Latest Updates
-
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்!
குழப்பத்தின் விடை!!!
ஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான். அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் "எனக்கு ஒரு குழப்பம்" என்று சொன்னான்.
குருவும், "என்ன?" என்று கேட்டார். அதற்கு மாணவன், "நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது" என்று சொன்னான்.
"சந்தோஷம். இதில் என்ன குழப்பம்?" என்று குரு கேட்டார். அதற்கு மாணவன் "நான் தியானம் செய்யாத நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன். ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது. தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா? இதை நினைக்கும் போது என் உள்ளம் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினான்.
குரு அதற்கு சிரித்துவிட்டு, "ஆகவே நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே...?" என்று கேட்டார். அதற்கு அவனும் "ஆமாம், அது தவறில்லையா? என்று கேட்டான்.
குரு அதற்கு ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!' என்று கூறினார்.
உடனே அந்த மாணவன் "ஒரு வேளை என் தியானம் நின்றுவிட்டால்?" என்று வினவினான். குரு "அதுவும் நல்லது தான். அப்போது தான் உன் உண்மையான இயல்பு உனக்கு புரியும்" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications