈகோவைக் குறிக்கும் செவ்வாய் சிம்மத்தில் நுழையும் காலத்திற்கு பாபா வாங்காவின் கணிப்புகள் தேதியிடப்பட்டிருப்பது வெறும் தற்செயல் நிகழ்வா? போர், கோபம், தைரியம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் செவ்வாய் - சிம்மத்தில் செல்வது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

உலகம் இரண்டு பகுதியாக பிரிவது போன்ற மாற்றங்கள் நல்லதா கெட்டதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உலகம் இரண்டு பெரிய முக்கியமான போர்களில் - ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், அத்துடன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் ஆகியவற்றில் சிக்கியுள்ள தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இந்த மோதல்களை அதிகரிக்கக் கூடும் என்றும், இறுதியில் மூன்றாம் உலகப் போரில் உச்சக்கட்டத்தை அடையக்கூடும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

பாபா வாங்கா யார்?

'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா, பின்னாளில் பாபா வாங்கா அல்லது 'பாட்டி வாங்கா' என்று அழைக்கப்பட்டார். அக்டோபர் 3, 1911 அன்று அப்போது ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சலோனிகா விலாயெட்டில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பிறந்தார். பாபா வாங்கா 12 வயதில் இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்தார், ஆனால் அதற்குப்பின் எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்கதரிசனத்தை பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதற்குப்பின் பாபா வாங்கா பல்கேரியாவின் பெலாசிகா மலைகளில் உள்ள ரூபிட் பகுதியில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் தனது தீர்க்க தரிசனங்களுக்காக அவர் புகழ் பெற்றார்.

Story first published: Saturday, June 7, 2025, 16:48 [IST]
Desktop Bottom Promotion