Latest Updates
-
செட்டிநாடு மாங்காய் கார குழம்பு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - செமையா இருக்கும் -
குரு-செவ்வாய் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
பூமியின் ரகசிய 'தங்க தொழிற்சாலையை' கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்: எந்த இடத்தில் தெரியுமா? -
5 தக்காளியும், 3 வரமிளகாயும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் -
அடிக்கிற வெயிலுக்கு 1 கப் ரவை இருந்தா.. இப்படி ஒருவாட்டி வத்தல் செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்.. -
வாஸ்துப்படி வீட்டில் இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்க.. பணப் பிரச்சனையே வராது! -
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.! -
சனி பகவான் உதயமாவதால் ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. உங்க ராசி என்ன?
வாஸ்து படி உங்க பர்ஸில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு எப்பவுமே போகாதாம்
Vastu Tips in Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் வீட்டிலிருக்கும் பொருட்கள் மட்டுமல்ல நம்முடன் வைத்திருக்கும் பொருட்கள் கூட நம் அதிர்ஷ்டத்தையும், ஆற்றலையும் பாதிக்கும். உங்களிடம் இருக்கும் பர்ஸ் என்பது வெறும் பணத்தைச் சேமித்து வைப்பதற்கான ஒரு இடமாக மட்டுமல்லாமல், செல்வத்தை ஈர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் பர்ஸை ஒழுங்குபடுத்தி பணத்தை ஈர்ப்பதற்குச் சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன. உங்கள் பர்ஸில் சில பொருட்களை வைத்திருந்தால், செழிப்பு தடைபடக்கூடும், மேலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கலாம். அதேசமயம் சில பொருட்களை பர்ஸில் வைப்பதன் மூலம் செல்வத்தை எளிதில் ஈர்க்கலாம். உங்கள் பர்ஸை ஒரு 'பண ஈர்ப்புக் காந்தமாக' மாற்ற வாஸ்து பரிந்துரைக்கும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை மடித்தோ, கசக்கியோ வைக்கக்கூடாது
ஒருவர் செல்வந்தராக பணத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். பலர் தங்கள் பர்ஸில் பணத்தை கசக்கியோ அல்லது மடித்தோ வைப்பது வழக்கம்., ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி இது மிகவும் தவறான செயலாகும். பணத்தை எப்போதும் நேராகவும், அவற்றின் மதிப்புக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் வைத்திருக்க வேண்டும். நாணயங்களை வைப்பதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒழுக்கமாக பராமரிக்கப்படும் பர்ஸ், செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.
பர்ஸில் அரச மர இலையை வைக்கவும்
உங்கள் வாழ்க்கையில் செழிப்பை அதிகரிக்க விரும்பினால், ஒரு அரச இலையை எடுத்து, அதனை கங்கை நீரால் கழுவவும். பின்னர் குங்குமத்தால் அந்த இலையின் மீது 'ஸ்ரீ' என்று எழுதவும். இப்போது, அந்த இலையை உங்கள் பர்ஸின் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி செல்வத்தை ஈர்க்கும் மிகச் சக்திவாய்ந்த செயலாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பழைய இலையை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய இலையை வைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளி நாணயத்தை பர்ஸில் வைக்கவும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் பர்ஸில் ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை வைப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வெள்ளி, நிலவையும். சுக்கிரனையும் குறிக்கிறது, இவை வாழ்வில் செழிப்பையும் அமைதியையும் கொண்டு வருபவை ஆகும். இதனை உங்கள் பர்ஸில் வைத்திருப்பது, நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், இழந்த அல்லது கடனாக கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
பழைய பில்களை தூக்கியெறியவும்
பொருட்கள் வாங்கிய பிறகு அதன் பில்களை பர்ஸில் அப்படியே விட்டு விடுவது பெரும்பாலான மக்களின் வழக்கமாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த பேப்பர்கள் 'செலவுகள்' மற்றும் 'கடன்' ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றன. உங்கள் பர்ஸில் தேவையற்ற காகிதங்களை நீங்கள் வைத்திருந்தால், பணம் அதில் நிலைத்திருக்காது. மாறாக, வீண் செலவுகளே அதிகரிக்கும். எனவே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் பர்ஸை சுத்தம் செய்து, அதில் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
கிழிந்த மற்றும் சேதமடைந்த பர்ஸை பயன்படுத்தக்கூடாது
உங்கள் பர்ஸ் எங்காவது கிழிந்திருந்தாலோ அல்லது அதன் நிறம் மிகவும் மங்கிப்போயிருந்தாலோ, அதை உடனடியாக மாற்றிவிடுங்கள். கிழிந்த பர்ஸ் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதுடன், நிதி இழப்பிற்கும் வழிவகுக்கும். நீங்கள் தடையற்ற செல்வத்தை விரும்பினால், புதிய மற்றும் தூய்மையான பர்ஸை மட்டும் பயன்படுத்துங்கள்.
இறந்தவர்கள் புகைப்படத்தை வைக்காதீர்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி இறந்தவர்களின் புகைப்படத்தை ஒருபோதும் பர்ஸில் வைக்கக்கூடாது. மேலும், பர்ஸ் பொதுவாகத் தூய்மையற்ற இடங்களில் வைக்கப்படுவதால், கடவுள்ககளின் படங்களையும் அதில் வைத்திருக்கக் கூடாது. ஒருவர் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால், படங்களுக்குப் பதிலாக 'ஸ்ரீ யந்திரம்' அல்லது 'குபேர யந்திரம்' எனப்படும் யந்திரங்களை பர்ஸில் வைத்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications












