Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
தேன் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய தேன் நிச்சயம் அனைவரது வீட்டிலும் இருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் போது, சில நாட்களில் அதன் வாசனைக்கு எறும்புகள் வந்துவிடும். இதனால் தேனை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். என்ன தான் தேன் பாட்டிலை பயன்படுத்தியப் பின் சற்று நேரம் அதனை மூடாமல் சாதாரணமாக விட்டாலும், எறும்புகள் அதன வாசனையை கண்டறிந்து, நமக்கு அதிக தொந்தரவையும், வேலையையும் தரும்.
இப்போது திறந்திருக்கும் தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்று உங்களுக்காக மிகவும் எளிதான மற்றும் உறுதியான வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டு தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
1. ஒரு தட்டை எடுத்து, அதில் தண்ணீரை விளிம்பு வரை நிரப்புங்கள், பிறகு தண்ணீரின் நடுவில் தேன் இருக்கும் ஜாடியை வைக்க வேண்டும். எறும்புகளால் தண்ணீரை கடக்க முடியாது, எனவே, எறும்புகளின் படையெடுப்பு இங்கு உடனடியாக தடுக்கப்படும்.
2. தேன், ஜாடியின் ஓரங்களில் சிந்தாதவாறு இருக்க பொறுமையாக கையாள வேண்டும்.
3. ஒரு எறும்பு சாக்பீஸை எடுத்து தேன் இருக்கும் ஜாடியைச் சுற்றிலும் வட்டத்தை வரையவும். இதனால் எறும்புகள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இயற்கையாவவே சாக்கட்டியின் அருகில் எறும்புகள் வருவதில்லை. எனவே இது பாதுகாப்பினை அதிகரித்திடும்.
4. பொதுவாக தேனை பயன்படுத்தாத போது, ஜாடியை மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேனின் முழுமையான பாதுகாப்பானது உறுதியாக இருக்கும். இதனால் தேன் துளிகள் ஜாடியின் ஓரங்களில் இருந்தாலும், எறும்புகள் அதனுள் நுழைவதை தடுக்கலாம்.
குறிப்பு:
* தட்டில் உள்ள தண்ணீர் ஆவியாகி விட்டதா இல்லையா என்பதை அவ்வப்போது கவனித்து வர வேண்டும்.
* ஒருவேளை ஜாடியின் மூடி நிரந்தரமாக தொலைந்து போயிருந்தால், அப்போது மூடி கிடைக்கும் வரை, இந்த தண்ணீர் தட்டில் வைக்கும் முறை சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் சீக்கிரமாகவே வேறு ஒரு மூடியை கண்டறிந்து பதார்த்தத்தை பாதுகாத்தல் நல்லது.



Click it and Unblock the Notifications











