Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
வீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!
வீடு என்பது ஒவ்வொருவரின் மன அமைதியையும் மேம்படுத்தும் ஓர் இடம். அத்தகைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது ஒரு வீட்டில் கணவன், மனைவி என இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்று நேரம் கிடைப்பதில்லை. அப்படி வேலைக்கு செல்வோர் தங்களின் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒருசில விதிமுறைகளைப் பின்பற்றினால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
வீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய 12 பொருட்கள்!!!
அது என்னவெனில், தினமும் இரவில் படுக்கும் முன் ஒருசில வேலைகளை கணவன், மனைவி என இருவரும் சேர்ந்து செய்து வந்தால், உங்கள் வீடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, இப்போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாட இரவில் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!
வீட்டில் வரும் 10 வகையான வாடைகளும்... அதை போக்கும் வழிகளும்...

பாத்திரங்களை கழுவிவிடுங்கள்
இரவில் படுக்கும் முன், உணவு சமைத்த பாத்திரங்கள் மற்றும் உணவு உண்ட தட்டுகள் என அனைத்தையும் கழுவி, பாத்திரம் கழுவும் இடத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்துவிட வேண்டும். இதனால் பாத்திரம் கழுவும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதையும், பூச்சிகள் வருவதையும் தடுக்கலாம்.

அடுப்பை சுத்தம் செய்யவும்
தினமும் இரவில் படுக்கும் முன், அடுப்பில் தண்ணீர் தெளித்து, வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து, பின் ஈரத்துணியால் சுத்தம் செய்தால், அடுப்பில் எண்ணெய் பசை இருப்பதைத் தடுப்பதோடு, அடுப்பும் புதிது போல் மின்னும்.

தரை விரிப்பு
ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தரை விரிப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் வீட்டினுள் தூசிகள் தங்கி, அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

படுக்கையை சுத்தம் செய்யவும்
வீட்டு வேலையெல்லாம் முடிந்துவிட்டது என்று, அப்படியே போய் மெத்தையில் படுக்காமல், நன்கு தட்டிவிட்டு, பின் தூங்க செல்லுங்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

காலணிகள்
காலணிகளை அதற்குரிய இடத்தில் வைப்பதோடு, அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு பின் வையுங்கள்.

கழிவறை
தூங்க செல்லும் முன், கழிவறையில் ஒரு வாளி தண்ணீரை விட்டு, கழிவறையின் ஜன்னல் அறையைத் திறந்து வையுங்கள். இதனால் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications