Just In
- 48 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வேட்டையாடி விளையாடும் ராஜபாளையத்து நாய்கள்!
அழகான நாய்கள்
ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண்கள் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.
வேக வைத்த மாமிசம்
நாய்க்குட்டி பிறந்த 40வது நாள் வரை காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொடுக்கலாம். இரவில் பாலுடன் ஒரு ஸ்பூன் கிரைப் வாட்டர் கலந்து தந்தால் நல்லது.
நாற்பது நாட்களுக்குப் பின் பால்சோறு, முட்டைச்சோறு (அல்லது) காய்கறி கலந்த சோறு கொடுக்கலாம். ஆறு மாதம் வரைக்கும் மாமிசம் தரக்கூடாது. ஆறு மாதத்திற்கு பிறகு மாமிசம் கொடுப்பதாக இருந்தால் எலும்புடன் கூடியதாக 100கிராம் மாமிசத்தை மசாலா சேர்க்காமல் வேகவைத்து கொடுக்கலாம். பச்சை மாமிசம், பச்சை முட்டை, பச்சைப்பால் ஆகியவற்றை தரக்கூடாது. மீன் கொடுத்தால் அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டுத்தான் கொடுக்கவேண்டும். கேக், ஸ்வீட், காரம் ஆகியவற்றை தரக்கூடாது.
தடுப்பூசி மருந்துகள்
35வது நாளில் குடல்புழு அகற்றும் மருந்து தரவேண்டும். இம்மருந்தை மாதம் ஒரு முறை கடைசிவரை தர வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசியும் 60வது நாளில் ஆஸ்ட்டோ - கால்சியம் டானிக்கும் , 75ம் நாளில் மீண்டும் ஆறுவகை நோய் தடுப்பூசியும் போடவேண்டும். பின் ஆண்டுதோறும் வெறிநாய் தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமானது. குளிர்காலத்தில் வாரம் ஒரு முறையும் கோடை காலத்தில் வாரம் இருமுறையும் குளிப்பாட்டுவது சிறந்தது.
கட்டிப்போடக்கூடாது
நாய்க்குட்டியை பகலில் உலவவிட்டு இரவில் கூண்டு அல்லது கூடை போன்ற ஒன்றில் அடைத்து வைக்க வேண்டும். மொட்டைமாடியில் கூட விடலாம். நான்கு மாதம் வரைக்கும் கட்டிப்போடக்கூடாது. அப்படிச் செய்தால் கால்கள் வளைய ஆரம்பித்துவிடும். பின்னர் கட்டிப்போடும் வயது வந்த பின்னரும் நாள் முழுவதும் கட்டிப்போட்டு வளர்க்கக்கூடாது. பகல் அல்லது இரவு ஏதாவது ஒரு பொழுது அவிழ்த்துவிட வேண்டும். முக்கியமான விசயம் நாயை அடிக்கடி சீண்டி விளையாடக்கூடாது. குச்சிகளை வைத்து மிரட்டக்கூடாது.