Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
தேன் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய தேன் நிச்சயம் அனைவரது வீட்டிலும் இருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் போது, சில நாட்களில் அதன் வாசனைக்கு எறும்புகள் வந்துவிடும். இதனால் தேனை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். என்ன தான் தேன் பாட்டிலை பயன்படுத்தியப் பின் சற்று நேரம் அதனை மூடாமல் சாதாரணமாக விட்டாலும், எறும்புகள் அதன வாசனையை கண்டறிந்து, நமக்கு அதிக தொந்தரவையும், வேலையையும் தரும்.
இப்போது திறந்திருக்கும் தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்று உங்களுக்காக மிகவும் எளிதான மற்றும் உறுதியான வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டு தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
1. ஒரு தட்டை எடுத்து, அதில் தண்ணீரை விளிம்பு வரை நிரப்புங்கள், பிறகு தண்ணீரின் நடுவில் தேன் இருக்கும் ஜாடியை வைக்க வேண்டும். எறும்புகளால் தண்ணீரை கடக்க முடியாது, எனவே, எறும்புகளின் படையெடுப்பு இங்கு உடனடியாக தடுக்கப்படும்.
2. தேன், ஜாடியின் ஓரங்களில் சிந்தாதவாறு இருக்க பொறுமையாக கையாள வேண்டும்.
3. ஒரு எறும்பு சாக்பீஸை எடுத்து தேன் இருக்கும் ஜாடியைச் சுற்றிலும் வட்டத்தை வரையவும். இதனால் எறும்புகள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இயற்கையாவவே சாக்கட்டியின் அருகில் எறும்புகள் வருவதில்லை. எனவே இது பாதுகாப்பினை அதிகரித்திடும்.
4. பொதுவாக தேனை பயன்படுத்தாத போது, ஜாடியை மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேனின் முழுமையான பாதுகாப்பானது உறுதியாக இருக்கும். இதனால் தேன் துளிகள் ஜாடியின் ஓரங்களில் இருந்தாலும், எறும்புகள் அதனுள் நுழைவதை தடுக்கலாம்.
குறிப்பு:
* தட்டில் உள்ள தண்ணீர் ஆவியாகி விட்டதா இல்லையா என்பதை அவ்வப்போது கவனித்து வர வேண்டும்.
* ஒருவேளை ஜாடியின் மூடி நிரந்தரமாக தொலைந்து போயிருந்தால், அப்போது மூடி கிடைக்கும் வரை, இந்த தண்ணீர் தட்டில் வைக்கும் முறை சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் சீக்கிரமாகவே வேறு ஒரு மூடியை கண்டறிந்து பதார்த்தத்தை பாதுகாத்தல் நல்லது.



Click it and Unblock the Notifications