Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
2025-ல் நடக்கப்போகும் பேரழிவுகள் முதல் 5079-ல் உலகின் முடிவு பாபா வங்கா கூறியுள்ள நடுங்க வைக்கும் கணிப்புகள்!
Baba Vanga: வரலாற்றில் பலரும் எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர், அவர்கள் மனிதகுலத்திற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி பல்வேறு கணிப்புகளைக் கூறியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களாக இருந்தாலும் சிலர் துல்லியமான கணிப்புகள் மூலம் உலகத்தை ஆச்சரியப்படுத்திய சிலரும் வரலாற்றில் இருந்துள்ளனர்.
இவர்களில் பார்வையற்ற பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த தனது பல கணிப்புகள் மூலம் தனித்து நிற்கிறார். அவரது தீர்க்கதரிசனங்கள் ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டிக்கொண்டே இருப்பதால், அவரது கணிப்புகள் எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக அவரது கணிப்புகள் நெருங்கும் ஆண்டுகள் வரும்போது அதனைப் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கிறது.

2025 பற்றிய கணிப்புகள்
பூமியின் பேரழிவு 2025 ஆம் ஆண்டிலேயே தொடங்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார், இது அவரின் கணிப்புகளை பின்தொடர்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும், கவலைகளையும் எழுப்பியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள்தொகையை "குறைக்கும்" ஐரோப்பாவில் நடக்கப்போகும் ஒரு பெரிய மோதலையும் வங்கா கணித்துள்ளார், தற்போதைய உலகின் சூழலை பார்க்கும் போது இது நடக்க வாய்ப்புள்ளது என்று பலரும் அஞ்சுகின்றனர்.
யார் இந்த பாபா வங்கா?
1911 இல் பிறந்த பாபா வங்காவின் முழுப் பெயர் வங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா, புயலில் சிக்கி தனது 12 வயதில் பார்வையை இழந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் எதிர்காலத்தை வளர்த்துக் கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொண்டார், இது அவரது தீர்க்கதரிசனங்களை அனைவரையும் நம்ப வழிவகுத்தது. வங்கா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் கழித்தார் மற்றும் "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று புகழப்பட்டார். 1996 இல் அவர் இறந்த போதிலும், அவரது தீர்க்கதரிசனங்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.
இதுவரை உண்மையாகிய பாபா வங்காவின் கணிப்புகள்
பாபா வங்கா உலகில் இதுவரை நடந்த பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தாக கூறப்படுகிறது. அவரது மிகவும் குறிப்பிடத்தக்க கணிப்புகளில் முக்கியமானவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.
இரண்டாம் உலகப் போர்: இந்த உலகளாவிய மோதலின் போது பேரழிவு மற்றும் மிகப்பெரிய உயிர் இழப்புகளை பாபா முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.
சோவியத் யூனியனின் அழிவு: 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அவர் முன்கூட்டியே கணித்தார், இது 1991 இல் நடப்பதற்கு முன்பே, கம்யூனிச ஆட்சியின் முடிவை துல்லியமாகக் கணித்தது.
செர்னோபில் பேரழிவு: 1986 ஆம் ஆண்டில், வங்கா செர்னோபில் அணுசக்தி பேரழிவை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது, இது அவரது துல்லியமான கணிப்புகளிள் முக்கியமானதாகும்.
ஜோசப் ஸ்டாலினின் மரணம்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் மரணத்தை வங்கா துல்லியமாக கணித்து, தீர்க்கதரிசியாக தனது நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தினார்.
செப்டம்பர் 11 தாக்குதல்கள்: "எஃகு பறவைகள்" அமெரிக்காவை தாக்கும் என்று Vanga கணித்ததாக கூறப்படுகிறது, இது நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீதான 9/11 தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் என்று கூறப்படுகிறது.
2004 சுனாமி: இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியை அவர் முன்கூட்டியே கணித்தார், இதன் விளைவாக பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.
உலக அழிவு பற்றிய பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள்
பாபா வாங்காவின் எதிர்கால கணிப்புகள் கடுமையான அச்சத்தை எழுப்புகின்றன. 5079 வரை மனிதகுலம் முற்றிலும் அழிக்கப்படாது என்று அவர் உறுதியளித்தாலும், உலக முடிவு 2025 இல் தொடங்கும் என்று அவர் கண்டித்துள்ளார். ஐரோப்பாவில் முன்னறிவிக்கப்பட்ட மோதலைத் தவிர, 2043 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா முஸ்லீம் ஆட்சியின் கீழ் வரும் என்றும் அவர் கணித்துள்ளார். 2076ஆம் ஆண்டுக்குள் கம்யூனிஸ்ட் ஆட்சி உலகளவில் அதிகாரம் செலுத்தும். இயற்கை பேரழிவின் காரணமாக உலகம் 5079 இல் அழியும் என்று வங்கா கணித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள்
பாபா வங்கா 2025 ஆம் ஆண்டுக்குள் பூமியை சேராத உயிரினங்களை பூமி சந்திக்கும் என்று கணித்துள்ளார். அவரது தீர்க்கதரிசனங்களின்படி, வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகைதந்து, தங்கள் இருப்பை மனிதகுலத்திற்கு தெரியப்படுத்துவார்கள். இந்த கணிப்பு பலரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது, வேற்றுகிரகவாசிகளின் இருப்பு மற்றும் நமது உலகில் இதுபோன்ற சந்திப்புகளின் சாத்தியமான தாக்கம் பற்றிய விவாதங்களைத் தூண்டியது. பாபா வங்காவின் இந்த தீர்க்கதரிசனம் உண்மையானால், அது பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலையே மாற்றிவிடும், மேலும் இதனால் பூமியில் பல மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications












