Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
தேன் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய தேன் நிச்சயம் அனைவரது வீட்டிலும் இருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் போது, சில நாட்களில் அதன் வாசனைக்கு எறும்புகள் வந்துவிடும். இதனால் தேனை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். என்ன தான் தேன் பாட்டிலை பயன்படுத்தியப் பின் சற்று நேரம் அதனை மூடாமல் சாதாரணமாக விட்டாலும், எறும்புகள் அதன வாசனையை கண்டறிந்து, நமக்கு அதிக தொந்தரவையும், வேலையையும் தரும்.
இப்போது திறந்திருக்கும் தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்று உங்களுக்காக மிகவும் எளிதான மற்றும் உறுதியான வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டு தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
1. ஒரு தட்டை எடுத்து, அதில் தண்ணீரை விளிம்பு வரை நிரப்புங்கள், பிறகு தண்ணீரின் நடுவில் தேன் இருக்கும் ஜாடியை வைக்க வேண்டும். எறும்புகளால் தண்ணீரை கடக்க முடியாது, எனவே, எறும்புகளின் படையெடுப்பு இங்கு உடனடியாக தடுக்கப்படும்.
2. தேன், ஜாடியின் ஓரங்களில் சிந்தாதவாறு இருக்க பொறுமையாக கையாள வேண்டும்.
3. ஒரு எறும்பு சாக்பீஸை எடுத்து தேன் இருக்கும் ஜாடியைச் சுற்றிலும் வட்டத்தை வரையவும். இதனால் எறும்புகள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இயற்கையாவவே சாக்கட்டியின் அருகில் எறும்புகள் வருவதில்லை. எனவே இது பாதுகாப்பினை அதிகரித்திடும்.
4. பொதுவாக தேனை பயன்படுத்தாத போது, ஜாடியை மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேனின் முழுமையான பாதுகாப்பானது உறுதியாக இருக்கும். இதனால் தேன் துளிகள் ஜாடியின் ஓரங்களில் இருந்தாலும், எறும்புகள் அதனுள் நுழைவதை தடுக்கலாம்.
குறிப்பு:
* தட்டில் உள்ள தண்ணீர் ஆவியாகி விட்டதா இல்லையா என்பதை அவ்வப்போது கவனித்து வர வேண்டும்.
* ஒருவேளை ஜாடியின் மூடி நிரந்தரமாக தொலைந்து போயிருந்தால், அப்போது மூடி கிடைக்கும் வரை, இந்த தண்ணீர் தட்டில் வைக்கும் முறை சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் சீக்கிரமாகவே வேறு ஒரு மூடியை கண்டறிந்து பதார்த்தத்தை பாதுகாத்தல் நல்லது.