Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கடையில் விற்பது போன்ற மொறுமொறுப்பான, சுவையான சிப்ஸ் வீட்டிலேயே செய்யணுமா? இப்படி பண்ணுங்க...!
மொறுமறுப்பான நொறுக்குத்தீனி என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிப்ஸ்தான். சிப்ஸ் ஒரு தனித்துவமான காரமான சிற்றுண்டியாகும், இது அனைத்து வயதினராலும் மிகவும் விரும்பப்படுகிறது. மொறுமொறுப்பான இந்த சிப்ஸ்கள் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படுகின்றன.
பெரும்பாலும், இந்த சிப்ஸ் அது தயாரிக்கப்படும் முறை காரணமாக அவை ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை. மேலும், நிறுவனங்கள் வேண்டுமென்றே பாக்கெட்டில் குறைவான அளவிலான சிப்ஸை அடைக்கின்றன, இதனால் அதிகளவில் விற்பனை நடக்கும்.

இது ஆரோக்கியத்திற்கும், உங்கள் பணத்திற்கும் நல்லதல்ல. இதனைத் தவிர்க்க வீட்டிலேயே சிப்ஸ் செய்வது நல்லது. ஆனால், வீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை, ஒருவேளை சிப்ஸ் செய்தாலும், அதன் சுவை கடைகளில் கிடைக்கும் சிப்ஸ் போல இருக்காது.
கடைகளில் கிடைப்பது போன்ற மொறுமொறுப்பான மற்றும் சுவையான சிப்ஸ் செய்ய சில எளிய வழிகள் உள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நல்ல சிப்ஸ் செய்யும் ரகசியம்
எந்த வகையான உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அனைத்து வகையான உருளைக்கிழங்குகளையும் சிப்ஸ் செய்ய பயன்படுத்தலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆனால், மொறுமொறுப்பான மற்றும் சுவையான சிப்ஸ் செய்ய, FC5 உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கின் சிறப்பு என்னவென்றால், அதில் மிகக் குறைவான நீர்ச்சத்து இருப்பதால், அது விரைவாக காய்ந்துவிடும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கான விரைவான வழி
உருளைக்கிழங்கை வெட்ட, முதலில் அவற்றின் தோலை உரிக்க வேண்டும். பின்னர் கத்தியின் உதவியுடன் உருளைக்கிழங்கை மெல்லியதாகவோ அல்லது கெட்டியாகவோ வெட்டவும். நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை எப்போதும் பயன்படுத்தவும். பின்னர் சிப்ஸ்களை வெட்டிய பிறகு, உடனடியாக அவற்றை தண்ணீரில் போடவும். இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு சிப்ஸ் கெட்டியாகாமல் மற்றும் கருப்பாக மாறாமல் இருக்கும்.
சிப்ஸை எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?
உருளைக்கிழங்கை தண்ணீரில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. உருளைக்கிழங்கை வெட்டிய பிறகு, குளிர்ந்த நீரில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரின் காரணமாக, உருளைக்கிழங்கு மாவுச்சத்து நிறைய வெளியேறும், மேலும் சிப்ஸும் மிருதுவாக மாறும்.
உருளைக்கிழங்கில் உள்ள சர்க்கரை சமைப்பதற்கு முன்பு அதனை பழுப்பு நிறமாகாமல் தடுக்கிறது. உருளைக்கிழங்கை சுமார் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் மிகவும் நல்லது.
சிப்ஸை வறுக்கும் முன் வேகவைக்க வேண்டுமா?
சிப்ஸை தண்ணீரில் ஊறவைத்த பிறகு வேகவைக்க வேண்டுமா என்றால் அதற்கான பதில் ஆம். இதைச் செய்வதன் மூலம் சிப்ஸ் பர்பெர்க்ட்டானதாக மாறும். ஆனால் சிப்ஸை அதிகம் வேக வைக்க வேண்டியதில்லை. இதற்காக அவற்றை உப்பு நீரில் 8 முதல் 10 நிமிடங்கள் அல்லது அவை மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கு சிப்ஸை வடிகட்டி, முழுவதுமாக உலர்ந்த வரை ஆவியில் வேகவைக்கவும். அதற்குப் பிறகுதான் உருளைக்கிழங்கை எண்ணெயில் 180 வெப்பநிலையில் வறுக்க வேண்டும். சிப்ஸ் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி மசாலா சேர்த்து சுவைக்கலாம்.



Click it and Unblock the Notifications
