Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!

* ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில் நீண்ட நாட்களாக ஏதோ ஒரு உணவுப் பொருளை வைத்துள்ளோம என்று அர்த்தம். ஆகவே எந்த பொருளை வைத்தாலும், அந்த பொருளை எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வைத்தால், அது கெட்டுப் போக தொடங்கிவிடும். ஆகவே எந்த பொருளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
* உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் சேமிக்கும் முன், அதனை நன்கு மூட வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜில் எந்த ஒரு நாற்றமும் வராமல் தடுக்கலாம். எப்போதெல்லாம் நல்ல மணமுள்ள உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போதும், மறக்காமல் மூடிப் போட்டு, மூடி விடவும்.
* ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த பொருட்களையும் வைக்க வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை, காய்கறி தொட்டியில் போட வேண்டும். அதேப்போல் முட்டை, பால் பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.
* சமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடா, ஒரு வகையான மேஜிக் பவுடர். ஏனெனில் அது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதேப்போல் இதனை வைத்து ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருக்கும் நீரை வெளியேற்றும் டப்பாவில் போட்டு வைத்தால், ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றங்கள் போய்விடும்.
* தினமும் நம்மால் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது, இதற்காக எப்போதுமே சுத்தம் செய்வதில்லை என்ற அர்த்தமில்லை. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது, சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் ஃப்ரிட்ஜ் பழைய மாடல் என்றால், அது தானாகவே ஐஸ் கட்டிகளை உருக்கிவிடாது. ஆகவே அப்போது நாம் தான் ஐஸ் கட்டிகளை உருக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருப்பதோடு, எந்த நாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும் வேறு ஏதாவது ஐடியா இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications