Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
முதன்மைக் கடவுளான விநாயகருக்கு மிகவும் பிடித்த மலர்கள் மற்றும் இலைகள்!!!
இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூக்கள் உகந்ததாக இருக்கும். அந்ததந்த கடவுளுக்கு ஏற்ற பூக்களைக் கொண்டு பூஜைகளை செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் முதன்மைக் கடவுளான விநாயகருக்கும் ஒருசில பூக்கள் மட்டுமின்றி, இலைகளும் உள்ளன. பொதுவாக அனைவருக்கும் பிடித்த கடவுளும் இவரேயாவார்.
ஒன்பது நாட்கள் வரை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விநாயகருக்கு பிடித்தமான பூக்கள் மற்றும் இலைகளால் அலங்கரித்து பூஜைகளை மேற்கொள்ளலாம். இதுவரை விநாயகருக்கு பிடித்த அனைத்து பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு தான் விநாயகரை அலங்கரிப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூக்கள் அல்லது இலைகளைக் கொண்டு அலங்கரிக்கலாம்.
இப்போது விநாயகருக்கு மிகவும் பிடிக்கும் பூக்கள் மற்றும் இலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் கொண்டு விநாயகரை அலங்கரித்து, விருப்பப்பட்டதை நினைத்து விநாயகருக்கு பூஜை செய்து, நன்மைகளைப் பெற்று நலமுடன் வாழுங்கள்.

சிவப்பு மலர்கள்
பொதுவாக விநாயகருக்கு சிவப்பு நிற பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிவப்பு நிற செம்பருத்தி என்றால் ரொம்ப பிடிக்கும்.

அருகம்புல்
அனைவருக்குமே விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிடிக்கும் என்று தெரியும். மேலும் எந்த ஒரு பூஜையின் போதும், இந்த அருகம்புல் இல்லாமல் பூஜை நடந்ததில்லை.

எருக்கம் பூ
விநாயகருக்கு பிடித்த மற்றொரு பூ தான் எருக்கம் பூ.

மாதுளையின் இலைகள்
இந்தியாவின் சில பகுதிகளில் மாதுளையின் இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்வார்கள். அதிலும் விநாயகர் சதுர்த்தியன்று சில இடங்களில் இந்த பூ மற்றும் இலைகளைக் கொண்டு பூஜைகளை மேற்கொள்வார்கள்.

துளசி
துளசி என்று சொல்லும் போது அனைவருக்கும் கடவுள் பெருமாள் தான் ஞாபம் வருவார். ஆனால் இந்த துளசியும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். எனவே இந்த விநாயகர் சதுர்த்திக்கு துளசி அலங்காரம் மேற்கொண்டு, நன்மையைப் பெறுங்கள்.

சங்குப்பூ
விநாயகருக்கு சங்குப்பூ என்றாலும் மிகவும் இஷ்டம். பொதுவாக சங்குப்பூவில் வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு உள்ளது. இவை இரண்டுமே விநாயகருக்கு உகந்த பூக்களாகும்.

ஸ்க்ரூ பைன் (Screw Pine)
இந்த மரத்தின் மலர்கள் மற்றும் இலைகளும் விநாயகருக்கு பிடித்தமானவைகளாகும்.



Click it and Unblock the Notifications