Latest Updates
-
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்..
பாபா வாங்கா கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு உலகின் ஒரே வல்லரசு நாடாக இருக்கும் தெரியுமா?
நம் உலகம் இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. பல அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் படி மூன்றாம் உலகப்போர் உருவாவதற்கான சூழல் மெல்ல உருவாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நிலவும் பதட்டமான சூழல் நிலவுவதாலும், ரஷ்யா உக்ரைனுடன் தனது மோதலைத் தொடர்வதாலும், மேற்கு ஆசியாவின் பகுதிகள் வேகமாக மாறி வருவதாலும், அமெரிக்கா உலகின் பல நாடுகளின் மீது வரிச்சுமையை அதிகரித்து வருவதாலும் எந்த நேரத்திலும் உலக அரசியல் மாறக்கூடிய சூழலில் நாம் வசித்து வருகிறோம். உலகமே இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருவதால் பெருமபாலான மக்களின் கவனம் இப்போது புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது.
'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, அவரது எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்காக உலகப்புகழ் பெற்றவர். இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட்-19 தொற்றுநோய் வரை, அவர் அனைத்தையும் கடந்த காலத்திலேயே சரியாக கணித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்த வருடத்திற்கான பாபா வாங்காவின் கணிப்பு என்னவாக இருக்கும் என்றுதான் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பார்கள். அது இந்த வருடமும் தொடர்கிறது.

பாபா வாங்காவின் கணிப்புகள்
பாபா வங்காவின் கடந்த கால கணிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் பலித்ததால் அவரது கணிப்புகளுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் உள்ளது. அவரின் தீர்க்கதரிசனங்களை நம்புபவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். உலகின் பல நாடுகளில் நிலவும் போர் சூழலால் தற்போது 'பாபா வங்கா' என்ற பெயர் மீண்டும் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இதனால் 2026-ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.
பாபா வாங்காவின் உலகப்போர் பற்றிய கணிப்புகள்
பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் மூன்றாம் உலகப் போர் பற்றிய கணிப்புதான் மிகவும் அச்சுறுத்தலானது. கிழக்கு நாடுகளில் ஒரு பெரிய அளவிலான போர் தொடங்கி, பின்னர் அது மேற்கு நாடுகளுக்கும் பரவும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். சீனா மற்றும் தைவானுக்கு இடையேயான அதிகரித்து வரும் பதட்டங்கள், மேலும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நாடுகளின் தவிர்க்க முடியாத நேரடி ஈடுபாடு ஆகியவற்றின் விளைவாக, இந்த போர் 2026-ஆம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதங்களில் எப்போதாவது நிகழக்கூடும் என்று அவர் கணித்துள்ளார். இதை நம்பவைக்கும் வண்னம் 2026 தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா மற்றும் ரஷ்யா தொடர்ந்து உலகளவில் பதற்றத்தைத் தூண்டிவருகிறது.
உலகின் கடைசி வல்லரசு
ஐரோப்பாவில், போர் முன்னெப்போதும் இல்லாத பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அது ஐரோப்பிய கண்டத்தையே ஒரு பாழடைந்த நிலமாக மாற்றிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ரஷ்யா மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே பெரிய உலக வல்லரசாக இருக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். உலகம் பல போர்கள் மற்றும் அரசியல் மோதல்களில் சிக்கியுள்ள நிலையில், மக்கள் அவரது கணிப்புகளை தற்போதைய உலக நிகழ்வுகளுடன்அதிகளவில் பொருத்திப் பார்க்கின்றனர்.



Click it and Unblock the Notifications
