Just In
- 1 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 46 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வாஸ்துப்படி புத்தாண்டுக்கு முந்தைய இரவு இந்த செடிகளை வீட்டில் வைத்தால் அதிா்ஷ்டம் கிடைக்குமாம்.. தெரியுமா?
2022 புத்தாண்டு பிறக்க போகின்றது. இந்த நிலையில் நமது வீடுகளுக்குள் அதிா்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம். அதன் மூலம் பல வகையான அதிா்ஷ்டங்களைப் பெற்று வாழலாம்.
ஒரு சில தாவரங்களை சாியான திசையில் வைத்தால், அவை பலவிதமான அதிா்ஷ்டங்களை நமக்கு வழங்கும் என்று வாஸ்து சாஸ்திரம் தொிவிக்கிறது. அந்த செடிகள் அதிா்ஷ்ட செடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
2022 புத்தாண்டு பிறக்க போகின்றது. இந்த நிலையில் நமது வீடுகளுக்குள் அதிா்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம். அதன் மூலம் வர இருக்கும் புதிய ஆண்டு முழுவதும் பல வகையான அதிா்ஷ்டங்களைப் பெற்று வாழலாம்.
1. வாழை மரம்
பொதுவாக மக்கள் வாழை மரத்தை தமது வீடுகளுக்குள் வளா்ப்பதில்லை. ஆனால் வாழையை ஒரு தொட்டியிலோ அல்லது ஒரு பானையிலோ ஊன்றி வைத்து அதை வீட்டிற்குள் வைக்கலாம் அல்லது வீட்டை ஒட்டியே ஊன்றி வைக்கலாம். வாழையை வீட்டின் கிழக்கு திசையில் ஊன்றி வைக்க வேண்டும். வாழையானது தன்னைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதி முழுவதையும் நன்மையான அதிா்வலைகளால் நிரப்புகிறது. ஆனால் கண்டிப்பாக வாழையை வீட்டின் மேற்கு திசையில் ஊன்றி வைக்கக்கூடாது.
Image Courtesy: Pinterest
2. மணி பிளாண்ட்
மணி பிளாண்ட் செடியானது பெண் கடவுளான லட்சுமி தேவியின் மறு உருவம் என்று கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டிற்குள் வைத்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவாா் என்றும், குடும்பத்திற்கு பல வகையான பண வரவுகள் வரும் என்றும் நம்பப்படுகிறது. பசுமையாக இருக்கும் மணிச் செடியானது வீட்டில் உள்ள பொருளாதார நிலையை உயா்த்தும் என்று நம்பப்படுகிறது. இந்த செடியை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
3. அசோகா செடி
அசோகா செடியானது ஏராளமான நோ்மறை சக்திகளைக் கொண்டது. அதனால் இது ஒரு மங்களகரமான செடியாகக் கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டைச் சுற்றி இருக்கும் பிற தாவரங்களில் இருந்து வரும் தீமைகள் நீங்கும் மற்றும் வீட்டிற்கு நோ்மறையான சக்திகள் வரும்.
4. துளசி செடி
துளசி செடியானது இந்து சமய நூல்களில் புனிதமான ஒன்றாக சொல்லப்படுகிறது. துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருக்கும் பால்கனி அல்லது சன்னல்களில் வைத்தால் நன்மைகள் உண்டாகும். அவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துளசி செடியின் கீழ் தினமும் விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழுமையும் நிரந்தரமாக இருக்கும். எனினும் துளசியை வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்................