Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்... உடனே தூக்கி வீசுங
வீட்டை மேம்படுத்துவது பற்றியும் வீட்டு கெட்ட சக்தியைக் கொண்டு வரும் செடிகள் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.
ஒரு வீட்டை வாஸ்துப்படி கட்டுவது அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க செய்கின்ற செயலாகும். இதன் படி அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிலவி சந்தோஷம் நிலை பெறும்.

அதே மாதிரி வாஸ்து சாஸ்திரப்படி சில தாவரங்களை வீட்டில் வைக்கவே கூடாது. இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ வாய்ப்புள்ளது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். ஆனால் ஃபெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் இந்த தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்க கூடியது என்கின்றனர்.

ஃபெங் சுய் குறிப்புகள்
இந்த குறிப்புகளின்படி கீழ்க்கண்ட தாவரங்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள். இந்த ஃபெங் சுய் குறிப்புகளில் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களும் வீட்டுக்குள் நன்மையை அளிக்கின்ற குறிப்புகள், வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வருகின்ற

கற்றாழை
முட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. ஆனால் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அது மட்டும் வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது வீட்டுக்கு நன்மையைக் கொடுக்கும்.

போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது என்கின்றது வாஸ்து சாஸ்திரம். வேண்டும் என்றால் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்.

புளிய மரம்
புளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லது அல்ல. அதேபோல் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

வாடும் செடிகள்
வாடும் செடிகள் மற்றும் பூக்கள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. காய்ந்த செடிகள், வாடிய செடிகள், பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டவை, முட்களையுடைய மர வகைகள் மற்றும் பாபுல் மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

இலவம்பஞ்சு மற்றும் பனை மரம்
இந்த மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது. பொதுவாக நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தொட்டியில் தொங்க விடும் தாவரங்கள்
சிறிய அல்லது பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாது. வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.

கிழக்கு திசையில் மரம் வேண்டாம்
பெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும். பொதுவாக வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருப்பது நல்லது தான் என்றாலும் கிழக்கு திசை பார்த்து மரங்கள் வைக்காமல் இருப்பது வீட்டுக்கு கெட்ட சக்தியை அழைத்து வராமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications