வீட்டிற்குள் ரோஜா பூங்கொத்து: மனசுக்குள் மத்தாப்பு!

By Mayura Akilan

Flower Vase Decorations
பூக்கள் மனதின் ரம்மியமான பக்கங்களை உணர்த்துபவை. காதல் உணர்வுகளை பூக்கச் செய்பவை ரோஜாக்கள். காதலர் தினத்தன்று வீடுகளில் உள்ள பூ ஜாடிகளில் ரோஜாக்களால் அலங்கரித்தால் மனதில் சந்தோச தருணங்கள் அலையடிக்குமே. வீட்டு உள் அலங்கார நிபுணங்கள் தெரிவிக்கும் அலங்காரங்களை செய்து அசத்துக்களேன்.

சிவப்பு ரோஜாக்கள்

சிவப்பு ரோஜா காதலை உணர்த்தும் உன்னத மலர். அதனை காதலர் தினத்தன்று பரிசளிப்பதும், வீட்டில் அலங்கரிப்பதும் சிறப்பானது. எனவே வீட்டில் முக்கிய இடங்களில் பூ ஜாடிகளில் அழகாக சிவப்பு நிற ரோஜாக்களை வைத்து அலங்கரித்தால் உயிரோட்டமாக இருக்கும். அதனுடன் மஞ்சள், வெள்ளை என எதிர் கலர் உடைய ரோஜாக்களை இணைத்து வைப்பது மனதிற்கு இதம் தரும்.

செந்நிற ரிப்பன்

பூ ஜாடியை சுற்றி செந்நிற ரிப்பனால் அலங்கரித்து அதை கம் வைத்து ஒட்டினால் கூடுதல் அழகு கிடைக்கும். அதன் நடுவில் வெல்வெட் துணியில் இதய வடிவ அலங்காரம் செய்திருப்பது கூடுதல் ரொமான்ஸ்.

பூ ஜாடி வைக்கும் மேஜையை கலர் புல் கற்கள் பதித்த துணியை வைத்து அதன் மீது ரோஜாப்பூக்கள் அடங்கிய பூ ஜாடியை வைக்கலாம். சின்ன சின்ன இதயங்கள் வரைந்திருப்பது ரம்மியத்தை அதிகரிக்கும்.

சின்னதாய் ஒரு கடிதம்

இந்த அலங்காரங்கள் முடிந்த பின்னர் சின்னதாய் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் வகையில் ஒரு கவிதை எழுதி நேசத்திற்குரியவர்களின் கண்களில் படுமாறு வைக்கலாம். அப்புறம் என்ன காதலர் தினம் உங்களுடையதுதான்.

Story first published: Tuesday, February 14, 2012, 14:52 [IST]
Desktop Bottom Promotion