உங்க சமையல் எண்ணெயில் கலப்படம் இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இந்த ஒரு பொருளை வைச்சு தெரிஞ்சிக்கலாம்...!

நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நாம் சாப்பிடும் உணவுகள்தான் நிர்ணயிக்கிறது, எனவே சமையலில் பயன்படுத்தும் பொருட்களை நம்பகமான ஆதாரங்களில் இருந்து உணவை வாங்குவது அவசியம். தற்போது அனைத்துப் பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுவது என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் அதன் மோசமான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

நீங்கள் கடையில் வாங்கும் உணவுப் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்று யோசிக்கிறீர்களா? மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, FSSAI (இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம்) மக்கள் வீட்டில் செய்யக்கூடிய எளிய கலப்பட சோதனைகளை பகிர்ந்துள்ளது. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Food Adulteration Tests Can Perform At Home in Tamil

குங்குமப்பூ

மசாலா பொருட்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்றால் அது குங்குமப்பூதான். எனவே கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூ ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தவிர, பணரீதியாகவும் நஷ்டத்தை ஏற்படுத்தும். குங்குமப்பூ மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் அடிக்கடி இதில் கலப்படம் செய்யப்படுவதில் ஆச்சரியமில்லை. மக்காச்சோளத்தின் உலர்ந்த டெண்டிரில் குங்குமப்பூவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க FSSAI ஒரு டிப்ஸைப் பகிர்ந்துள்ளது.

உங்களுக்கு தேவையானது 70-80 டிகிரி செல்சியஸ் வரை சூடேற்றப்பட்ட ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே. குங்குமப்பூவின் சில இழைகளை தண்ணீரில் போட்டுவிட்டு நடப்பதை கவனிக்கவும். அவை மெதுவாக நிறத்தை வெளியிட்டால், குங்குமப்பூ கலப்படமற்றது என்று அர்த்தம். வெளியீடு விரைவாகவும் தீவிரமாகவும் இருந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது என்று அர்த்தம்.

மிளகு

அதிகம் கலப்படம் செய்யப்படும் மற்றொரு மசாலாப்பொருள் மிளகு. இது பெரும்பாலும் ப்ளாக்பெர்ரி அல்லது பப்பாளி பல விதைகளால் கலப்படம் செய்யப்படுகிறது. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் மிளகு உண்மையானதா என்பதைச் சரிபார்க்க ஒரு எளிய வழி உள்ளது.

ஒரு தட்டையான மேற்பரப்பில் அவற்றை ஒரு சிறிய அளவு பரப்பவும். பின்னர் உங்கள் கட்டைவிரலைப் பயன்படுத்தி மிளகு மீது அழுத்தவும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், அது எளிதில் உடைந்துவிடும். ஏனெனில் உண்மையான மிளகை உங்கள் வெறும் கைகளால் உடைப்பது மிகவும் கடினம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மசாலாப் பொருட்களைத் தவிர, சில காய்கறிகளும் கலப்படம் செய்யப்படலாம். செயற்கை சாயங்களைப் பயன்படுத்தி காய்கறிகளின் வெளிப்புறத் தோற்றம் 'மேம்படுத்தப்பட்டு' நுகர்வோரை ஏமாற்றுவது வழக்கமாகிறது. உதாரணமாக, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரோடமைன் பி, தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு இரசாயன சாயத்துடன் கலப்படம் செய்யப்படலாம்.

இது சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதை நீங்கள் சோதிக்க விரும்பினால், முதலில் ஒரு பருத்தி உருண்டையை தண்ணீரில் அல்லது தாவர எண்ணெயில் நனைக்கவும். பின்னர் அதை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வெளிப்புற மேற்பரப்பில் தேய்க்கவும். அதன்பிறகு, பருத்தித் துணியில் சிவப்பு-வயலட் சாயல் வந்தால், அது ரோடமைன் பி இருப்பதைக் குறிக்கிறது.

தேயிலை

தேயிலை இலைகள் அவற்றின் நிறத்தை மேம்படுத்துவதற்காக கலப்படம் செய்யப்படலாம். உங்கள் இலைகள் கெட்டுப்போன தேயிலை இலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, உங்களுக்கு வடிகட்டி காகிதமும் தண்ணீரும் தேவை. தேயிலை இலைகளை காகிதத்தில் பரப்பி அதன் மீது தண்ணீர் தெளிக்கவும்.

பின்னர் அனைத்து இலைகளும் அகற்றப்படும் வரை ஓடும் நீரின் கீழ் காகிதத்தை கழுவவும். ஒளிக்கு எதிராக இப்போது காகிதத்தைப் பாருங்கள். அதில் கறுப்பு-பழுப்பு நிற கறைகள் தெரிகிறதா என்று பாருங்கள். அந்த கறை இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டதாகும்.

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெயில் ட்ரை-ஆர்த்தோ-கிரெசில்-பாஸ்பேட் என்ற கலவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம், இது விஷம் போன்ற செயல்படக்கூடியது. இந்த குறிப்பிட்ட வகையான கலப்படத்தை நீங்கள் எளிதில் சரிபார்க்கலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் அல்லது கண்ணாடியில் ஒரு சிறிய அளவு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் வெண்ணெய் சேர்க்கவும். கரைசலின் நிறம் மாறினால், அது எண்ணெய் தூய்மையற்றது என்பது உறுதி.

Story first published: Friday, July 26, 2024, 22:30 [IST]
Desktop Bottom Promotion