மீதமான கறிக்குழம்பு மற்றும் சாம்பாரை இத்தனை நாட்கள்தான் வைத்து சாப்பிடணுமாம்... இல்லனா ஆபத்தாம்...!

வீட்டிலும் சரி, வெளியே சாப்பிட சென்றாலும் சரி மீதமான உணவை சேமிப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். இது உணவு வீணாவதைச் சேமிப்பது மட்டுமல்லாமல், அடுத்த உணவுக்கான பணத்தையும் நேரத்தையும் சேமிக்க உதவும். இப்படி சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாக இருந்தாலும், நீண்ட காலமாக சேமிக்கப்பட்டிருக்கும் மீதமான உணவை சாப்பிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

How Long Can Leftovers Last in the Fridge in Tamil

ஆரோக்கிய பிரச்சினைகளைத் தவிர, அதிக நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியையும் சுவையையும் இழக்கச் செய்யும். மீதமான உணவுகளை அவற்றின் சுவையை இழக்கும் முன் அல்லது உண்பதற்குப் பாதுகாப்பற்றதாக மாறுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம் என்ற கேள்வியை இது நமக்குள் எழுப்புகிறது.

சமைத்த உணவை 2-3 மணி நேரத்திற்குள் குளிரூட்டினால் அடுத்த உணவு 2-4 நாட்கள் கெட்டுப்போகாது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் எதைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள், எப்படிச் சேமித்து வைத்திருக்கிறீர்கள், என்பது உணவின் சேமிப்புத் திறனைப் பாதிக்கிறது.

உணவைச் சரியாகச் சமைத்து, உடனடியாக மூடி, குளிர்ச்சிக்காக வைத்திருந்தால், அதை 24-48 மணிநேரம் சேமித்து வைக்கலாம் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன், சமைத்த காய்கறி அல்லது கறி மாசுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பதிவில் எந்தெந்த மீதமான உணவை எத்தனை நாட்கள் சேமிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

சாதம்

சாதம் நம் உணவு முறையில் தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். வீட்டில் தினமும் சமைக்கும் போது சாதம் மீதமாவது வழக்கமானதுதான். அரிசி காலப்போக்கில் வறண்டு போகும் போது, ​​சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் சூடுபடுத்துவது உதவியாக இருக்கும். அரிசியில் இருக்கும் ஸ்டார்ச் செழித்து வளரும் பாக்டீரியாக்கள் குறைவான ஆபத்தானவை, அதிகபட்சமாக அவற்றை இரண்டு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

ரொட்டி

இந்திய உணவின் மற்றொரு தவிர்க்க முடியாத மற்றோரு முக்கிய உணவு, ரொட்டி/சப்பாத்தி அல்லது புல்காவை 24 மணிநேரத்திற்கு மேல் சேமிக்க முடியாது. அதன் பிறகு, அவை மிகவும் இறுக்கமாகவும் உலர்ந்ததாகவும் இருக்கும். எண்ணெய் மற்றும் நெய்யில் சமைத்த பூரி அல்லது பரோட்டா நீண்ட காலம் நீடிக்கும், ஏனெனில் அவற்றில் எண்ணெய் சதவிகிதம் அதிகம் இருப்பது காரணமாக உலர அதிக நேரம் எடுக்கும். நீங்கள் மென்மையான புல்காவை அடுத்த நாள் சாப்பிட விரும்பினால், சிறிது நெய்யைத் தடவி, 24 மணிநேரத்திற்கு மேல் சேமிக்காமல் இருக்கவும்.

பருப்பு குழம்பு

பருப்பு சரியாக சேமித்து வைக்கப்படாவிட்டால், விரைவில் கெட்டுப்போகும் மற்றும் துர்நாற்றம் வீசும். மீதமுள்ள பருப்பு இருந்தால், அதை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். அளவு அதிகமாக இருந்தால், நீங்கள் உட்கொள்ளும் சரியான பகுதியை எடுத்து மீண்டும் சூடுபடுத்தவும். முழு தொகுதியையும் மீண்டும் மீண்டும் சூடாக்க வேண்டாம், ஏனெனில் இது பாக்டீரியா விரைவில் பெருக்க வழிவகுக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பருப்பை சரியாக சேமித்து வைத்தால் ஐந்து நாட்களுக்கு சேமிக்க முடியும்.

குழம்பு வகைகள்

சமைத்த சப்ஜியை 3 நாட்களுக்கு மேல் விடக்கூடாது. காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்தாலும், காய்கறிகள் 2-வது நாளுக்குப் பிறகு அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் சுவையை இழக்கத் தொடங்கும். சோயா அல்லது பனீர் போன்ற புரதச்சத்து நிறைந்த சப்ஜியை இன்னும் சீக்கிரம் உட்கொள்ள வேண்டும்.

அசைவ குழம்பு வகைகள்

புரோட்டீன் நிறைந்த அசைவ உணவுகள் மற்றும் கறிகளை விரைவில் சாப்பிடுங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நீங்கள் அவற்றை சேமிக்க வேண்டும் என்றால், காற்று புகாத கொள்கலனில் மற்றும் கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இருப்பினும், அதை 1-2 நாட்களுக்குள் சாப்பிடுங்கள், குறிப்பாக முட்டை சார்ந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதையோ அல்லது சேமிப்பதையோ தவிர்க்கவும். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் கூட சமைத்த முட்டை மற்றும் முட்டை கொண்ட உணவுகளை சமைத்த உடனேயே பரிமாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

Story first published: Tuesday, July 30, 2024, 20:11 [IST]
Desktop Bottom Promotion