கடையில் விற்பது போன்ற மொறுமொறுப்பான, சுவையான சிப்ஸ் வீட்டிலேயே செய்யணுமா? இப்படி பண்ணுங்க...!

மொறுமறுப்பான நொறுக்குத்தீனி என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிப்ஸ்தான். சிப்ஸ் ஒரு தனித்துவமான காரமான சிற்றுண்டியாகும், இது அனைத்து வயதினராலும் மிகவும் விரும்பப்படுகிறது. மொறுமொறுப்பான இந்த சிப்ஸ்கள் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படுகின்றன.

பெரும்பாலும், இந்த சிப்ஸ் அது தயாரிக்கப்படும் முறை காரணமாக அவை ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை. மேலும், நிறுவனங்கள் வேண்டுமென்றே பாக்கெட்டில் குறைவான அளவிலான சிப்ஸை அடைக்கின்றன, இதனால் அதிகளவில் விற்பனை நடக்கும்.

How to Make Crispy Potato Chips at Home in Tamil

இது ஆரோக்கியத்திற்கும், உங்கள் பணத்திற்கும் நல்லதல்ல. இதனைத் தவிர்க்க வீட்டிலேயே சிப்ஸ் செய்வது நல்லது. ஆனால், வீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை, ஒருவேளை சிப்ஸ் செய்தாலும், அதன் சுவை கடைகளில் கிடைக்கும் சிப்ஸ் போல இருக்காது.

கடைகளில் கிடைப்பது போன்ற மொறுமொறுப்பான மற்றும் சுவையான சிப்ஸ் செய்ய சில எளிய வழிகள் உள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நல்ல சிப்ஸ் செய்யும் ரகசியம்

எந்த வகையான உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அனைத்து வகையான உருளைக்கிழங்குகளையும் சிப்ஸ் செய்ய பயன்படுத்தலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆனால், மொறுமொறுப்பான மற்றும் சுவையான சிப்ஸ் செய்ய, FC5 உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கின் சிறப்பு என்னவென்றால், அதில் மிகக் குறைவான நீர்ச்சத்து இருப்பதால், அது விரைவாக காய்ந்துவிடும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கான விரைவான வழி

உருளைக்கிழங்கை வெட்ட, முதலில் அவற்றின் தோலை உரிக்க வேண்டும். பின்னர் கத்தியின் உதவியுடன் உருளைக்கிழங்கை மெல்லியதாகவோ அல்லது கெட்டியாகவோ வெட்டவும். நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை எப்போதும் பயன்படுத்தவும். பின்னர் சிப்ஸ்களை வெட்டிய பிறகு, உடனடியாக அவற்றை தண்ணீரில் போடவும். இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு சிப்ஸ் கெட்டியாகாமல் மற்றும் கருப்பாக மாறாமல் இருக்கும்.

சிப்ஸை எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?

உருளைக்கிழங்கை தண்ணீரில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. உருளைக்கிழங்கை வெட்டிய பிறகு, குளிர்ந்த நீரில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரின் காரணமாக, உருளைக்கிழங்கு மாவுச்சத்து நிறைய வெளியேறும், மேலும் சிப்ஸும் மிருதுவாக மாறும்.

உருளைக்கிழங்கில் உள்ள சர்க்கரை சமைப்பதற்கு முன்பு அதனை பழுப்பு நிறமாகாமல் தடுக்கிறது. உருளைக்கிழங்கை சுமார் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் மிகவும் நல்லது.

சிப்ஸை வறுக்கும் முன் வேகவைக்க வேண்டுமா?

சிப்ஸை தண்ணீரில் ஊறவைத்த பிறகு வேகவைக்க வேண்டுமா என்றால் அதற்கான பதில் ஆம். இதைச் செய்வதன் மூலம் சிப்ஸ் பர்பெர்க்ட்டானதாக மாறும். ஆனால் சிப்ஸை அதிகம் வேக வைக்க வேண்டியதில்லை. இதற்காக அவற்றை உப்பு நீரில் 8 முதல் 10 நிமிடங்கள் அல்லது அவை மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

பின்னர் உருளைக்கிழங்கு சிப்ஸை வடிகட்டி, முழுவதுமாக உலர்ந்த வரை ஆவியில் வேகவைக்கவும். அதற்குப் பிறகுதான் உருளைக்கிழங்கை எண்ணெயில் 180 வெப்பநிலையில் வறுக்க வேண்டும். சிப்ஸ் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி மசாலா சேர்த்து சுவைக்கலாம்.

Story first published: Monday, August 28, 2023, 17:10 [IST]
Desktop Bottom Promotion