Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்... உடனே தூக்கி வீசுங
வீட்டை மேம்படுத்துவது பற்றியும் வீட்டு கெட்ட சக்தியைக் கொண்டு வரும் செடிகள் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.
ஒரு வீட்டை வாஸ்துப்படி கட்டுவது அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க செய்கின்ற செயலாகும். இதன் படி அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிலவி சந்தோஷம் நிலை பெறும்.

அதே மாதிரி வாஸ்து சாஸ்திரப்படி சில தாவரங்களை வீட்டில் வைக்கவே கூடாது. இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ வாய்ப்புள்ளது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். ஆனால் ஃபெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் இந்த தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்க கூடியது என்கின்றனர்.

ஃபெங் சுய் குறிப்புகள்
இந்த குறிப்புகளின்படி கீழ்க்கண்ட தாவரங்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள். இந்த ஃபெங் சுய் குறிப்புகளில் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களும் வீட்டுக்குள் நன்மையை அளிக்கின்ற குறிப்புகள், வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வருகின்ற

கற்றாழை
முட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. ஆனால் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அது மட்டும் வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது வீட்டுக்கு நன்மையைக் கொடுக்கும்.

போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது என்கின்றது வாஸ்து சாஸ்திரம். வேண்டும் என்றால் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்.

புளிய மரம்
புளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லது அல்ல. அதேபோல் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

வாடும் செடிகள்
வாடும் செடிகள் மற்றும் பூக்கள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. காய்ந்த செடிகள், வாடிய செடிகள், பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டவை, முட்களையுடைய மர வகைகள் மற்றும் பாபுல் மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

இலவம்பஞ்சு மற்றும் பனை மரம்
இந்த மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது. பொதுவாக நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தொட்டியில் தொங்க விடும் தாவரங்கள்
சிறிய அல்லது பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாது. வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.

கிழக்கு திசையில் மரம் வேண்டாம்
பெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும். பொதுவாக வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருப்பது நல்லது தான் என்றாலும் கிழக்கு திசை பார்த்து மரங்கள் வைக்காமல் இருப்பது வீட்டுக்கு கெட்ட சக்தியை அழைத்து வராமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











